என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • கவர் ஸ்கிரீனில் 32MP செல்ஃபி கேமரா, மெயின் ஸ்கிரீனில் 20MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • புதிய ரேசர் ஃபோல்டு மாடலில் AI சார்ந்த அம்சங்களும் உள்ளது.

    நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES) 2026 இல் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டது. இது மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது, இது இரண்டாவது மடிக்கக்கூடிய மாடலாக ரேசர் ஃபிளிப் மாடலுடன் இணைகிறது.

    மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு மாடலில் 8.1 இன்ச் உள்புற ஸ்கிரீன் மற்றும் 6.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மோட்டோ பென் அல்ட்ரா ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் AI அம்சங்களும் உள்ளன.

    மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு அம்சங்கள்:

    மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பான்டோன் பிளாக்னெட் புளூ மற்றும் பான்டோன் லில்லி ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும். வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது வளைந்த விளிம்புகள், ஹிஞ்ச் (கீல்) மற்றும் மோட்டோரோலாவின் தற்போதைய ஸ்மார்ட்போன் வடிவமைப்புகளை நெருக்கமாக ஒத்த பின்புற கேமரா பம்ப் கொண்டுள்ளது.

    நிறுவனத்தின் கூற்றுப்படி, மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 8.1 இன்ச் LTPO உள்புற டிஸ்ப்ளே, 6.6 இன்ச் வெளிப்புற ஸ்கிரீனுடன் வருகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP சோனி பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது.

    கவர் ஸ்கிரீனில் 32MP செல்ஃபி கேமரா, மெயின் ஸ்கிரீனில் 20MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேசர் ஃபோல்டு மாடலில் AI சார்ந்த அம்சங்களும் உள்ளது. மோட்டோரோலா, ரேசர் ஃபோல்டு ஸ்டைலஸ் உள்ளீட்டிற்காக மோட்டோ பென் அல்ட்ரா சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு மாடலின் பேட்டரி, சிப்செட் மற்றும் பரிமாணங்கள் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிடவில்லை. அதன் விலை மற்றும் விற்பனை விவரங்களும் ரகசியமாகவே உள்ளது.

    • ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. மேலும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
    • மிகப்பெரிய பேட்டரியுடன் கூட, இதன் எடை வெறும் 216 கிராம் மற்றும் அளவு 8 மில்லிமீட்டருக்கும் குறைவாக உள்ளது.

    ஹானர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி, சீன சந்தையில் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் 1.5K 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 8500 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸருடன் வெளியாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம், ஆறு வருட வாரண்டி கொண்ட மிகப்பெரிய, 10,080mAh நான்காம் தலைமுறை சிலிகான்-கார்பன் பேட்டரி ஆகும். மேலும் ஹானர் நிறுவனத்தின் சொந்த ஹானர் வின் சீரிஸ் மாடல்களை தொடர்ந்து 10,000mAh பேட்டரி பிரிவில் நுழையும் இரண்டாவது ஸ்மார்ட்போன் பேட்டரி இதுவாகும்.

    மிகப்பெரிய பேட்டரியுடன் கூட, இதன் எடை வெறும் 216 கிராம் மற்றும் அளவு 8 மில்லிமீட்டருக்கும் குறைவாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. மேலும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் தனித்துவமான பவர் சிக்னல் ஐலேண்ட் வடிவமைப்பு, சுயமாக உருவாக்கப்பட்ட RF மேம்பாட்டு சிப் C1+ மற்றும் புதுமையான இணையான இரட்டை-ரெயில் ஆண்டெனா வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

     

    ஹானர் பவர் 2 அம்சங்கள்:

    6.79-இன்ச் (2640×1200 பிக்சல்கள்) 1.5K AMOLED 120Hz டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 எலைட் 4nm பிராசஸர்

    மாலி-G720 MCU GPU

    12GB LPDDR5X ரேம்

    256GB / 512GB UFS 4.1 மெமரி

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த மேஜிக் ஓஎஸ் 10.0

    டூயல் சிம் ஸலாட்

    50MP கேமரா, OIS

    5MP அல்ட்ரா-வைடு கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    இன்ஃப்ராரெட் சென்சார்

    யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP69K + IP69 + IP68 + IP66)

    5G SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11ax (2.4GHz/5GHz), ப்ளூடூத் 6.0

    10,080mAh பேட்டரி

    80W சூப்பர்சார்ஜ், 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்

    ஹானர் பவர்2 ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ஆரஞ்சு, ஸ்னோ ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. சீன சந்தையில் வருகிற 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஹானர் பவர்2 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.34,840 என்றும் 12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மாடல் ரூ. 38,710-க்கும் கிடைக்கும்.

