என் மலர்
நீங்கள் தேடியது "சினிமா"
- இந்தாண்டு பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர்.
- இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்
2025 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களுக்கு மகழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இந்த வருடம் புதிய வெளிச்சம் பெற்றது.
பல நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர். இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதமும் அதற்கு ரசிகர்கள் பொழிந்த வாழ்த்து மழையும் இணையத்தை ஆக்கிரமித்தன.
அவ்வகையில் 2025-இல் குழந்தை பெற்ற இந்திய திரை பிரபலர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. சினேகன் - கன்னிகா:
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு துவக்கத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு காதல் கவிதை என நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டினார்.

2. பிரேம்ஜி:
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இந்தாண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துனர். தனது 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இந்தாண்டு துவக்கத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டினார்.

4. மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் அப்பா நான் தான் என்று ஒப்புக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனை தயார் என்று தெரிவித்துள்ளார்.

5. விக்கி கவுசல் - கத்ரீனா கைப்
பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

6. கியாரா அத்வானி
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் இந்தாண்டு கேம்சேஞ்சர், வார் 2 படங்கள் வெளியாகின.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.
இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்தாண்டு இறுதியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

7. பரினீதி சோப்ரா
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.

8. ராஜ்குமார் ராவ்
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், 2021 ஆம் ஆண்டு பத்ரா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு ராஜ்குமார் ராவ் - பத்ரா லேகா தம்பதிக்கு இந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதி தங்களது 4 ஆம் ஆண்டு திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
- அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
- இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆர்யா
ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவிற்கு ஓர் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
- இந்தாண்டு அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டு உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆண்டாக அமைந்தது. உலக சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா தான் என்ற பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. சீனா, தென் கொரியாவை சேர்ந்த படங்களும் உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகின்றன.
லைவ் ஆக்சன் படங்களை விட சமகாலத்தில் அனிமேஷன் படங்கள் அதிக வசூலை வாரிக்குவித்து வருகின்றன. இந்தாண்டும் அதிக வசூலித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை அனிமேஷன் திரைப்படம் தான் பிடித்துள்ளது.
அவ்வகையில் இந்தாண்டு உலக அளவில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியலில் இந்த ரீவைண்டில் பார்ப்போம்.

1. Ne Zha 2
சீன அனிமேஷன் திரைப்படமான Ne Zha 2 திரைப்படம் உலக அளவில் ரூ.19,750 கோடி வசூலித்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹாலிவுட் படங்களே எப்போதும் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நிலையில் அந்த இடத்தை Ne Zha 2 இந்தாண்டு தட்டி பறித்துள்ளது.

2. Lilo & Stitch
2002 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷனை திரைப்படமான Lilo & Stitch மாபெரும் வெற்றியை பெற்றது. அதனால் இப்படத்தை தற்கால தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி லைவ் ஆக்சன் படமாக டிஸ்னி வெளியிட்டது. இப்படம் உலக அளவில் ரூ.9,350 கோடி வசூல் குவித்து இப்பட்டியலில் 2 ஆம் பிடித்துள்ளது.

3. A Minecraft Movie
உலக புகழ்பெற்ற Minecraft என்ற வீடியோ கேமை மையமாக கொண்டு A Minecraft Movie படம் உருவாக்கப்பட்டது. இப்படம் வீடியோ கேமிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உலக அளவில் ரூ.8,600 கோடி வசூலை ஈட்டி இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

4. Jurassic World: Rebirth
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ' ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
டைனோசர் படங்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது. உலக அளவில் இப்படம் ரூ.7,800 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்துள்ளது.
5. How to Train Your Dragon
How to Train Your Dragon என்ற அனிமேஷன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் லைவ் ஆக்சன் திரைப்படம் இந்தாண்டு வெளியானது. அனிமேஷனை படத்தை போலவே இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.5690 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.

6. F1: The Movie
டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார். இப்படம் இந்தாண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் F1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
உலக அளவில் இப்படம் ரூ.5580 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

7. Superman
ஹென்றி கேவில் நடித்த சூப்பர்மேன் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தாண்டு ரீபூட் செய்யப்பட்ட புதிய சூப்பர்மேன் படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. உலக அளவில் இப்படம் ரூ.5525 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 7 ஆம் இடம் பிடித்துள்ளது.

