என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
- தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
- ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்திய நிலையில், சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, ஜனநாயகத்தின் தாய்.
* தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயகத் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும்.
* தமிழ்நாட்டில் SIR பணியை சிறப்பாக மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு.
* தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
* தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.
* தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
* ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
* 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
* 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
* வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இருக்கும் என்பதால் வாக்களிக்க எளிது.
* 2 மணிநேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
* தபால் வாக்குகள் இரண்டு கட்டங்களாக எண்ணப்படும் என்றார்.
* இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்றார்.






