என் மலர்
தொழில்நுட்பம்
- 3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது.
- இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும்.
மனிதனின் 6-வது விரல் ஸ்மார்ட்போன் என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடும் சேவையும் அதிகரித்துள்ளது. தகவல் தொடர்பு, இணைய அணுகல், புகைப்படம் எடுக்கும் வசதி, பண பரிவர்த்தனை, ஏ.ஐ., என பல அம்சங்களை ஒருங்கே பெற்ற தொழில்நுட்ப சாதனமாக ஸ்மார்ட்போன் விளங்குகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இயங்காது என்பதால் ஸ்மார்ட்போன் யுகம் என்ற சொல்பதத்துக்கு பொருத்தமாக அதன் செயல்பாடு உள்ளது. மேலும் செல்போன் ஒரு ஆடம்பர குறியீடாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு அம்சமாகவும் மாறியுள்ளது.
இத்தகைய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச டேட்டா கார்ப்ரேஷன் (ஐ.டி.சி.) என்னும் பிரபல தரவு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான 2-ம் காலாண்டில் (ஜூலை-செப்) நாட்டின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும். ஜி.எஸ்.டி. வரிசீர்திருத்தம், பண்டிகை காலம், வசதியான தவணை வசதி மற்றும் பழைய சாதனங்களை மாற்றும் திட்டங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி அடிப்படை நிலை ஸ்மார்ட்போன்களைவிட பிரிமியம் ரகம் என்னும் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படும் போன்களே அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் விவோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அது 18.3 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. விவோ நிறுவனம் இந்த பட்டியலில் 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஒபோ நிறுவனம் 13.9 சதவீதம் சந்தை மதிப்பை பெற்றுள்ளது. சாம்சங் 12.6 சதவீதம் அளவில் சந்தை மதிப்பை பெற்றது. செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தநிலையில் அந்த நிறுவனம் 50 லட்சம் செல்போன்களை விற்று இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக மோட்டோரோலா நிறுவனம் 52.4 சதவீதம் வருடாந்திர உயர்வை கண்டு பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை சராசரி ரூ.26,079 (294 டாலர்கள்) ஆக இருந்துள்ளது.
- நத்திங் நிறுவனம் புதிய போன் 3a லைட் இந்திய வெளியீட்டை எக்ஸ் தள பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறது.
- "லைட்-னிங் எப்போதும் இன்னும் ஏதாவது ஒன்றோடு சேர்ந்தே இருக்கும்" என்று நிறுவனம் பதிவிட்டுள்ளது.
நத்திங் நிறுவனம் கடந்த மாதம் நத்திங் போன் 3a லைட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது நத்திங் நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நத்திங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நத்திங் ஸ்மார்ட்போன் எச்சரிக்கைகளுக்கான புதிய ஜிஎல்பி லைட்டுடன் வருகிறது, இது அந்நிறுவனத்தின் பாரம்பிரய கிளிஃப் இன்டர்ஃபேஸை மாற்றுகிறது.
நத்திங் நிறுவனம் புதிய போன் 3a லைட் இந்திய வெளியீட்டை எக்ஸ் தள பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறது. "லைட்-னிங் எப்போதும் இன்னும் ஏதாவது ஒன்றோடு சேர்ந்தே இருக்கும்" என்று நிறுவனம் பதிவிட்டுள்ளது. இது புதிய ஸ்மார்ட்போன் கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் "விரைவில் வருகிறது" என நத்திங் தெரிவித்துள்ளது.

நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு விதமான நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நத்திங் வெளியிட்டுள்ள டீஸர் படம் தெரிவிக்கிறது.
