என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rana Dagupathi"

    • ராணா இன்று ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
    • இந்த வழக்கில் அனைத்து நடிகர்களும் தனித்தனியாக ஆஜராக வேண்டும் என சம்மன்.

    ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரங்களில் நடித்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர்கள் ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இதற்காக ராணா இன்று ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இந்த வழக்கில் அனைத்து நடிகர்களும் தனித்தனியாக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    சினிமா படப்பிடிப்பு மற்றும் தொழில் சம்பந்தமான பணிகள் இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் அளிக்க வேண்டுமென நடிகர் ராணா அமலாக்க துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இதனால் அவர் இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராக வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

    பிரகாஷ் ராஜ் வருகிற 30-ந் தேதி, விஜய் தேவரகொண்டா ஆகஸ்டு 6 மற்றும் லட்சுமி மஞ்சு ஆகஸ்டு 13 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த சட்டவிரோத செயலிகளின் பணப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை தற்போது விசாரித்து வருகிறது.

    • தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவு.
    • ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல்.

    நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தனது 170-வது படமான வேட்டையன் திரைப்படம், லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜெய் பீம் படம் இயக்கிய டீ ஜே ஞானவேல் தான் இத்திரைபடத்தையும் இயக்குகிறார்.

    இப்படத்திற்க்கு மக்கள் இடையே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

    இப்போது ராணா தகுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூல அவர் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இருப்பார் என்று எதிர் பார்க்கபடுகிறது.


    • நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • . அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து வசூல் ரீதியாகவும் 600 கோடி ரூபாயிற்கு மேல்  வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

    இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    மேலும் நடிகர் ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. இந்த தகவலை நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் படக்குழுவினர் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    • உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலஜாமினில் அல்லு அர்ஜுன் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.

    அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் (Local Court) 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடியான ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனையடுத்து நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×