என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இப்போது கூட வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியும்- தேர்தல் ஆணையர்
- தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம்.
- வேட்பாளர்கள் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் VVPAT ரசீது எண்ணப்படும்.
சென்னை:
சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் கண்காணிக்கப்படுவர்.
* தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம்.
* SIR பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தமிழ்நாடு நினைவில் வைத்துக்கொள்ளும்.
* தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் உள்ளனர்.
* கடைசி 2 மின்னணு வாக்கு எந்திரங்களில் வாக்கு எண்ணுவதற்கு முன்பு தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்.
* வேட்பாளர்கள் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் VVPAT ரசீது எண்ணப்படும்.
* படிவம் 6 மூலமாக இப்போது கூட வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.
Next Story