நத்திங் போன் 3a லைட் அம்சங்கள்:
6.77-இன்ச் ஃபுல் ஹெச்டி + 1080×2392 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ பிராசஸர்
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ராவைடு கேமரா, மூன்றாவது சென்சார்
16MP செல்ஃபி கேமரா
டூயல் சிம் (நானோ + நானோ)
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5
வைபை 6, ப்ளூடூத் 5.3
IP54 சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட்
5,000mAh பேட்டரி
33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- ஸ்மார்ட்போன் ஆழமாக ரேசிங் தீம் யுஐ மற்றும் பிரத்யேக கேமரா வாட்டர்மார்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 16GB ரேம், 1TB மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்டின் F1 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்டின் F1 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன், சேகரிப்பாளர்களின் டிசைன்- இரண்டு ஆஸ்டன் மார்டின் F1 லிமிடெட் எடிஷன் டெக்கோ டிசைன்களுடன் (சதுரம் மற்றும் வட்டம்) வருகிறது. இதனுடன் வரும் சிம் கார்டு எஜெக்டர் சாதனம் கூட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆழமாக ரேசிங் தீம் யுஐ மற்றும் பிரத்யேக கேமரா வாட்டர்மார்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இதில் மெக்கானிக்கல் அசெம்ப்ளி டிசைன் கொண்ட பிரத்யேக லென்ஸ் மாட்யூல் கொண்டிருக்கிறது. மேலும், அணியின் நிறத்துடன் ஒற்றுப்போகும் வகையில் லெமன் கலர் தீமில் கிடைக்கிறது. இத்துடன் F1 அணியின் அதே சில்வர் விங் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

6.79-இன்ச் 1440x3136 பிக்சல் 2K+ OLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3nm பிராசஸர்
அட்ரினோ 840 GPU, R1 கிராபிக்ஸ் சிப்
16 ஜிபி LPDDR5X ரேம், 1TB UFS 4.1 மெமரி
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி UI 7.0
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS, f/1.8
50MP 116° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.0
200MP 1/1.4″ 3x பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா,
32MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
IP66+IP68+IP69 சான்றுடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட்
யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை 7 802.11 be, ப்ளூடூத் 6.0
7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங்,
விலை விவரங்கள்:
ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 5499 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 67,910 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16GB ரேம், 1TB மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
- ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் 144Hz ரிப்ரெஷ் ரேட், 1,200 nits பீக் பிரைட்னஸ் உடன் 6.8-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
- 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. வருகிற நவம்பர் 20ஆம் தேதி ரியல்மி GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்த ரியல்மி தயாராகி வருகிறது. இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் பட்ஜெட் பிரிவில் புதிய ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி C85 என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.12,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C75 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் அசத்தலான கேமரா சென்சார்களை தவிர்த்து, சற்றே குறைந்த திறன் கொண்ட சென்சார்களுடன் வரலாம் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.
ரியல்மி நிறுவனம் C85 ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால் அது வியட்நாமில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில், இந்த பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், வியட்நாமில் ரியல்மி 15x மற்றும் ரியல்மி C85 ஆகியவை முன்பக்க கேமராவை தவிர ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்கின்றன.

ரியல்மி C85 அம்சங்கள்:
ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் 144Hz ரிப்ரெஷ் ரேட், 1,200 nits பீக் பிரைட்னஸ் உடன் 6.8-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது பட்ஜெட் பிரிவில் அரிதான ஒன்றாகும். இது சாதாரணமாகவும், கேமிங்கின் போதும் மென்மையான ஸ்கிராலிங் அனுபவத்தை வழங்கும். ரியல்மி C85 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் அதன் 7,000mAh பேட்டரி ஆகும். இது இந்தப் பிரிவில் மிகப்பெரிய ஒன்றாகும்.
இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், 7,000mAh பேட்டரியுடன் கூடிய மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாக ரியல்மி C85 இருக்கும். இதனுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
வியட்நாமில் ரியல்மி C85 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் எடுப்பதற்கு, பின்புறத்தில் 50MP பிரைமரி கேமராவும், முன்பக்கத்தில் 8MP கேமராவும் வழங்கப்படுகிறது.
- அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.
- டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ. உள்ளன. இந்தநிலையில் அடுத்த மாதமான டிசம்பாில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்தாண்டு ஜூலையில் விலை உயர்த்தப்பட்டிருந்தநிலையில் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த காரணம்: 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமல்படுத்தப்படும் தேதி: டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு குறித்து கவலை தெரிவித்த நிலையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும்.
- தினசரி மல்டி-டாஸ்கிங் முதல் கேமிங் வரை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒப்பிடமுடியாத வேகத்தை உறுதி செய்கிறது.
- ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இதுவரை எந்த ஒன்பிளஸ் மாடலிலும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வருகிற 13-ந்தேதி உலகளவில் மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை உறுதியளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஒரு புரட்சிகரமான டிரிபிள்-சிப் கட்டமைப்பு, மிகவும் மென்மையான 1.5K 165 Hz டிஸ்ப்ளே மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் 7300mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும். இது தினசரி மல்டி-டாஸ்கிங் முதல் கேமிங் வரை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒப்பிடமுடியாத வேகத்தை உறுதி செய்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 மொபைல் பிராசஸர் வழங்கப்படுகிறது. இது முதன்மை நிலை செயல்திறனுக்கான அடித்தளத்தை வழங்குகிறது. ஒவ்வொரு தொடர்புக்கும் உடனடி பதிலுக்காக 3200Hz டச் சாம்ப்ளிங் கொண்டுவரும் ஒரு பிரத்யேக டச் ரெஸ்பான்ஸ் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு தனித்த வைஃபை சிப் நெரிசலான நெட்வொர்க் சூழல்களிலும் கூட வலுவான, நிலையான இணைப்பைப் பராமரிக்கிறது.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இதுவரை எந்த ஒன்பிளஸ் மாடலிலும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 7300mAh சிலிக்கான் நானோஸ்டாக் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அதிவேக சார்ஜிங்கை உறுதிப்படுத்துவதற்காக 120W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் வருகிற நவம்பர் 13ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியீட்டின் போது தெரியவரும். அறிமுகத்திற்குப் பிறகு, உலகளாவிய வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, நவம்பர் 13 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. வழக்கம் போல், இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படும்.
- ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
- ஆக்ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது மிக மெல்லிய ஐபோன் மாடல்- "ஐபோன் ஏர்" அறிமுகம் செய்தது. ஐபோன் ஏர்-ஐ விட, ஐபோன் ஏர் 2 பெருமளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், ஐபோன் ஏர் 2 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் ஏர் 2 ரெண்டர் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. ரெண்டரில் புதிய ஐபோனின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. மிக மெல்லிய மற்றும் லேசான கைபேசியின் சில முக்கிய அம்சங்களை ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார்.
ஐபோன் ஏர் 2 அதன் முந்தைய மாடலை போலவே அதே அளவிலான தோற்றம் கொண்டிருக்கலாம். மீண்டும் மீண்டும் மேம்படுத்தல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கேமரா துறையில் இது ஒரு பெரிய அப்டேட் பெறும் என்று தெரிகிறது.
ஐபோன் ஏர் 2 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
சீனாவின் வெய்போ தள பதிவில், டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஐபோன் ஏர் 2 ரெண்டரை பகிர்ந்துள்ளது. இது அதன் வடிவமைப்பைக் காட்டுகிறது. இந்த போன் அதன் முந்தைய மாடலை போலவே வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும், புதிய ஐபோன் ஏர் 2 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் படச்த்தில், இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் ஐபோன் ஏர் மாடலை விட இது குறிப்பிடத்தக்க அப்டேட் பெறக்கூடும். புதிய ஐபோன் ஏர் மாடலில் 48MP பிரைமரி கேமராவுடன் வருகிறது.
மற்ற வடிவமைப்புகள் ஐபோன் ஏர் போலவே இருக்கும் என்று தெரிகிறது. ஆக்ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும். பின்புற பேனலில் இரண்டு கேமரா லென்ஸ்கள், ஒரு பிரத்யேக மைக்ரோபோன் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்ட மாத்திரை வடிவ கேமரா பம்ப் இடம்பெறலாம்.
ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க ஐபோன் ஏர் 2 மாடலில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா-வைடு கேமரா கொண்டிருக்கலாம்.
- புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல், பாரம்பரிய F1 அணியின் சின்னமான பச்சை நிறத்தில் உள்ளது.
- இத்துடன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
ரியல்மி GT 8 ப்ரோ இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போனாக உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் புகைப்படங்கள் எடுக்க Ricoh GR இமேஜிங் ஆதரவுடன் வரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்ட்டின் F1 என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வருகிற 10ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல், பாரம்பரிய F1 அணியின் சின்னமான பச்சை நிறத்தில் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும் நிறுவனத்தின் பிரான்டிங் தெரியும். ரியல்மி GT8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல் சிறப்பு பேக்கேஜிங் மற்றும் அக்சஸரீக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பிரத்யேக தீம்கள், வால்பேப்பர் மற்றும் ஐகான்களை கொண்டிருக்கும்.
