என் மலர்

    நீங்கள் தேடியது "special event"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகலாம்.
    • ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் 5 ஆம் தேதி "சிறப்பு நிகழ்ச்சி" நடத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆப்பிள் WWDC 2023 டெவலப்பர் நிகழ்வின் அங்கமாக நடைபெற இருக்கிறது. 2023 ஆண்டிற்கான ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி துவங்கி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு நிகழ்ச்சி குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இல் இயங்கும் xrOS சார்ந்த அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் ஆப்பிள் ஹெட்செட்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் ஆப்பிள் AR/VR ஹெட்செட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் மிகவும் சக்திவாய்ந்த XR ஹெட்செட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் இதன் விலையும் பிரீமியம் பிரிவிலேயே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த ஹெட்செட் 4K மைக்ரோ OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் சோனி, டூயல் பிராசஸர்கள் TSMC, 12 கேமராக்கள் மற்றும் வெளிப்புற பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்டில் இருந்தபடி ஆக்மெண்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி மோட்களிடையே ஸ்விட்ச் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஆப்பிள் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விலை 3 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பார்க் வளாகத்தில் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஏற்கனவே இதுகுறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஆப்பிள் சார்பில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    அதன்படி மார்ச் 25 ஆம் தேதி இட்ஸ் ஷோ டைம் (It’s show time) என்ற பெயரில் ஆப்பிள் நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பார்க் வளாகத்தில் இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது.

    ஆப்பிள் சிறப்பு நிகழ்வில் புதிய வன்பொருள் சாதனங்கள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக செய்தி மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஸ்டுடியோக்கள் மற்றும் நெட்வொர்க்களுக்கு ஏப்ரல் மாத வெளியீட்டிற்கு தயாராக இருக்க தகவல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சேவை முழுமையாக துவங்க மேலும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் நெக்ஸ்ட் இஷூ மீடியாவின் டிஜிட்டல் இதழ் சேவையான டெக்ஸ்ச்சரை கடந்த ஆண்டு கைப்பற்றியது.

    இதனால் ஆப்பிளின் செய்தி சேவை, இதழ் சேவையான டெக்ஸ்ச்சர் ஆப்பிள் நியூஸ் சேவையுடன் ஒன்றிணைக்கப்படும் என தெரிகிறது. பிரத்யேக சந்தா சேவையின் மூலம் பல்வேறு பதிப்பகங்களை ஒன்றிணைத்து, ஆப்பிள் மியூசிக் போன்று புதிய சேவையை கொண்டு ஆப்பிள் தனது வருவாயினை அதிகரித்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. 

    மார்ச் 25 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆப்பிள் விழா ஆப்பிள் பார்க் வளகாத்தினுள் அமைந்திருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழா ஆப்பிள் டி.வி. மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நேரலை செய்யப்படுகிறது.
    ×