    • "மின்னணு தோல்" தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.
    • ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.

    மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.

    Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை உடனுக்குடன் ரோபோக்கள் கண்டறிந்து, தற்காத்துக் கொள்ளும் திறனை பெறுகிறது.

    "மின்னணு தோல்" தொழில்நுட்பம் உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே மென்மையான உணர்வுகளை உணரக்கூடிய "மின்னணு தோல்" (Electronic Skin அல்லது E-Skin) தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.

    மின்னணு தோல் (E-Skin) என்றால் என்ன என்று பார்க்கலாம்..

    இது மிக மெல்லிய, நெகிழ்வான ஒரு படலம். இதில் ஆயிரக்கணக்கான நுண்ணிய சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். மனித உடலில் உள்ள நரம்புகள் எப்படி மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறதோ, அதேபோல இந்த சென்சார்கள் தொடுதல், அழுத்தம் மற்றும் வெப்பநிலையை ரோபோவின் கணினிக்கு அனுப்பும்.

    ஒரு ரோபோ முட்டையை உடைக்காமல் தூக்குவதற்கும், அதே சமயம் ஒரு கனமான இரும்புத் தூணைத் தூக்குவதற்கும் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த உணர்வுதான் தீர்மானிக்கும்.

    அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.

    முதியவர்கள் அல்லது நோயாளிகளைப் பராமரிக்கும் ரோபோக்கள், மனிதர்களைக் காயப்படுத்தாமல் மென்மையாகக் கையாள இந்தத் தொழில்நுட்பம் அவசியம்.

    செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொடு உணர்வு வெறுமனே தொடுதலை உணர்வது மட்டும் போதாது, அது என்ன பொருள் என்பதைப் புரிந்துகொள்ள AI பயன்படுத்தப்படுகிறது.

    உதாரணமாக, ஒரு ரோபோ கண்ணை மூடிக்கொண்டு ஒரு பையைத் தொட்டாலும், அதன் மென்மை மற்றும் வடிவத்தை வைத்து அது "ஆப்பிள்" அல்லது "டென்னிஸ் பந்து" என்பதைக் கண்டறியும் திறன் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

    சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.

    சில ஆய்வுகளில், மனித நரம்புகளை விட வேகமாகச் செயல்படும் "செயற்கை நரம்பு மண்டலங்கள்" உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தொழில்நுட்பம் முழுமையடையும் போது, ரோபோக்கள் வெறும் இயந்திரங்களாக இல்லாமல், மனிதர்களுக்கு இன்னும் நெருக்கமான, பாதுகாப்பான உதவியாளர்களாக மாறும்.

    • இந்த லேப்டாப் A18 Pro சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
    • குறைந்த விலை மேக்புக் மாடல் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் பட்ஜெட் பிரிவில் லேப்டாப் அறிமுகம் செய்ய இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. மலிவு விலை லேப்டாப் சந்தையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட ஆப்பிள் நிறுவனம் ஒரு முதன்மையான மேக்புக்கை அறிமுகப்படுத்துவதாக தொடர்ச்சியாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் மலிவு விலை லேப்டாப் மாடல் இறுதியாக 2026 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும் என்று ஒரு சந்தை ஆராய்ச்சி நிறுவனம் பகிர்ந்து கொண்ட சமீபத்திய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களைப் போலவே 12.9 இன்ச் டிஸ்ப்ளேவையும், மேக்புக் ஏர் மாடலுக்கு கீழே ஸ்லாட்டையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்தை ஆராய்ச்சி நிறுவனமான TrendForce பகிர்ந்து கொண்ட சமீபத்திய தகவல்களின்படி , ஆப்பிள் 12.9 இன்ச் மேக்புக்கை 2026 ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தும். இது என்ட்ரி-லெவலில் தொடங்கி மிட் ரேஞ்ச் அளவிலான லேப்டாப் பிரிவை இலக்காகக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாடலின் உற்பத்தி 2025 ஆம் ஆண்டின் 3வது தொடங்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது, மேலும் ஆண்டு இறுதிக்குள் முழு அசெம்பிளி தொடங்கும் என்று கூறப்பட்டது.

    முந்தைய தகவல்களின்படி, இந்த மேக்புக் மாடல் 12.9 இன்ச் ஸ்கிரீனை கொண்டிருக்கலாம், இது ஆப்பிளின் வரிசையில் மிகச்சிறிய ஸ்கிரீன் கொண்ட மேக்புக் ஆக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.

    இந்த லேப்டாப் A18 Pro சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சிலிகான் சிப்பில் M1 மேக்புக் ஏர்-ஐ போன்ற ஹெக்ஸா-கோர் CPU, ஹெக்ஸா-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை உள்ளன.