8. Mission: Impossible – The Final Reckoning
Mission: Impossible படங்களின் கடைசி பாகம் என்ற எதிர்பார்ப்போடு The Final Reckoning படம் வெளியானது. டாக் குரூஸ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாட உலக அளவில் இப்படம் ரூ.5360 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.

9. The Fantastic Four: First Steps
வழக்கமாக டிசி படங்களை விட மார்வெல் படங்கள் அதிக வசூலை ஈட்டும் நிலையில், இந்தாண்டு மாற்வல் படங்கள் வசூலில் சற்று சறுக்கியது. மார்வெல் தயாரிப்பில் வெளியான The Fantastic Four: First Steps படம் நல்ல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் இப்படம் ரூ.4650 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.
10. Captain America: Brave New World
இப்பட்டியலில் கடைசி இடத்தை Captain America: Brave New World படம் பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான எதிர்பார்த்த வசூல் பெறவில்லை. உலக அளவில் இப்படம் ரூ.3725 கோடி வசூலை குவித்து இப்பட்டியலில் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.
- பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது
- அஜித் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் பிரபு, பிரசன்னா, த்ரிஷா என பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கிவிடும். இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷலான படம். அஜித் சார் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார். இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார். வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக வர நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்." என தெரிவித்தார். அஜித்தின் புதுப்பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது
- மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'பாம்'. இதில் நடிகர் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் தாஸின் புதியபட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நடிகை தேஜு அஷ்வினி நடிக்கவிருக்கிறார்.
மேலும் நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு சூப்பர் ஹீரோ என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
- ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவினின் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'கிஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த பட பிரமோஷன் விழாவில் கவின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களிடையே பேசிய கவின்,
"ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மாஸ்க் நவ.21 (நாளை) வெளியாகிறது. வெள்ளிக்கிழமை கல்லூரி இருக்கும். அதனால் அனைவரும் சமத்தாக கல்லூரி செல்லுங்கள். அந்த வேலையை முடித்துவிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் சென்று பாருங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்குதான். தேவைப்படும்போது செல்லுங்கள், முடிந்தவுடன் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசியிருந்தார். கவினின் இந்தப் பேச்சு பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
- நடிகை துளசி பண்ணையாரும், பத்மினியும் படத்தின்மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
- ஷீரடி சாய்பாபாவுடன் நிம்மதியான பயணத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்
பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகை சாவித்ரி மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீதாலட்சுமி, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக தெலுங்கு திரையுலகின் நந்தி விருதை இருமுறை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் வலம்வருகிறார்.
இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங், நல்லவனுக்கு நல்லவன், சகலகலா வல்லவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். தற்போதையை தலைமுறையினருக்கு தெரியவேண்டுமானால் பண்ணையாரும் பத்மினியும் படத்தைக் கூறலாம். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் கன்னட நடிகர் சிவமணியை திருமணம் செய்துகொண்டார். கடந்த வாரம் வெளியான லவ் ஓடிபி படத்தில் நடித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
"டிசம்பர் 31 ம் தேதி எனது ஷீரடி தரிசனத்தின் தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" என தெரிவித்துள்ளார்.
- தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
- நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டது.
இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.
கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
- முன்னதாக நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசனுக்கு (2016) வழங்கப்பட்டது.
- சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.

கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
வரும் நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
- அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள 'அதிரடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
- உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது.
பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையால் வரும் வருமானத்தை போல உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது. அதுவே 2023 ஆம் ஆண்டில் ரூ.1,958.4 கோடி வருவாயாக அதிகரித்தது.
இந்நிலையில், உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
அதன்படி பெங்களூரில் உள்ள M5 ECity பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் இருக்கையிலேயே டைனிங் டேபிள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் உணவு வாங்க வெளியே வராமல் அமரும் இடத்திலே உணவு கிடைக்கும் என்று பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாம் கேட்கும் உணவுகளை உடனே சமைத்துத் தரும் 'லைவ் கிச்சன்' அமைப்பையும் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் டைனிங் டேபிளில் LED விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இருட்டில் அமர்ந்து சாப்பிடாமல் வெளிச்சத்தில் சாப்பிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது.
- ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.
சிவாஜிராவின் தந்தை ரனோஜிராவ் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தார். தனது மகன் பற்றி ஜோதிடர் சொன்ன தகவல்களை அவரால் நம்ப முடியவில்லை. சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தனது மகன் எப்படி அதிசயம் நிகழ்த்தும் மனிதனாக மாறுவான் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டார்.
அவரது முகத்தில் தோன்றிய சந்தேகத்தை ஜோதிடர் அந்த வினாடியே புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே, "நான் சொல்வது உங்களுக்கு இப்போது நம்பிக்கை தராது. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மகன் ஜாதகம் மிக மிக அபூர்வமான ஜாதகம் ஆகும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளில் அவரது புகழ் பல கோடி மக்களால் பேசப்படும் அளவுக்கு மாறும் பாருங்கள்" என்றார்.
ஜோதிடர் சொன்னதை கேட்டதும் ரனோஜிராவுக்கு சிரிப்பாக வந்தது. மெல்ல சிரித்துக் கொண்டே, "அவன் கைவசம் இருந்த வேலையை விட்டுவிட்டு தெருவில் நிற்கிறான். அடுத்த வேளை உணவுக்கு கூட வழி இல்லை. அது தெரியுமா உங்களுக்கு?" என்றார்.
இதை கேட்டதும் ஜோதிடர், "நீங்கள் நான் சொல்வதை நம்புகிறீர்களோ இல்லையோ ஆனால் எதிர்காலத்தில் இந்த ஜாதகக்காரர் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் மனிதராக இருப்பார். அவரது ஜாதகத்தில் சூரியனும், வியாழனும் அமைந்து இருக்கும் அமைப்பு மிக மிக தனித்துவம் ஆனது. ரொம்ப அபூர்வமானது. ரொம்ப நாட்களுக்கு பிறகுதான் அபூர்வமான மனிதர்களுக்கு இத்தகைய கட்ட அமைப்பு கிடைக்கும். உங்கள் மகன் ஜாதகத்தில் அது இருக்கிறது" என்றார்.
ஆனால் அதையும் ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. அவரது முகத்தை வைத்து அவர் திருப்தி அடையவில்லை என்பதை புரிந்துக் கொண்ட ஜோதிடர் தொடர்ந்து சில நிமிடம் கண்களை மூடி தியானத்தில் மூழ்கினார். பிறகு அவர் ரனோஜிராவை பார்த்து தீர்க்கமான குரலில் பேசத் தொடங்கினார்.
"உங்கள் மகன் ஜாதகம் மிகவும் தனித்துவம் ஆனது. எனது அனுபவத்தில் இத்தகைய உயர்ந்த சிறப்பான ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. இந்த ஜாதகக்காரர் நாடு முழுவதும் புகழ் பெற்றவராக மாறுவார். நிச்சயமாக எனது கணிப்பு தப்பாது" என்றார்.
