search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா"

    • புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
    • . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்டார்

    அறிமுக இயக்குனர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகிறார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்ட நிலையில்.

    இப்பொழுது அப்படத்தின் முதல் பாடலான 'டமக்கு டமக்கா' வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இப்பாடலை பாடியுள்ளார்.

    அறிமுக நடிகர்களான திரவ் மற்றும் இஸ்மத் பானு இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டமக்கு டமக்கா பாடல் நல்ல ஃபீல் குட் பாடலாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது
    • எக்ஸ் பக்கத்தில் ’ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்’என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

    சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

    ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் பக்கத்தில் 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தில் கவுரவ வேடத்தில் படத்தின் கடைசியாக லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பார்.

    அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகராக நடிக்கப்போகும் முதல் ஆல்பம் பாடல் இதுவே. இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

    • புளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்
    • மக்களிடையே நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் அசோக் செல்வன்

    அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமான நபர். 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தெகிடி படம் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இதற்கு பிறகு ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர் தொழில், போன்ற படங்களில் நடித்தார். போர் தொழில் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    அடுத்தடுத்து நல்ல படங்களை தேடி தேர்வு செய்து நடிப்பதால் மக்களிடையே நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் அசோக் செல்வன். பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜனவரி மாதம் வெளிவந்த படம் புளூ ஸ்டார். அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது.

    புளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். 'எமக்கு தொழில் ரொமேன்ஸ்' என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

     

    அவந்திகா இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பாலாஜி கேசவன் படத்தை இயக்கவுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க டி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

    • ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.
    • ஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி.

    படங்களை திரையரங்குகளில் பார்ப்பதே ஒரு சுகம். மனிதன் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் அவனை மூன்று மணி நேரம் கவலைகளை மறக்கச் செய்து , அவன் மீண்டும் இயங்குவதற்கான உத்வேகத்தை சினிமா தருகிறது எனலாம். ஒருவன் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றாலும், தன் காதலியுடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும் அவன் திரையரங்கத்திற்கே செல்கிறான். காதல், குடும்பம், நட்பு என மூன்றிலும் பொதுவாக இருக்கும் ஒன்று சினிமா. அதிலும் திரையரங்கம்.

    தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம் ஒரு மாத இடைவெளிக்கு பின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதனால் மக்கள் சிலரிடம் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு மட்டும் திரையரங்களில் பார்க்கும் பழக்கம் சமீபத்தில் உருவாகியுள்ளது. இதனால் சாதாரண படங்களும், குறைந்த பட்ஜட் படங்களும் மக்கள் பார்வைக்கு வருவதற்கு முன்னரே காணாமல் போய்விடுகிறது.

    என்னதான் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அதனை திரையரங்கில் மக்களுடன் மக்களாக அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை தருவதில்லை. சமீபத்தில் பல தமிழ்ப் படங்கள் ரீ - ரிலீஸ் செய்யப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான 3 , மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, விருமாண்டி. விக்ரம் நடித்த அந்நியன், சாமி. ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி. சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைபடம் எல்லாம் 10 - 15 வருடங்களுக்கு முன்னால் வந்த திரைபடமாக் இருந்தாலும், ஓடிடி தளங்களில் இருந்தாலும் கூட மக்கள் திரையரங்குகளில் வந்து பார்க்க விரும்புகின்றனர்.

    படங்கள் வெளியான போது திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாமல் போனதால், அப்பொழுது சிறு வயதில் இருந்த காரணத்தினாலும், இம்மாதிரி ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.

    அதனை ஊக்குவிக்கும் வகையில் ஐஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி. இத்தளத்தில் உங்கள் ஊரில் உள்ள திரையரங்குகளைப் பற்றியும், அத்திரையரங்குகளில் என்ன படங்கள் வெளியாகியுள்ளது என்பது பற்றிய தகவல்கள் இருக்கும்.

    மேலும், சமீபத்தில் வெளியான படங்களைப் பற்றியும் அதன் நடிகர்கள், படக்குழுவினர் பற்றிய தகவல்களும், படத்தின் விமர்சனங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    இப்பொழுது நாம் பட டிக்கெட்டுகளை பெறுவதற்கு கார்ப்பரேட் தளங்களை உபயோகித்து வருகிறோம். அதில் பெரும்பான்மையாக மாலில் உள்ள தியேட்டர்களும், பிரபலமான தியேட்டர்களும் மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது.

    ஆனால், ஐபில்க்ஸ் தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் என்ன படம், எத்தனை மணிக்கு திரையிடப்படும் என்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும். பெரிய திரையரங்குகள் முதல், சாதாரண திரையரங்குகள் வரை இதில் பட்டியலிடப்படும். விரைவில் சினிமா டிக்கெட்டுகளை புக்-செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    • ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது.
    • ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார்

    இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் துருவ நட்சத்திரம். நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன் , ராதிகா, சிம்ரன் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு இப்படத்தின் பேச்சு வார்த்தை நடந்து 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு வேலைகளை துவங்கினர். முதலில் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் நடிகர் விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

     

    ஜான் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது. விக்ரம் 'பேஸ்மண்ட்' என அவருக்கென் ஒரு தனி அதிரடிப் படையை வைத்துள்ளார். அந்த படையை வைத்து தீவிரவாதி கும்பல்களை ரகசியமாக தாக்குகிறார் அரசாங்கத்திற்கு தெரியாமல் என்பதே கதைக்களம்.