சிறப்பு வடிவமைப்பை தவிர ரியல்மி GT 8 Pro ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய கேமராக்களுடன் வருகிறது. நீங்கள் பின்புற கேமரா தொகுதியை மாற்றி வேறு ஒன்றிற்கு மாற்றலாம். இது சதுரம், வட்டம் மற்றும் "ரோபோ" பாணியில் மற்றும் வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது.
வடிவமைப்பு மற்றும் அம்சங்களைத் தவிர, ஹார்டுவேர் பெரும்பாலும் ரியல்மி GT 8 ப்ரோவின் வழக்கமான மாடலைப் போலவே இருக்கும். இது 6.79-இன்ச் QHD+ (1,440×3,136 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 7,000 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி UI 7.0 உடன் இயங்குகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரியல்மி GT 7 ப்ரோ மாடலில் உள்ள 5,800mAh பேட்டரியில் இருந்து ஒரு பெரிய அப்டேட் ஆகும். இத்துடன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
புகைப்படங்கள் எடுக்க ரியல்மி GT 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, x ஆப்டிகல் ஜூம் மற்றும் 6x லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா ஆகியவை உள்ளன.
- அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
- ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு காரணமாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.
- மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் நிபுணர்களை அதிநவீன கருவிகளை பயன்படுத்தி நிபுணத்துவம் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஜெமினி ஏஐ ப்ரோ திட்டம் பிரீமியம் அம்சங்களின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுளுடன் இணைந்து நம்ப முடியாத சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்களுக்கு 18 மாதங்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை பயன்படுத்த முடியும். இந்திய இளைஞர்களை ஏஐ சார்ந்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, கூகுளின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சேவைகளை இலவசமாக அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
18 மாத காலத்தில் தோராயமாக ரூ. 35,100 மதிப்புள்ள ஜெமினி ஏஐ ப்ரோ சேவை, ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட பயனர் தளத்திற்கு (18 முதல் 25 ஆண்டுகள் வரை) விரிவுபடுத்தப்பட்டு பின்னர் நாடு தழுவிய அளவில் விரிவடையும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனம் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் இணைந்து ஒரு வருட இலவச பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சந்தாவை வழங்கிய நிலையில், தற்போது ஜியோ இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சலுகை விவரங்கள்
சலுகை - 18 மாத கூகிள் ஜெமினி AI ப்ரோ திட்டம் — இலவசம்
தொடக்க தேதி - 30 அக்டோபர் 2025
இலக்கு - 18 முதல் 25 வயதுடைய ஜியோ பயனர்கள்
தேவை - ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஜியோவின் அன்லிமிடெட் 5G திட்டங்களில் வாடிக்கையாளர்கள் (ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு)
சலுகையை பெறுவது எப்படி?
மைஜியோ செயலி வழியாக (முகப்புப் பக்கத்தின் மேலே உள்ள "இப்போது உரிமை கோருங்கள்" என்ற பேனரைப் பாருங்கள்)
இந்த சலுகை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் நிபுணர்களை அதிநவீன கருவிகளை பயன்படுத்தி நிபுணத்துவம் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெமினி ஏஐ ப்ரோ திட்டம் பிரீமியம் அம்சங்களின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
ஜெமினி 2.5 ப்ரோ: சிக்கலான பகுத்தறிவு, குறியீட்டு முறை மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான ஏஐ மாடலை அணுகுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற முடியும்.
கிளவுட் ஸ்டோரேஜ்: கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயில் முழுவதும் 2TB வரை ஒருங்கிணைந்த கிளவுட் ஸ்டோரேஜை அனுபவிக்கலாம்.

மேம்பட்ட ஏஐ உள்ளடக்க உருவாக்கம்: ஊடகங்களை உருவாக்குவதற்கு சக்திவாய்ந்த மாடல்களைப் பயன்படுத்துங்கள். இதில் Veo 3.1, Nano Banana போன்ற மாடல்களைப் பயன்படுத்தி ஏஐ வீடியோ, புகைப்படங்கள் உருவாக்கலாம்.
கூகுள் பணியிடத்தில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன்: ஜிமெயில், டாக்ஸ் மற்றும் விட்ஸ் போன்ற பிரபலமான கூகுள் பயன்பாடுகளுடன் ஜெமினியை நேரடியாக ஒருங்கிணைத்து, மின்னஞ்சல்களை வரைதல், ஆவணங்களைச் சுருக்குதல் மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் உடனடி உதவியை வழங்குவதை அனுபவிக்க முடியும்.