இதை கேட்டதும் ரனோஜிராவ் சிரித்தார். "அவனுக்கு இருந்த வேலையும் போய் விட்டதே" என்றார். உடனே ஜோதிடர், "இந்த ஜாதக அமைப்பைக் கொண்டவர் யாருக்கும் கீழ் வேலை பார்க்க மாட்டார். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் தலைவனாக இருப்பார். இதுதான் நடக்கும்" என்றார்.
ஆனால் ஜோதிடர் சொன்னதை ரனோஜிராவால் நம்ப முடியவில்லை. ஜோதிடர் ஏதோ சொல்கிறார் என்ற நினைப்புடன் புறப்பட்டு விடலாமா? என்ற மனநிலைக்கு அவர் வந்து இருந்தார். அவரது முகமாற்றத்தை பார்த்த ஜோதிடர் விடவில்லை. தொடர்ந்து பேசினார்.
"நான் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருகிறேன். லட்சக்கணக்கானவர்களின் ஜாதகத்தை கணித்து அலசி ஆராய்ந்து பார்த்து பலன்கள் சொல்லி இருக்கிறேன். எனது ஜாதக பலன்கள் தப்பியதே இல்லை. அப்படியே நடந்து வருகின்றன. அதனால்தான் என்னைத் தேடி பலரும் வருகிறார்கள்.
இதுவரை நான் பார்த்த லட்சக்கணக்கான ஜாதகங்களில் உங்களது மகன் ஜாதகம் மிக மிக வித்தியாசமானது. இப்படிப்பட்ட ஒரு ஜாதக அமைப்பை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு சிறப்பான அமைப்புடன் இந்த ஜாதகம் அமைந்துள்ளது" என்றார்.
இதை கேட்டதும் ரனோஜிராவுக்கு கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. ஜோதிடர் அடுத்து என்ன சொல்வார் என்று ஆவலோடு பார்த்தார். ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.
"உங்கள் மகன் ஜாதகம் பிரமிப்பு தருகிறது. உங்கள் மகன் ஜாதகத்தை பார்த்த உடனேயே நான் மிரண்டு போனேன். என்னால் சில விஷயங்களை கணிக்க முடியவில்லை. இப்போதும் கூட என் மனதில் அந்த குழப்பம் இருக்கிறது.
உங்கள் மகன் ஜாதகத்தை பொறுத்தவரை 2 விஷயங்கள்தான் நிச்சயமாக நடக்கும். ஒன்று உங்கள் மகன் இந்த நாட்டில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதராக மாறுவார். பணம், புகழ் எல்லாம் அவரிடம் கொட்டி கிடக்கும். அவரது வாழ்நாள் முழுக்க வெற்றிகளை பெற்றுக் கொண்டே இருப்பார். அவரது வெற்றிகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்றார்.
இப்படி சொல்லி விட்டு ஜோதிடர் ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு அமைதியாக இருந்தார். பிறகு ''இந்த ஜாதகக்காரர் மிகப்பெரிய சக்தியாக மாறாவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா?'' என்றார். அவரது இந்த கேள்வி ரனோஜிராவ் மனதுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் தொடர்ந்து பேசினார்.
"உங்களது மகன் அதாவது இந்த ஜாதகக்காரர் உலகம் புகழும் வகையில் செல்வமும், செல்வாக்கும் பெற வேண்டும் என்பது விதிக்கப்பட்ட விதியாகும். ஒருவேளை அதில் மாற்றம் ஏற்படுமானால் இந்த ஜாதகக்காரர் தனக்கு சொந்தமான எல்லா சொத்துக்களையும் உதறித் தள்ளி விட்டு சன்னியாசியாக போய் விடுவார். அதற்காக காட்டுக்குள் போய்விடுவார் என்று அர்த்தமல்ல. சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்று அவரது குணமும் மாறும். இவர்கள் எல்லோரையும் சேர்த்து எடுத்தது போல ஒரு மிக பெரிய மகான் ஆக மாறுவார். அதில் மாற்றமே இல்லை. இந்த இரண்டில் ஒன்றுதான் நடக்கும்" என்றார்.
ஜோதிடரின் குரல் கடைசியில் முடிக்கும்போது கம்பீரமாக கணீர் என்று இருந்தது. ரனோஜிராவ் அதைக் கேட்டு ஆடிப் போய் விட்டார். தனது மகன் ஒன்று கோடீஸ்வரன் ஆவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று ஜோதிடர் சொன்னதை கேட்டதும் அவருக்குள் பிரளயமே வெடித்தது போல இருந்தது. அவரால் ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்ப முடியவில்லை.