    குறைந்த விலை மேக்புக் மாடல் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தன்டர்போல்ட் போர்ட் போன்ற பல தரப்படுத்தப்பட்ட ஆப்பிள் அம்சங்களையும் கொண்டிருக்காமல் இருக்கலாம். அதற்கு பதிலாக, இது எளிய யுஎஸ்பி டைப் சி போர்ட்களைக் கொண்டிருக்கலாம்.

    மேக்புக் ஏர் மற்றும் ப்ரோ மாடல்களைப் போலவே, குறைந்த விலை மேக்புக் புளூ, சில்வர், ரோஸ் கோல்டு மற்றும் எல்லோ உள்ளிட்ட பல பிரகாசமான வண்ணங்களில் வழங்கப்படலாம். அமெரிக்காவில் இதன் விலை $699 (தோராயமாக ரூ. 63,000) முதல் $799 (தோராயமாக ரூ. 72,000) வரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.39,999 ஆகும்.
    • கடந்த ஜனவரி 2025 இல் வெளியான ரியல்மி 14 ப்ரோ பிளஸ் விலை ரூ.29,999 இல் தொடங்கியது.

    ரியல்மி நிறுவனம் வருகிற 6ஆம் தேதி இந்திய சந்தையில் ரியல்மி 16 ப்ரோ சீரிசை வெளியிட உள்ளது. அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, புதிய போன்களின் விலை குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. புதிய சீரிசில் இரண்டு மாடல்கள் இருக்கும், அதாவது ரியல்மி 16 ப்ரோ 5ஜி, ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி. இவை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

    விலையை பொருத்தவரை ரியல்மி 16 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.31,999 என தொடங்கும். இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ.33,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,999 என்றும் நிர்ணயிக்கப்படுகிறது.

    ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.39,999 ஆகும். டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,999 ஆகும். டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,999 ஆகும்.

    ஏற்கனவே விற்பனையில் உள்ள ரியல்மி 15 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.31,999 இல் தொடங்கி, அதிகபட்சமாக 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.38,999 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சீரிசில் ப்ரோ பிளஸ் மாடல் எதுவும் இல்லை. அதற்கு முன்பாக கடந்த ஜனவரி 2025 இல் வெளியான ரியல்மி 14 ப்ரோ பிளஸ் விலை ரூ.29,999 இல் தொடங்கியது.

    காலப்போக்கில், ப்ரோ சீரிசின் தொடக்க விலை மாறாமல் உள்ளது, இருப்பினும் டாப் வேரியண்ட்களின் விலை அதிகரித்துள்ளது. இடையில் தற்போது மீண்டும், ப்ரோ பிளஸ் வேரியண்ட் வந்தவுடன், டாப் மாடல் விலை தற்போது ரூ.45,000-ஐ நெருங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 7,000mAh பேட்டரி மற்றும் 200MP பிரைமரி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும். ரியல்மி 16 ப்ரோ 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.

    இந்த விலைகளில், ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஒன்பிளஸ் நார்டு 5 , iQOO நியோ 10 மற்றும் ஓப்போ F31 ப்ரோ பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும்.

    • ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
    • ‘வைபை நெட்வொர்க்’ மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது.

    இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் 'வைபை' அழைப்பு எனப்படும் 'வாய்ஸ் ஓவர் வைபை' சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.

    இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும்.

    'வைபை நெட்வொர்க்' மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான 'மொபைல் சிக்னல்' உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.

    வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் 'வைபை காலிங்' என்பதை மட்டும் 'செட்டிங்ஸ்' அமைப்பில் இயக்க வேண்டும்.

    இந்த தகவல்களை தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7 ஓஎஸ் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வரும் 2026 ஜனவரி 6ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி 512 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.43,999 விலையில் அறிமுகமாக இருக்கிறது. மேலும் இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.35,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட், 6.8 இன்ச் ஃபுல் ஹெச்டி 2800x1280 பிக்சல், AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

     

    இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    புதிய ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.

    • மோட்டோரோலா சிக்னேச்சர் முன்பு கீக்பெஞ்சில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
    • இது அட்ரினோ 829 GPU உடன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படலாம்.

    மோட்டோரோலா சிக்னேச்சர் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. புதிய சாதனத்தின் வெளியீட்டு தேதியை நிறுவனம் அறிவித்து, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளியிட்டது. பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும் இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் பிளிப்கார்ட் மைக்ரோசைட் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ஃபிளாக்ஷிப்-கிரேடு செயல்திறனுடன் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட மேம்பட்ட கேமரா வன்பொருளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிரபல பென்ச்மார்க்கிங் தளத்திலும் தோன்றியது.