ஏஐ கிரெடிட்: வளம் மிகுந்த பணிகளுக்குப் பயன்படுத்த மாதாந்திர 1,000 ஏஐ கிரெடிட்களைப் பெறலாம்.
- இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது.
- விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது.
விவோ X300 ப்ரோ மற்றும் விவோX300 ஆகியவை உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. சீனாவில் விவோX300 சீரிஸ் அறிமுகமான இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முதன்மையான 3nm ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் கொண்டிருக்கின்றன.
மேலும், விவோX300 ப்ரோ மற்றும் விவோ X300 ஸ்மார்ட்போன்கள் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டுள்ளன. முன்பக்கத்தில், இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 50MP செல்ஃபி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, விவோ X300 சீரிஸ் டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
விவோ X300 ப்ரோ அம்சங்கள்:
விவோX300 ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. இது 6.78-இன்ச் 1,260×2,800 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப், மாலி G1-அல்ட்ரா GPU உடன் வருகிறது. மேலும், 16 ஜிபி LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512 ஜிபி UFS 4.1 மெமரியுடன் கிடைக்கும்.
புகைப்படங்களை எடுக்க விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP (f/1.57) பிரைமரி கேமரா, 50MP (f/2.0) அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 200MP (f/2.67) பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50MP (f/2.0) செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

சென்சார்களை பொருத்தவரை 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார், ஹால் எஃபெக்ட் சென்சார், ஐஆர் பிளாஸ்டர், ஃப்ளிக்கர் சென்சார் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவை அடங்கும். கனெக்டிவிட்டிக்கு வைஃபை 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது. விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 சான்று பெற்றுள்ளது.
விவோ X300 அம்சங்கள்:
விவோX300 ஸ்மார்ட்போனிலும், ப்ரோ வேரியண்ட்டில் உள்ள அதே பிராசஸர், ஓஎஸ், கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனினும், இது சிறிய 6.31-இன்ச் 1,216×2,640 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேலும், விவோX300 ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக, இது 5,360mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புகைப்படம் எடுக்க விவோ X300 மாடலில் OIS உடன் 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ப்ரோ மற்றும் ஸ்டாண்டர்ட் மாடல்கள் இரண்டும் ஒரே செல்ஃபி கேமராவுடன் வருகின்றன.
விவோ X300 சீரிஸ் விலை விவரங்கள்:
புதிய விவோ X300 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரியுடன் கூடிய ஒரே வேரியண்ட் விலை யூரோக்கள் 1,399 (இந்திய மதிப்பில் ரூ. 1,43,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவோ X300 விலை 1,049 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,08,000) இல் இருந்து தொடங்குகிறது.
விவோ X300 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் நவம்பர் 3ஆம் தேதி ஐரோப்பாவில் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும். விவோ X300 ப்ரோ டியூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது. விவோ X300 ஸ்மார்ட்போன் ஹாலோ பிங்க் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
- மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் உடன் வருகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கும்.
மோட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஜி86 பவர் மாடலுக்குப் பிறகு, நவம்பர் 5 ஆம் தேதி மோட்டோ நிறுவனம் ஜி பவர் சீரிசில் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாக ஜி67 பவர் என்ற மாடல் அறிமுகம் செய்யப்படுவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 7000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி வழங்குவதை மோட்டோரோலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 58 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி LYT-600 சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் அனைத்து கேமராக்களிலும் 4K ரெக்கார்டிங் வசதி, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் ஸ்கிரீன் பாதுகாப்பிற்காக இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் MIL-810H சான்றிதழுடன் இராணுவ தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP64 சான்றுடன் வர இருக்கிறது. மேலும் 6.7-இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் 3 பேன்டோன் சார்ந்த நிறங்களல் வீகன் லெதர் ஃபினிஷுடன் வரும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கும்.
மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் உடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு விரைவில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதை மோட்டோரோலா உறுதிப்படுத்தி உள்ளது.
அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். அடுத்த வாரம் போன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும்போது இதன் விலையை தெரிந்துகொள்ளலாம்.






