என் மலர்
நீங்கள் தேடியது "Superhero"
- அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி பாய்ஸ்' தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- சூப்பர் ஹீரோக்கள் வில்லன்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதே இந்த தொடரின் ஒன்லைன்.
2019-ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி பாய்ஸ்' தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் ஹீரோக்கள் வில்லன்களாக இருந்தால் எப்படி இருக்கும் என வித்தியாசமான யோசனையில் உருவான இந்த தொடர் பெரும் வெற்றி பெற்று அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி சக்கை போடு போட்டது.
சூப்பர்மேன் பவர் கொண்ட ஹோம்லேண்டர் என்ற வில்லனை கொலை செய்ய பில்லி பட்சர் என்ற டீம் முயற்சிப்பதே இந்த தொடரின் முக்கிய ஒன்லைன்.
இந்நிலையில், 'தி பாய்ஸ்' தொடரின் இறுதி சீசன் ஏப்ரல்-8 வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த் சீசனிலாவது ஹோம்லேண்டர் கொல்லப்படுவாரா என்று தி பாய்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் இடஙக தொடரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது
- மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'பாம்'. இதில் நடிகர் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் தாஸின் புதியபட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நடிகை தேஜு அஷ்வினி நடிக்கவிருக்கிறார்.
மேலும் நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு சூப்பர் ஹீரோ என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






