search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷேன் நிகாம்"

    • இந்த படம் ஆக்‌ஷன் டிராமா கலந்த கதையம்சம் கொண்டிருக்கிறது.
    • அவரின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது.

    நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா "மெட்ராஸ்காரன்" திரைப்படம்.

    எஸ்.ஆர். புரோடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதிய படத்திற்கு மெட்ராஸ்காரன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்த படம் ஆக்ஷன் டிராமா கலந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூஜை, எளிமையாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

     


    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பொன்ராம், "வாலி என் நண்பர் ஒவ்வொரு படத்திலும் திரைக்கதை பணிகளின்போது பேசிக்கொள்வோம். மிகத்திறமையானவர் அவரின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது. ஷேன் நிகாம் எனக்குப் பிடித்த நடிகர், கலையரசனும் என் நண்பர்."

    "இந்தக்குழுவே மிகவும் உற்சாகம் தரக்கூடிய குழுவாக உள்ளது. இவர்கள் சிறப்பான ஒரு படத்தைத் தருவார்கள் என நம்புகிறேன் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்."

    இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் வாலி மோகன் தாஸ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

    ரங்கோலி படம் மூலம் பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் "மெட்ராஸ்காரன்". இதில் மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.


    எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி ஜகதீஸ் தயாரிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகும் இந்த படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

    படத்தின் நாயகி மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    ×