search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐஐடி"

    • தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
    • 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் சிரிஜா மற்றும் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதான் ஆகியோரை உள்ளடக்கிய ஐ.ஐ.டி. மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களில் (சி பிரிவு) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.

    அறுவை சிகிச்சை (சி பிரிவு) மகப்பேறு என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை நுட்பமாகும்.


    மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை உயிரை காக்க கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாக தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.

    தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரை பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவூருதல் ஆகியவை அதிகமாக காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிக அளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையை பொறுத்தவரை 2016-ல் இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ல் 49.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

    நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவை சிகிச்சை பிரசவம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. அதிக எடை கொண்ட பெண்கள் குழந்தை பெற்று கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் 35-49 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் 4 மடங்கு அளவிற்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்று உள்ளது. சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்து உள்ளது.

    • மாமல்லபுரத்தில் சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்று நிறைவடைந்தது.
    • இதில் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த மாநாட்டை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை வகித்து நடத்தினார். அறிவியல் தொழில்துறை, ஆராய்ச்சிதுறை செயலர் மற்றும் கவுன்சில் தலைமை இயக்குனர் கலைச்செல்வி காணொலி வாயிலாக மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாநாட்டு தலைவரான சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ரகு பிரகாஷ், இந்திய அணுமின் கழகத்தின் இன்ஜினியரிங் பிரிவு செயல் இயக்குனர் ராமமோகன், தர உறுதி செயல் இயக்குனர் தாமஸ் மேத்யூ மற்றும் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாநாட்டில் அணுசக்தி பாதுகாப்பு, ரசாயனம், விண்வெளி ஆய்வு, எண்ணெய் கிணறுகளின் கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மை, வருங்கால அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

    • நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
    • வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    சமீபத்தில் ஒடிசா தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செயல்படுத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை சுப்ரீம் கோர்ட்டில் செயல்படுத்த உள்ளோம். நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.

    வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகம் ஆகும்.
    • 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    சென்னை :

    சென்னை ஐ.ஐ.டி., அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23-ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதி ஆண்டில் திரட்டப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். நிதி திரட்டலை பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியை இப்போது பதிவு செய்துள்ளது. இதேபோல 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    ரூ.1 கோடிக்கு மேல் இந்த கல்வி நிறுவனத்துக்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்புணர்வு திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.

    சென்னை ஐ.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சி பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று காரணமாக முந்தைய ஆண்டு நடைபெறாமல் இருந்த 'பேட்ச்' மாணவர்கள் சந்திப்பு கடந்த ஆண்டு நடந்தபோதும் நிதி பங்களிப்பு கிடைக்கப்பெற்றது.

    இதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி.யின் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், "சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பின் கல்வி பயிலும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும், பாசமும் நெகிழச்செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவானது சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அவர்களின் நீடித்த ஆதரவுடன் வரும் ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டி.யை இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

    இதேபோல, சென்னை ஐ.ஐ.டி.யின் சமூகம் சார்ந்த திட்டங்கள் எவ்வாறு நாட்டுக்கு பயனளிக்கின்றன என்பது குறித்து, சென்னை ஐ.ஐ.டி. இன்ஸ்டிடியூசனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர் விளக்கினார்.

    • ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது.
    • கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், "உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகத்தை முதல் 300 இடங்களுகு்குள் கொண்டு வருவதே இலக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    • இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன.

    சென்னை :

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனமும், டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனமும் இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்திலும், கோவை வேளாண் பல்கலைக்கழகம் 93-வது இடத்திலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 94-வது இடத்திலும் என தமிழ்நாட்டில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

    ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை தொடர்ந்து 5-வது ஆண்டாக தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது. ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடத்தில் 7 ஐ.ஐ.டி.க்கள் இடம் பெற்றுள்ளன.

