search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது.

    ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஆர்சிபி-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியிருந்தது.

    ஆர்சிபி-யை வீழ்த்தியன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடம் வகிக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவிற்கு அடுத்த இடமான 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே (ரன்ரேட்= +0.529), லக்னோ (ரன்ரேட்= +0.123), குஜராத் (ரன்ரேட்= -1.055) அணிகள் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.

    மும்பை 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.133) 7-வது இடத்தையும், டெல்லி 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.477) 8-வது இடத்தையும், பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மூலம் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றி மூலம் கடைசி இடததை பிடித்துள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் மூன்று முறை 220 ரன்களை தாண்டியுள்ளது.
    • இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்று முறை 220 ரன்களை தாண்டியுள்ளது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒரே சீசனில் அதிக முறை 220 ரன்களை தாண்டிய அணிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. தற்போது கொல்கத்தா அணி அதில் இணைந்துள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 223 ரன்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    டெல்லிக்கு எதிராக 272 ரன்கள் குவித்திருந்தது. இதில் டெல்லி அணி 166 ரன்னில் சுருண்டு தோல்வியை தழுவியது.

    இதே சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டெல்லிக்கு எதிராக 266 ரன்களும், ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்களும், மும்பைக்கு எதிராக 277 ரன்களும் குவித்துள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது.

    கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை 220 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் குவித்துள்ளது.

    • 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன்.
    • உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீரரை எதிர்கொள்ள இருக்கிறார்.

    பிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் தலா 8 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 5 பேர் கலந்து கொண்டனர்.

    ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர் உலக சாம்பியனுடன் மோதுவார்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 14-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த 17 வயதான கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த தொடரில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். கடைசி சுற்றில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார்.

    கறுப்பு நிற காய்களுடன் குகேஷ் விளையாடினார். 71-வது காய் நகர்த்தலுக்கு பிறகு போட்டி 'டிரா'வில் முடிந்தது. அவருக்கு அடுத்த நிலையில் இருந்த பேபியானோ காருனா (அமெரிக்கா)- இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) ஆகியோர் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.

    இதனால் குகேஷ் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் மொத்தமுள்ள 14 சுற்றுகளில் குகேஷ் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 8 ஆட்டங்களில் 'டிரா' செய்தார். ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வியை தழுவினார்.

    கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற புதிய வரலாற்றை குகேஷ் படைத்தார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் குகேஷ் பெற்றார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று இருந்தார்.

    கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்காக சீனாவை சேர்ந்த டிங்லிரனுடன் மோதுகிறார்.

    உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாட உள்ள இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு கேரி காஸ்பரோயு (ரஷியா) 22-வது வயதில் உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதை குகேஷ் முறியடித்து உள்ளார்.

    டிங்லிரன்-குகேஷ் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டிக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் போட்டி நடைபெறலாம் என்று தெரிகிறது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 14-வது சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி பிரான்சை சேர்ந்த பிரவுசியாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.

    ஹிகாரு நகமுரா 8.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இயன் நெபோம்னியாச்சி 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், பேபியானோ 8.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

    பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், விதித் குஜராத்தி 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்தனர். பிரவுசியா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அப்சோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.

    பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி கடைசி சுற்றில் ரஷிய வீராங்கனை கத்ரினா லாங்கோவை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பியும் கடைசி சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஹம்பி 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், வைஷாலி 7.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர். சீன வீராங்கனை டான்ஜோங்கி 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கு மோதுகிறார்.

    • தெவாட்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.
    • பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது போட்டியில் பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர்.

    இந்த ஜோடி முறையே 20 மற்றும் 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து வந்த ரோசோ, ஜிதேஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன் முறையே 9, 13 மற்றும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை குவித்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளையும், மோகித் சர்மா, நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சகா களமிறங்கினர். சகா 13 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து சுப்மன் கில்- சுதர்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த மில்லர் 4 ரன்னிலும் மந்தமாக விளையாடிய சுதர்சன் 34 பந்துகளில் 31 ரன்களில் வெளியேறினார்.

    இந்த நிலையில் ஷாருக்கான் - தெவாட்டியா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது.
    • நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் - சைம் அயூப் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். சைம் அயூப் 32 ரன்களிலும் பாபர் அசாம் 37 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனையடுத்து உஸ்மான் கான் 5 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 22 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த இர்ஃபான் கான் - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷதாப் கான் 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோதி 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

    • இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் சாம் கர்ரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர்.

    இந்த ஜோடி முறையே 20 மற்றும் 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து வந்த ரோசோ, ஜிதேஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன் முறையே 9, 13 மற்றும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை குவித்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளையும், மோகித் சர்மா, நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதர் ஜோடி அரைசதம் அடித்து அசத்தியது.
    • சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

    இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 3 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    போட்டி முடிவில் கொல்கத்தா 6 அணி விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 18 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்த ஜோடி அரைசதம் அடித்து அசத்திய நிலையில், ஜாக்ஸ் 55 ரன்களுக்கும், பட்டிதர் 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்களையும், லோம்ரோர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், பெங்களூரு அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

    அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவருடன் விளையாடிய கர்ண் ஷர்மா கடைசி வரை போராடினார். இவர் 7 பந்துகளில் 20 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளையும், சுனில் நரைன், ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி, ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • பில் சால்ட் அதிரடியாக ஆடி 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • யாஷ் தயால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

    இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 3 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    போட்டி முடிவில் கொல்கத்தா 6 அணி விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி நான்கு போட்டிளில் வெற்றி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    பெங்களூரு அணி ஏழு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மற்றும் ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 5வது வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன் குவித்தது.

    டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), ஷாபாஸ் அகமது 29 பந்தில் 59 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகேஷ்குமார், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஐதராபாத் அணியின் தொடக்க வீரரான டிரெவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி பவர் பிளேயில் 125 ரன் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவரில் 199 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேசர் 18 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அபிஷேக் போரல் 22 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    தமிழக வீரர் டி.நடராஜன் 4 விக்கெட்டும். மார்கண்டே, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.

    டெல்லி அணி 5-வது தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், முதலில் நாங்கள் பந்து வீசும்போது பனி இருக்கும் என நினைத்தோம். ஆனால் பனித்துளி ஏற்படவில்லை. ஐதராபாத்தை 220 முதல் 230 ரன்களுக்கு கட்டுப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். முதல் 6 ஓவர், அதாவது பவர்பிளே தான் 2 அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஆட்டத்தை மாற்றிவிட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம். ஜேக் பிரேசர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் எங்களை மேம்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.

    • 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடந்தது

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரவுசியாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 63-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    பிரவுசியாவிடம் ஏற்க னவே தோற்று இருந்தார். இதற்கு குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி மூலம் அவர் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இந்த சுற்றில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஏற்பட்ட 3-வது தோல்வியாகும்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பை ஜான் வீரர் நிஜாத் அப்சோ வாவிடம் டிரா செய்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா)- ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) மோதி னார்கள். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா , பேபி யானோ ஆகிய 3 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளி களுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5. 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா (4.5 புள்ளி) 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் ( 3.5 ) கடைசி இடத்திலும் உள்ளனர்.

    இன்று கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது. குகேஷ் இந்த ரவுண்டில் ஹிகாரு நகமுராவுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள் .

    பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சீனாவை சேர்ந்த டிங்ஜி லீயை 13-வது சுற்றில் தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஹம்பி உக்ரைன் வீராங்கணை அனாவுடன் டிரா செய்தார்.

    வைஷாலி, ஹம்பி ஆகியோர் தலா 6.5 புள்ளி களுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

    ×