அவரது உணர்ச்சிகளை கண்டு ஜோதிடர் புரிந்து கொண்டார். அவர் கூறுகையில், "உங்களுக்கு இப்போது என் மீது நிச்சயமாக நம்பிக்கை வராது. நான் சொல்வது நடக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஆழமாக இருக்கிறது. ஏனெனில் உங்களது வாழ்க்கை சூழ்நிலை அப்படி இருக்கிறது. ஆனால் இந்த ஜாதக அமைப்புப்படி நான் என்ன கணித்து சொல்லி இருக்கிேறனோ அதுதான் நிச்சயமாக நடக்கும். வெகு விரைவில் அதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.
அவரது குரலில் இருந்த உறுதியைப் பார்த்து ரனோஜிராவ் ஆச்சரியப்பட்டார். மற்றொரு பக்கம் அவருக்கு அதிர்ச்சியாக கூட இருந்தது. சிவாஜிராவ் மது அருந்தி விட்டு புகை பிடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கும் காட்சிகள்தான் அவரது மனத்திரையில் ஓடின. இப்படிப்பட்ட மகன் எப்படி உலகமே புகழும் கோடீஸ்வரனாக மாறுவான் என்று அவர் மனதில் ஒரு ஓரத்தில் கேள்வி எழுந்தது.
ஜோதிடரை அவர் நம்ப முடியாமல்தான் பார்த்தார். ஜோதிடரை நம்பாமல் தட்டு தடுமாறி எழுந்தார். ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய 2 ரூபாய் தட்சணையை தட்டில் வைத்து விட்டு எழுந்தார். அவரை வணங்கி விடைப்பெற்றார்.
அவர் விடைபெறும்போது ஜோதிடரை சந்தேக கண்ணுடன்தான் பார்த்தார். அதை ஜோதிடரும் புரிந்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டே உங்கள் மகன் உலகம் புகழும் பணக்காரனாக, ஒரு மகான் ஆக மாறுவார் பாருங்கள் என்று சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னார். ஆனால் ரனோஜிராவ் அதை நம்ப முடியாமல் ஜோதிடர் வீட்டில் இருந்து வேக வேகமாக வெளியே வந்தார்.
வெளியில் தெருவில் இருந்து நடக்க தொடங்கியதும் தனது போலீஸ்கார நண்பரிடம் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார். அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கோபத்தில் வெளியில் வந்து கொட்டின.
"நான் என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்துக் கொண்டு இருக்கிறேன். கண்டக்டர் வேலை மீண்டும் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான் என் கேள்வி. ஆனால் அதற்கு அவர் விடையே சொல்லவில்லை.
கண்ணை மூடி தியானம் செய்து விட்டு ஏதேதோ உளறுகிறார். என் மகன் கோடீஸ்வரன் ஆகிவிடுவான், உலகமே அவனை புகழும் என்று எல்லாம் சொல்கிறார். நம்பும்படியாகவா இருக்கிறது? அவர் எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஜாதகத்தை நன்றாக பார்த்தாரா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
என் மகன் அடுத்த வேளை உணவுக்கே பிறரை நம்பி இருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். அவனை எப்படி வாழ வைக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. விரைவில் அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
ஒழுங்காக நான் சொல்வதை கேட்டுக் கொண்டு இந்த கண்டக்டர் வேலையில் இருந்து இருக்கலாம். அதையும் தொலைத்து விட்டான். மெட்ராசுக்கு போய் சினிமாவில் நடிக்கப் போவதாக கனவு காண்கிறான். இது எல்லாம் நடக்கிற காரியமா?
அவனால் இப்போது என் நேரமும், பணமும்தான் வீணாகி போய் விட்டது. உன் பேச்சை கேட்டு இந்த ஜோதிடரிடம் நான் வந்தது தப்பு. என்னவெல்லாமோ சொல்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் நம்பும்படியாகவா இருக்கிறது?
இந்த ஜோதிடர் என் மகன் ஒன்று கோடீஸ்வரனாக மாறுவான் அல்லது சாமியாராக போய் விடுவான் என்று சொல்கிறார். அவன் எங்கே சாமியாராக போவான். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இந்த ஜோதிடர் என்னை பயம் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறாரோ என்னவோ? என்றார்.
ஆனால் சிவாஜிராவ் பற்றி வாழ்க்கையில் அந்த ஜோதிடர் கணித்தது நூறு சதவீதம் அப்படியே பலித்தது. சென்னைக்கு புறப்பட்டு வந்த சிவாஜிராவ் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தன.
அதுபற்றி 6-ந்தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.