    பல்கலைக்கழகங்களின் பட்டியலில், பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 14-வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 50-வது இடத்திலும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

    கல்லூரிகளைப் பொறுத்தவரையில், டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்வி நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடத்திலும், லயோலா கல்லூரி 7-வது இடத்திலும் என தமிழ்நாட்டை சேர்ந்த 35 கல்லூரிகள் இடத்தை தக்க வைத்திருக்கின்றன.

    என்ஜினீயரிங் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலாவது இடத்திலும், திருச்சி என்.ஐ.டி. 9-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்திலும் என மொத்தம் 15 என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துள்ளன.

    மருத்துவக் கல்லூரி வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3-வது இடத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்திலும் என 8 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இதேபோல், ஆராய்ச்சி பிரிவில் 9 கல்வி நிறுவனங்களும், மேலாண்மை பிரிவில் 10 கல்லூரிகளும், துணை மருத்துவத்தில் 9 கல்வி நிறுவனங்களும், பல் மருத்துவத்தில் 7 கல்லூரிகளும், சட்டப்படிப்பில் 2 கல்வி நிறுவனங்களும் கட்டிடம் மற்றும் திட்டமிடல் பிரிவில் 3 கல்லூரிகளும், வேளாண்மை சார்ந்த படிப்புகளில் 5 கல்வி நிறுவனங்களும், புதுமையான கண்டுபிடிப்புகளில் 2 கல்லூரிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களாக இடம்பெற்று அசத்தி இருக்கின்றன.

    கடந்த ஆண்டுகளுடன் இந்த ஆண்டு தரவரிசை பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி.யின் சிறந்த தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஊழியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் முன்னாள் மாணவர்களின் அசைக்க முடியாத ஆதரவின் ஓய்வில்லாத முயற்சி போன்றவற்றாலேயே இது (தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் முதல் இடம்) சாத்தியமாகியிருக்கிறது.

    எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கல்வி அமைச்சகம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்யவேண்டும் என்பதை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். சென்னை ஐ.ஐ.டி.யை உள்நாட்டில் பொருத்தமானதாகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகவும் உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது.
    • மாணவருக்கு பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம்

    சென்னை:

    சென்னை ஐஐடி-யில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த அந்த மாணவர் அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவருக்கு அவரது படிப்பில் கவனம் செலுத்துவது மற்றும் பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    சென்னை ஐஐடியில் ஒரு மாதத்தில் இரண்டாவது மாணவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி முதுகலை மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் தறகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது. மேலும், ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி உள்ளது.

    • கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது.

    இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-ல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு துறைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி. கடல்சார் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் அப்துஸ் சமது வழிநடத்துவார்.

    இதுகுறித்து அப்துஸ் சமது கூறுகையில், "54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இதன் மூலம் நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யமுடியும்" என்றார்.

    • சென்னையில் உள்ள அரசு மாநில தன்னாட்சி கல்லூரி 3-வது இடத்திலும், 4-வது இடத்தில் லயோலா கல்லூரியும் இடம் பெற்றுள்ளன.
    • கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி 6-வது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. கல்லூரிகளின் கட்டமைப்பு, செயல்பாடு, ஊக்குவிக்கும் திறன், கல்வி கற்பித்தல் முறை பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள அரசு மாநில தன்னாட்சி கல்லூரி 3-வது இடத்திலும், 4-வது இடத்தில் லயோலா கல்லூரியும் இடம் பெற்றுள்ளன.

    கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி 6-வது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தர வரிசை பட்டியலில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

    கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி, கான்பூர், கொல்கத்தா, ஐ.ஐ.டி. அடுத்தத்த இடங்களை பிடித்தன.

    சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் குளித்த இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #MadrasIIT
    சென்னை:

    சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் ஏரி ஒன்று உள்ளது. இன்று மாலை கானகம் பகுதியை சேர்ந்த 7 பேர் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அதில், மூர்த்தி, ஜேரால்டு ஆகிய இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களது உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    உள்ளே நுழைய அனுமதி இல்லாத நிலையில், பின்பக்க சுவர் வழியாக அவர்கள் உள்ளே வந்து ஏரியில் குளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MadrasIIT
    ×