    மோட்டோரோலா சிக்னேச்சர் ஜனவரி 7, 2026 அன்று இந்தியாவில் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சரில் உள்ள பின்புற பேனல் ஃபேப்ரிக் ஃபினிஷ் (துணி) கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே, சீரான, மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் ஸ்லாட் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளன. இடது புறத்தில் மற்றொரு பொத்தான் தோன்றும், இது கேமரா கண்ட்ரோல் பொத்தானாக இருக்கலாம் அல்லது AI அல்லது பிற செயல்பாடுகளை ஷாட்கட் மூலம் இயக்க செய்வதற்காக பயன்படுத்தப்படலாம்.

    மோட்டோரோலா சிக்னேச்சர் முன்பு கீக்பெஞ்சில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒற்றை கோரில் 2,854 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனைகளில் 9,411 புள்ளிகளையும் பெற்றது. பட்டியல் 3.80GHz இல் இரண்டு கோர்கள் மற்றும் 3.32GHz இல் ஆறு கோர்கள் கொண்ட CPU இருப்பதாக காட்டியது.

    இது அட்ரினோ 829 GPU உடன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படலாம். இது 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர்.
    • பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

    செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

    இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமான ஒரு ஏஐ தொழில்நுட்ப உலகையே ஆட்டம் காண வைத்தது.

    2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).

    இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில், டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்களை விட பன்மடங்கு குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டது.

    டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும்.

    சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.

    மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும்.

    ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

    மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

    எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுங்கின. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த டீப்சீக் மற்ற ஏஐ செயலிகளை விட உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.

    அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசும் அளவுக்கு டீப்சீக் அசுர வளர்ச்சி கண்டது.

    ஜனவரி இறுதியில், அதாவது சரியாக ஜனவரி 27(திங்கள்கிழமை), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பூகம்பத்தை சந்தித்தன.

    டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது.

    என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டது.

    ஜனவரி இறுதியில் பங்குச்சந்தையை அதிரவைத்த டீப்சீக், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில சவால்களைச் சந்தித்தது.

    ஜனவரி 27-ல் புகழ் உச்சத்தில் இருந்தபோது, டீப்சீக் தளம் கடுமையான 'DDoS' சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

    இதனால் புதிய பயனர்கள் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே மீண்டும் வலுவாகச் செயல்பாட்டுக்கு வந்தது.

    அதிபர் டிரம்ப் நிர்வாகம் டீப்சீக் வளர்ச்சியை 'தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்' என்று கருதியது. இதனால், அமெரிக்க அரசு நிறுவனங்களில் டீப்சீக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

    மேலும், டீப்சீக் போன்ற சீன நிறுவனங்கள் அதிநவீன 'என்விடியா' சிப்களைப் பெறுவதைத் தடுக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

    இதற்கிடையே கூகுள் தனது Gemini 3 மாடலையும், OpenAI தனது GPT-5.2 மாடலையும் வெளியிட்டன. இவை சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பது (Reasoning) மற்றும் கோடிங் செய்வதில் புதிய உச்சத்தை எட்டின.

    அதேநேரம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் டீப்சீக் தனது அடுத்தடுத்த பதிப்புகளை (V3 சீரிஸ்) வெளியிட்டது. இவை முந்தைய மாடல்களை விட வேகமாகவும், துல்லியமாகவும் இருந்தன.

    குறிப்பாக, இது கணிதம் மற்றும் கோடிங் -இல் கூகுளின் ஜெமினி 3 மற்றும் ஓபன் ஏஐ-யின் புதிய மாடல்களுக்கு நிகராகப் போட்டியிட்டது.

    ஆண்டின் இறுதியில், பயனர்களுக்காக வெறும் பதில்களை மட்டும் தராமல், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது, காலண்டரில் வேலைகளைக் குறிப்பது போன்ற பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

    டீப்சீக் வெறும் ஒரு செயலியாக மட்டும் இல்லாமல், ஏஐ உலகில் நிலவி வந்த அமெரிக்க ஏகபோகத்தை உடைத்தெறிந்த ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. 100 மில்லியன் டாலர்கள் செலவழித்தால்தான் சிறந்த ஏஐ-யை உருவாக்க முடியும் என்ற பிம்பத்தை வெறும் 6 மில்லியன் டாலரில் டீப்சீக் உடைத்துக் காட்டியது.

