search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Amir"

    • நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
    • இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் தங்களது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் தங்களது அணி வீரர்களை எடுப்பதில் மும்முரமாக உள்ளனர். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முகமது அமீர், மற்றும் இமாத் வாசிம் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த வீரர்கள்:-

    பாபர் அசாம் (கேப்டன்) அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், முகமது இர்பான் நியாசி, நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரி, ஷஹீன் அஃப்ரி , உஸ்மான் கான், ஜமான் கான்.

    • 2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்.
    • அப்போது ரமீஸ் ராஜா வர்ணனையாளராக இருந்து அவர்களை அடையாளப்படுத்தினார்.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது ஆமிர். இவர் 2010-ல் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். அதன்பின் தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அணியில் இணைந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் 2010 போட்டியின்போது வர்ணனையாளராக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா, முகமது ஆமிருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    முகமது ஆமிர் விவகாரத்தில் என்னுடைய பார்வை மிகவும் நேரடியானது. கிரிக்கெட்டை சரி செய்வதாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சமூகமும், ரசிகர்களும் புரிந்து கொள்வது முக்கியம் என நான் நம்புகிறேன்.

    முகமது அமிர் மேட்ச் பிக்சில் ஈடுபட்டபோது லார்ட்ஸ் மைதானத்தில் நான் வர்ணணை செய்து கொண்டிருந்னே். நான் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டியதால் வெறுப்பு என்னை நோக்கி வீசப்படும் என உணர்ந்தேன். மீடியாக்களால் நான் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் மறக்க முடியாது.

    உலகின் எங்கெல்லாம் இது போன்று மேட்ச் பிக்கிங் ஈடுபட்ட வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கலாம். ஆனால், என்னுடைய அகராதியில் மன்னிப்பு என்பது கிடையாது. கடவுள் மறுத்தால் கூட என்னுடைய மகன் இதுபோன்ற செயல் செய்திருந்தால் நான் அவனை நிராகரிப்பேன்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
    • பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.

    2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.

    அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்று பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.

    இந்த வெற்றியை கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று 4-1 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு இன்னிங்சிலும் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. நன்றாக முடிந்தது.

    என அமீர் கூறினார்.

    • சதம் விளாசிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
    • வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் கேப்டன் டுப்ளசிஸ் மற்றும் கோலியின் பங்கு அதிகம். 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கோலி மிரட்டினார். இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.

    இந்நிலையில் சதம் விளாசிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அமீர் கூறியதாவது, என்ன ஒரு இன்னிங்ஸ், ஒரே ஒரு ரியல் கிங் என பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



    உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.
    பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது அமிர், தற்போது உள்ளூர் போட்டிக்கு திரும்பியுள்ளார். #MohammadAmir
    பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். கடந்த 2015-ம் ஆண்டு ஐந்தாண்டு தடைமுடிந்து மீண்டும் அணியில் இணைந்தார். அதில் இருந்து பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக பந்து வீசினார்.

    2015-க்குப் பிறகு 73 போட்டிகளில் விளையாடியுள்ளார். 56 டெஸ்ட் விக்கெட்டுக்களும், 33 ஒருநாள் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 29 டி20 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். தற்போது அவரது பந்து வீச்சில் தொய்வு ஏற்பட்டது.



    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். கடைசி ஐந்து ஒருநாள் போட்டியில் விக்கெட்டுக்கள் ஏதும் வீழ்த்தவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    சர்வதேச போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே சுய் சவுதர்ன் கியாஸ் கார்பரேசன் (SSGC) அணிக்காக விளைாடினார். தற்போது இந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுடன் 2 போட்டி டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இப்போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில் முகமது அமீர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. மேலும் கடந்த 10 ஒருநாள் போட்டியில் முகமது அமீர் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

    அவர் பார்மில் இல்லாததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அணியில் சேசர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிர் அம்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #PAKvAUS #MohammadAmir
    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், சதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. #AsiaCup2018 #MohammadAmir
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. ‘ஏ’ பிரிவில் இந்தியா முதல் இடத்தையும், பாகிஸ்தான் 2-வது இடத்தையும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தையும், வங்காள தேசம் 2-வது இடத்தையும் பிடித்தன.

    இன்று சூப்பர் 4 சுற்று தொடங்கின. முதல் நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அபு தாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.



    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமது அமிர் அணியில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அறிமுகமாகியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் சதாப் கானுக்குப் பதிலாக நவாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பஹீம் அஷ்ரஃபிற்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார். #MohammadAmir
    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு தண்டனை காலம் முடிவடைந்து மீண்டும் அணிக்கு திரும்பும்போது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவரை மனதார வரவேற்றார். முகமது ஆமிர் பல இடங்களில் விராட் கோலியின் பேட்டிங் திறமையை பாராட்டியுள்ளார். அதேபோல் விராட் கோலியும் ஆமிர் பந்து வீச்சை பாராட்டியுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸமித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட விராட் கோலி சிறந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஈஎஸ்பின்கிரிக்இன்போ-விற்கு ரேபிட்-பையர் பேட்டியளித்தார். அப்போது தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதுதான் கடினமானது என்று தெரிவித்துள்ளார்.



    அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முகமது ஆமிர் அளித்த பதில்களும்,

    கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற போட்டியில் விளையாடும் வீரர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?

    செர்ஜியோ அக்யூரோ

    கிரிக்கெட்டைத் தவிர மற்ற போட்டியில் சாம்பியன் டிராபியை வெல்ல நினைத்தால், அந்த விளையாட்டு?

    கால்பந்து

    உங்கள் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டால், யாரை உங்கள் கேரக்டரில் நடிக்க வைப்பீர்கள்?

    ஷாகித் கபூர்

    ஒரு சாதனையை நீங்கள் விரும்புகீர்கள் என்றால்?

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் மூன்று ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்

    நீங்கள் எப்படி நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள்?

    ஹோட்டலில் படம் பார்த்து

    எந்த கிரிக்கெட் வீரரின் ஹேர்ஸ்டைல் பிடிக்கும்?

    என்னுடைய ஹேர்ஸ்டைல் எனக்கு பிடிக்கும். அதன்பின் ஷாகித் அப்ரிடி ஹேர்ஸ்டைல்

    நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசியிருக்கனும் என்றால், அது யார்?

    பிரையன் லாரா. ஏனென்றால் அவரது காலக்கட்டத்தில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம்.

    நீங்கள் மீண்டும் பிறந்தீர்கள் என்றால், யாராக ஆசைப்படுவீர்கள்?

    முகமது ஆமிர்

    நீங்கள் சமீபத்தில் பார்த்த பாலிவுட் படம்?

    பத்மாவத்

    உங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் மைதானம்?

    இங்கிலாந்து ஓவல். அதில் எராளமான நினைவுகள் உள்ளன.

    கிரிக்கெட்டில் ஒரு விதிமுறையை மாற்ற விரும்பினால்?

    நோ-பாலில் ப்ரீ ஹிட்

    நீங்கள் உங்களுடன் விளையாடும் சக வீரர் ஒருவருடன் குறும்பு செய்ய விரும்பினால்?

    அது லென்டில் சிம்மன்ஸ். கராச்சி அணியில் விளையாடும்போது மிகவும் வேடிக்கையாக நடந்து கொள்வார்.
    ×