என் மலர்
விளையாட்டு
- பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை.
- நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேப்டன் உடனான சண்டை மற்றும் பாபர் அசாமின் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா மற்றும் மைக் ஹெசன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் சல்மான் அகா ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டிலை கீழே வீசுவது போன்ற காட்சிகள் இருந்தன.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வீடியோவை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சல்மான் அகா அவுட் ஆன விரக்தியில் தான் பாட்டிலை வீசினார். எங்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே போட்டியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.
பாபர் அசாம் குறித்து கூறியதாவது:-
பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை என்றும், அவர் இன்னிங்ஸை முடித்துக் கொடுக்கும் சிறந்த வீரர் அல்ல என்றும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
- 2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர்.
- ரொனால்டோ குறித்த எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை.
சென்னை:
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டிஷ் நடிகையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியுமான ஜெம்மா அட்கின்சன், ரொனால்டோவை பற்றி மோசமாக பேச தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ரொனால்டோ குறித்து எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை" என்றார்.
தற்போது ஜெம்மா அட்கின்சன், பிரபல நடனக் கலைஞர் கோர்கா மார்க்வெஸ் என்பவரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மியா மற்றும் தியாகோ என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
- தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.
இந்திய அணியின் போட்டிகளை பார்க்கும் போது அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.
- தொடக்க ஆட்டத்தில் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அடிலெய்டில் இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலிய அணி கேப்டன் சோபி மோலினக்ஸ் கடந்த ஆட்டத்தில் தொடக்க வீராங்கனைகள் ஜார்ஜியா வோல் (88 ரன்). பெத் மூனி (46 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 9 விக்கெட்டுக்கு 144 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.
கடைசி 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பாதகத்தை ஏற்படுத்தியது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் சிறப்பாக செயல்பட்டனர். மற்ற பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்கும் சோபி மோலினக்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய பேட்டர்கள் நிலைத்து நின்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.
தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தங்களது முழுப்பலத்தையும் வெளிக்காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
- இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது.
லாகூர்:
புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு நடந்த 4 ஆட்டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தை கடுமையாக சாடினார்.
'ஆஸ்திரேலியா சென்ற நாங்கள் தங்குவதற்கு ஓட்டலுக்கு முன்பணம் கட்டாததால் சாலையில் சில மணி நேரம் தவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தரப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது. பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டியது இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்கும் நிலை ஏற்பட்டது. பிறகு எப்படி போட்டியில் முழு கவனம் செலுத்த முடியும்' என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் பாகிஸ்கான் ஹாக்கி சம்மேளன நிர்வாகக்கை முழுமையாக கலைக்க வேண்டும் என்று வலிறுத்திய அவர் பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் புகழுக்கு களம் ஏற்படுத்தியதாக கேப்டன் ஷகில் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரும், பிரதமருமான ஷபாஸ் ஷெரீப்புக்கு அனுப்பினார்.
இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார். டைரக்டர் ஜெனரலாக முஸ்ரத்துல்லா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் கேப்டன் ஷகீல் பட் மீதான 2 ஆண்டு தடையை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று இடைக்கால தலைவர் முகைதீன் அகமது வானி குறிப்பிட்டுள்ளார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- அரையிறுதிச் சுற்றில் செக் குடியரசு வீரர் மென்சிக் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்தர் பில்ஸ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசை சந்திக்கிறார்.
- இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
- இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இந்தப் போட்டி மைதானத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
இதுதொடர்பாக, ஜியோஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் இந்தப் போட்டியை 16.3 கோடி பேர் நேரலையில் கண்டு ரசித்துள்ளனர். இது ஐசிசி டி20 வரலாற்றில் ஒரு போட்டிக்குக் கிடைத்த அதிகபட்ச பார்வையாளர்கள் ஆகும்.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்தப் போட்டி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை கோகோ காப் 7-6 (15-13) என்ற செட் கணக்கில் வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை உக்ரைன் வீராங்கனை 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்காவின் கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.
- இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள்வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன.
குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து , பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியா அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கையில் தொடர்ந்து ஆடி வருவது அந்த அணிக்கு சாதகமாக சூழலாகும். அதே நேரத்தில் நியூசிலாந்து அணி எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக விளையாடக் கூடியது.
டி20 போட்டிகளில் இரு அணிகளும் 49 போட்டியில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 23-ல், பாகிஸ்தான் 24-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.
இரு அணிகளும் இந்தத் தொடரில் ஒரு போட்டியில் தோற்றன. சூப்பர் 8 சுற்றில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய ஓமன் அணி 16.2 ஓவரில் 104 ரன்களுக்கு சுருண்டது.
- ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பல்லேகலே:
டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஓமன் அணி 16.4 ஓவரில் 104 ரன்களுக்கு சுருண்டது. வாசிம் அலி 32 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டும், மேக்ஸ்வெல், பார்ட்லெட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 33 பந்தில் 64 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.






