என் மலர்
நீங்கள் தேடியது "Robo"
- "மின்னணு தோல்" தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.
- ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.
மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.
Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை உடனுக்குடன் ரோபோக்கள் கண்டறிந்து, தற்காத்துக் கொள்ளும் திறனை பெறுகிறது.
"மின்னணு தோல்" தொழில்நுட்பம் உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே மென்மையான உணர்வுகளை உணரக்கூடிய "மின்னணு தோல்" (Electronic Skin அல்லது E-Skin) தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.
மின்னணு தோல் (E-Skin) என்றால் என்ன என்று பார்க்கலாம்..
இது மிக மெல்லிய, நெகிழ்வான ஒரு படலம். இதில் ஆயிரக்கணக்கான நுண்ணிய சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். மனித உடலில் உள்ள நரம்புகள் எப்படி மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறதோ, அதேபோல இந்த சென்சார்கள் தொடுதல், அழுத்தம் மற்றும் வெப்பநிலையை ரோபோவின் கணினிக்கு அனுப்பும்.
ஒரு ரோபோ முட்டையை உடைக்காமல் தூக்குவதற்கும், அதே சமயம் ஒரு கனமான இரும்புத் தூணைத் தூக்குவதற்கும் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த உணர்வுதான் தீர்மானிக்கும்.
அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.
முதியவர்கள் அல்லது நோயாளிகளைப் பராமரிக்கும் ரோபோக்கள், மனிதர்களைக் காயப்படுத்தாமல் மென்மையாகக் கையாள இந்தத் தொழில்நுட்பம் அவசியம்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொடு உணர்வு வெறுமனே தொடுதலை உணர்வது மட்டும் போதாது, அது என்ன பொருள் என்பதைப் புரிந்துகொள்ள AI பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, ஒரு ரோபோ கண்ணை மூடிக்கொண்டு ஒரு பையைத் தொட்டாலும், அதன் மென்மை மற்றும் வடிவத்தை வைத்து அது "ஆப்பிள்" அல்லது "டென்னிஸ் பந்து" என்பதைக் கண்டறியும் திறன் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.
சில ஆய்வுகளில், மனித நரம்புகளை விட வேகமாகச் செயல்படும் "செயற்கை நரம்பு மண்டலங்கள்" உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொழில்நுட்பம் முழுமையடையும் போது, ரோபோக்கள் வெறும் இயந்திரங்களாக இல்லாமல், மனிதர்களுக்கு இன்னும் நெருக்கமான, பாதுகாப்பான உதவியாளர்களாக மாறும்.
- குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.
- நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.
புதுச்சேரி:
மருத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படுவது வாடிக்கை. ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்க ரோபோ பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது.
ஆம்... புதுச்சேரியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்தினர்களை ரோபோ ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்றது பிரமிக்க வைத்தது.
புதுச்சேரியில் நேற்று 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் வருகை தந்த விருந்தினர்களை ரோபோ ஒன்று வரவேற்றது.
பெண் போன்று பாவாடை, தாவணி மற்றும் தலையில் தொப்பியுடன் மிடுக்காக காணப்பட்டது. தட்டில் கொடுக்கப்பட்ட ரோஜா பூ, சாக்கெட் ஆகியவற்றை விருந்தினர்களை தேடிச்சென்று வழங்கியது. மேலும் மக்கள் விரும்பும் பாடல்களை அது இசைக்க செய்தது. குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.
சூறாவளி போல் சுற்றி சுற்றி வலம் வந்த ரோபோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.
மும்பை மற்றும் ஐதராபாத்தை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த ரோபோவை 3 மாதத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளனர்.
இதனை முதல் முறையாக புதுச்சேரியில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் லட்சக்கணக்கான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்து விடுகின்றனர்.
இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன. அவர்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகின்றனர்.
விஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க சென்னை ‘ஐ.ஐ.டி.’ அதி நவீன ‘ரோபோ’வை (எந்திர மனிதனை) உருவாக்கி உள்ளது.
இந்த ‘ரோபோ’க்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டு அது சுழலும் விசிறிகள் மூலம் அலசி சுத்தம் செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போன்று சுழலும் மின்விசிறி பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதில் சுழலும் விசிறியில் உள்ள பிளேடுகள் கழிவு நீருக்குள் புகுந்துதொட்டியை அலசுவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, விசிறியில் 6 துடுப்புகள் போன்ற பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சுழலும் விசிறிகளை மாணவர் ஸ்ரீகாந்த் உருவாக்கினார்.
இதே முறையில் ஆயில் மற்றும் கியாஸ் துறைகளிலும் தொட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சியிலும் சென்னை ‘ஐ.ஐ.டி.’ பேராசிரியர்களும், மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் ‘ரோபோ’வின் செயல்பாடு குறித்த ஆய்வக பரிசோதனையை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டில் கழிவுநீர் தொட்டியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் மிக குறுகிய தெருக்களில் வாகனங்களையும், பம்புகளையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ‘ரோபோ’வை எளிதாக எடுத்து சென்று கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். #PoisonousGas #ToxicGas






