search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பயணிகள் அடையும் சிரமத்தை கண்டாவது ரெயில்வே நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும்: தயாநிதி மாறன்
    X

    பயணிகள் அடையும் சிரமத்தை கண்டாவது ரெயில்வே நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும்: தயாநிதி மாறன்

    • அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
    • இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

    சென்னை:

    மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள் அடையும் சிரமத்தை நேற்றைய தினம் சமூகவலைதளங்களில் பயணி ஒருவர் பதிவிட்டு இருப்பதை கண்ட பிறகாவது ரெயில்வே நிர்வாகம் விழித்துக்கொண்டு உடனடியாக அவற்றை சரிசெய்வதோடு, அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுகுறித்து பலமுறை மண்டல கூட்டத்திலும், பலமுறை கடிதம் வாயிலாகவும் ரெயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன் என கூறியுள்ளார்.

    Next Story
    ×