    டீப்சீக் வருகையால் தங்கள் பிரீமியம் தன்மைகளை மற்ற ஏஐ நிறுவனங்கள் குறைத்து வெகு மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஏஐ தொழில்நுட்பம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய ஒன்று என்பதை டீப்சீக் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

    2025-ம் ஆண்டு என்பது ஏஐ-யின் வளர்ச்சி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும்போது அதில் 'டீப்சீக்' என்ற பெயர் புரட்சியின் வடிவமாக நிச்சயம் பதிவாகும். 

    • விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
    • இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 5.99 மில்லிமீட்டர் அளவில் மிக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனி 5000mAh பேட்டரியுடன், 68W டர்போ-பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டி மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 மாடல் இயங்குகிறது. இத்துடன் அட்ரினோ 722 ஜிபியு கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    புதிய எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் 6.7 இன்ச் 2712x1220 பிக்சல் pOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, முன்புறம் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மோட்டோ ஏஐ 2.0 மூலம் ஏ.ஐ. இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio), ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), ஸ்டைல் சின்க் (Style Sync) போன்று கேமரா சர்ந்த அம்சங்கள் இந்த மாடலில் நிறைந்துள்ளன.

    இந்த ஸ்மார்ட்போன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி பாதுகாப்பு, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ரூ.28,999 முதல் வாங்கலாம். விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் பேண்டோன் லில்லி பேட், பேண்டோன் கேஜெட் கிரே மற்றும் பேண்டோன் ப்ரோன்ஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

    • இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
    • ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.

    சீன சந்கையில் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படும் புதிய ஸ்மார்ட்போனில் சுமார் 10,080mAh பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அளவில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இது ஹானர் பவர் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. முந்தைய ஹானர் பவர் ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பிரிவில் முதல் முறையாகும். இதன் தொடர்ச்சியாக ஹானர் நிறுவனம் 8300mAh பேட்டரியுடன் கூடிய ஹானர் X70 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

    டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் 1.5K 120Hz AMOLED 120Hz டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.

    Saber என்ற குறியீட்டுப் பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னோ ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஹானர் பவர் 2 அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை 2199 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,360) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    • இவற்றுடன் கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்திற்கான 18 மாத இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
    • ரூ. 103 விலையில் கிடைக்கும் ஃப்ளெக்ஸி பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய பிரீபெய்ட் ஆஃபரை " ஹேப்பி நியூ இயர் 2026 " என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு டேட்டா ஆட்-ஆன்கள் முதல் வருடாந்திர சந்தாக்கள் வரை மூன்று புதிய ரீசார்ஜ் ஆப்ஷன்களை கொண்டு வருகிறது. இத்துடன் ஓடிடி பலன்கள் மற்றும் ஏஐ சேவை பலன்களை வழங்குகிறது.

    புதிய திட்டங்கள் கூகுள் உடனான குறிப்பிடத்தக்க கூட்டாண்மையை அறிமுகப்படுத்துகின்றன. ஜெமினி ப்ரோ AI சேவையை தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலை ரீசார்ஜ்களுடன் இணைக்கின்றன.

     

    1. ஹீரோ வருடாந்திர ரீசார்ஜ் (ரூ.3,599)

    ரூ.3,599 வருடாந்திர ரீசார்ஜ் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்துடன் தினமும் 2.5 ஜிபி (வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலுடன்) டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இவற்றுடன் கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்திற்கான 18 மாத இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும்.

    2. சூப்பர் செலபிரேஷன் மாதாந்திர திட்டம் (ரூ.500)

    28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் தினமும் 2 ஜிபி (வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலுடன்) டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இத்துடன் யூடியூப் பிரீமியம், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் PVME, சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கன்ச்சா லன்கா, பிளானட் மராத்தி, சௌபல், ஃபேன் கோடு மற்றும் ஹொய்சொய் ஆகிய ஓடிடி பலன்களும் அடங்கும். வருடாந்திர திட்டத்தைப் போலவே, இதில் இலவச 18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ திட்டம் அடங்கும்.

    3. ஃப்ளெக்ஸி பேக் (ரூ.103)

    ரூ. 103 விலையில் கிடைக்கும் ஃப்ளெக்ஸி பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு 5 ஜிபி (மொத்த தொகை) டேட்டா, கீழ்வரும் மூன்று பேக்குகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்தி பேக்: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ்

    சர்வதேச தொகுப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஃபேன்கோட், லயன்ஸ்கேட் மற்றும் டிஸ்கவரி+

    பிராந்திய பேக்: ஜியோ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், கன்ச்சா லங்கா மற்றும் ஹொய்சொய்

    இந்த புதிய ப்ரீபெய்ட் பேக்குகள் ஜியோவின் வலைத்தளம் , மைஜியோ செயலியில் கிடைக்கும்.

    ×