     

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார். போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்துக் கொண்டு இருக்கும் வேலையில் கோவிட் 19 வந்ததால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. 2023 ஆண்டு நவம்பர் மாதம் படத்தை வெளியிடத்திட்டமிட்டனர் ஆனால் படத்தை அந்த தேதியில் வெளியிட முடியவில்லை. நீடித்த நிதி மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, படம் வெளிவராமல் உள்ளது.

     

    இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் படக்குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகிறது.

    இம்முறையாவது படம் வெளியாகும் என ரசிகர்கள் மிக எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
    • தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்

    பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில்அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அப்படத்தின் டைட்டில் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக படக்குழுவுனரிடம் இருந்து வெளியிடப் பட்டுள்ளது. படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.




     


    • நடிகை ஷ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர்.
    • அதன் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர்

    தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என LCU யூனிவர்ஸ் என்ற ஒரு கான்சப்டை உருவாக்கினார்.

    இதற்கு முன் கமலஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாட பெற்றது. கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    மார்ச் 14 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகெராஜ் நேற்று இரவு தன் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் நடிகை ஷ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர். அதன் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். இப்பாடலை ஷ்ருதிஹாசன் எழுதி, பாடி அதை இயக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
    • நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.

    இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிகிறது. விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று முதுமை தோற்றமும் மற்றொன்று இளமை தோற்றம் ஆகும்.

    நடிகர் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என்று பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மே மாதம் படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திரிஷா கோட் படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் இப்படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.

    2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்திற்கு அடுத்து நடிகை திரிஷா மீண்டும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




     


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார்.
    • பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்

    தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென் ஒரு ஸ்டைல் இருக்கும். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் எடுத்த படத்திலயே அதிக வசூலை அள்ளி குவித்த படம் லியோ. மார்வல் யூனிவர்ஸ், டி.சி யூனிவர்ஸ் போன்ற கான்செப்டுகளை ஹாலிவுட் படங்களிலே நாம் பார்த்து இருப்போம். தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என LCU யூனிவர்ஸ் ஒரு கான்செப்டை உருவாக்கினார். இதற்கு முன் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்டது. கமலின் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம்.

    அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார். சமீபத்தில் விஜய்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஃபைட் க்ளப்'படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்தார். இதுவே அவர் தயாரித்த முதல் படம்.

     

    இன்று (மார்ச் 14) பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். லோகேஷின் நண்பரான இயக்குனர் ரத்னகுமார், நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை ஸ்ருதிஹாசன்  அப்போது உடனிருந்தனர். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன்.
    • தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார்.

    சென்னை, போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் வந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் சிவகார்த்திகேயன்.இன்று சந்தித்துப் பேசினார்.

    தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா போன்றோரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு நிகராக சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் ஈட்டி வருகிறது.

    சமீபத்தில் வெளியான அயலான் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அயலான் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அமரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலை கொடுத்து ஒடிடி-ல் வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்தார். இந்த பேன்ஸ் மீட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார். இந்நிலையில் முழு நேரமாக அரசியலில் இறங்கவுள்ளதால் இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    ஆதலால் விஜயின் இடத்தை பிடிக்கவே சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது. மேலும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கி தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அது போலவே அரசியலில் சிவகார்த்திகேயன் வருவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்
    • மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் "விடா முயற்சி" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம்.

    அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் மைதானத்தில் உட்கார்ந்து விளையாட்டை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அஜித் குமார் அவர் மகனான ஆத்விக்கிற்கு ஷூ கடையில் அமர்ந்து ஷூ மாட்டி விடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    'உங்களால் ஜெயிக்க முடியாது' என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அது நாம் தான் " என்ற தலைப்பில் பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • உலக அளவில் 'பாக்ஸ் ஆபிஸ்' கலெக்‌ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.
    • மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்களில் வெளியாகவுள்ளது.

    பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான படம் 'ப்ரேமலு'. இந்த படம் வெளியான சில வாரங்களில் மக்கள் மனதை வென்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி, விஷ்ணுவிஜய் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மலையாள சினிமாவின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து மார்ச் 8 ஆம் தேதி வெளியிட்டனர். தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல திரையரங்குகளில் இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டு இருக்கிறது. உலக அளவில் 'பாக்ஸ் ஆபிஸ்' கலெக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து ப்ரேமலு தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியாகவுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்களில் வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறது.

    மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மொழியிலும் ப்ரேமலு படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×