என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி"

    • மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளது
    • 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது

    மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து அதற்கு பதிலாக விபிஜி ராம்ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ இரத்து செய்து, அதற்குப் பதிலாக Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G), 2025 சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும், கடுமையான எதிர்ப்பையும் தெரிவிப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உருவாக்கச் (MGNREGA) சட்டமானது இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்தை கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், இந்தத் திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமார் 12,000 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    2021-22 முதல் 2024-25ஆம் ஆண்டுவரை, சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலையை வழங்கியுள்ளதாகவும், 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாசனத்திற்கு ஜீவ நதிகள் இல்லாத பகுதிகளிலும், விவசாயப் பகுதிகளில் மழை குறைவாக பெய்யும் காலங்களிலும், பட்டியல் இன மக்கள் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்தகைய வேலை முறையே வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சட்டமுன்வடிவு மாநிலங்களின் நிதியையும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தேவை அடிப்படையிலான ஒதுக்கீட்டிலிருந்து விநியோக அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு மாறுதல்:

    இந்த சட்டமுன்வடிவில், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாநிலவாரியான திட்ட ஒதுக்கீடுகளை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. இது செலவினங்களுக்கு வரம்பு விதித்து, கூடுதல் செலவுகளை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும் கோருவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தேவை அடிப்படையிலான தன்மையிலிருந்து மாறுபடுகிறது. காலநிலை மற்றும் புவியியல் காரணங்களால் தேவை அதிகமாக உள்ள தமிழ்நாட்டில், இத்தகைய நிர்ணயம் (உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடுவர்) வேலை நாட்களையும் கூலியையும் குறைத்து, கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும்.

    மாநிலங்கள் மீது அதிகரிக்கும் நிதிச்சுமை:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது, மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

    அதிகப்படியான மையப்படுத்தல்;

    இந்த சட்ட முன்வடிவின்படி வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளை அறிவிக்கவும், திட்டங்களை தேசிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள், கிராம ஊராட்சிகளின் பரவலாக்கப்பட்ட திட்டமிடலைக் குறைத்து, அடிமட்ட ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன.

    மகாத்மா காந்தியின் பெயரை நீக்குதல்:

    MGNREGA திட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரப்பரவல் பற்றிய தொலைநோக்குப் பார்வையை சிதைக்கும் வண்ணம் உள்ளது.

    எனவே, மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படையான தன்மையை மாற்றி, அதை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் வகையிலும், வரவுசெலவுத் திட்ட வரம்புக்குட்பட்ட ஒரு திட்டமாக மாற்றும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் இந்த சட்டமுன்வடிவானது மாநிலங்களின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கான வாய்ப்பைக் குறைப்பதுடன் ஜனநாயகத்தை மேம்படுத்த தடையாக அமைந்துவிடும் என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கட்டிக்காட்டியுள்ளார்.

    ஆகவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவானது கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்து, தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, 2025 விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவினை செயல்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசை தாம் வலியுறுத்துவதாகவும் அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, திருத்தங்கள் மூலம் வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது மற்றும் விவசாயப் பருவகால இன்னல்களைத் தவிர்ப்பது போன்ற பிற நேர்மறையான அம்சங்களை சேர்த்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த வேண்டும் என்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தனது கடிதத்தின் வாயிலாக பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளதுடன் நாட்டின் கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு வலுவான, தேவை அடிப்படையிலான வாழ்வாதாரமாகத் திகழும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்வதை உறுதிசெய்திடும் பணியில் தமிழ்நாடு ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?
    • கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிறவன் கிடையாது

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வாய் திறக்காதது குறித்து பேசியிருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,

    "கம்முனு இருக்கவேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும். கும்முனு இருக்கவேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும். இது விஜய் கூறியது. அரசியலில் அப்படி இருக்க முடியுமா? எப்படி இருந்தாலும் பேசவேண்டிய இடத்தில் பேசினால் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போது நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை(விஜய்யை) நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள்? தவறு என்றால் தவறு எனக்கூறவேண்டும். சரி என்றால் சரி எனக்கூறவேண்டும். பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த தவெக நிர்வாகி அருண்ராஜ், "அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்" என்று கூறினார். 

    இந்நிலையில் அருண்ராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, "இந்த அண்ணாமலை என்கின்ற நாயின் வாலை நிமிர்த்தமுடியாது. இந்த வால் அப்படித்தான் இருக்கும். ஏனெனில் இது உண்மையை பேசுகின்ற நாய். இது ஜால்ரா அடிக்கும் நாய் கிடையாது. கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிற நாய் இல்லை. இந்த நாயின் வால் வளைந்துதான் இருக்கும். இந்த நாய் அப்படித்தான் பேசும். அதற்காக எது வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும். மோடியின் நன்றியுள்ள நாய் இது.

    சினிமா நடிகர்களுக்கு ஜால்ரா அடிப்பதற்காக நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவில்லை. நான் ஒரு உன்னதமாக கோட்பாட்டிற்காக வந்துள்ளேன். இந்த வால் இப்படித்தான், நெலிந்து வளைந்துதான் இருக்கும். வருகின்ற காலத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்கத்தான் போகிறேன். ஆனால் மக்களுக்காகத்தான் அதனை சந்திக்கிறேன். அதனை பெருமையாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்கவேண்டும் என்றால் அந்தப் பதவி எனக்கு தேவையில்லை. அது என் மயிறிழைக்கு சமம்" என தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் 50-60 கோடி மக்கள் தான் இந்தி மொழி பேசுகினறனர்.
    • இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்

    சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் . டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் புதின் பங்கேற்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய பயணத்தை மேற்கொண்டார்.

    இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், இந்திய வருகை குறித்து பேசிய புதின், "சில நாட்களுக்கு முன் இந்தியா சென்றேன். சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை, 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். அங்கு ஒரு மொழி பேசும் மக்கள் குறித்து இன்னொரு மொழி பேசும் மக்களுக்கு தெரியாது. ஆனால் இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்" என்று தெரிவித்தார். 

    • இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. அமைதியின் பக்கம் உள்ளது.
    • உக்ரைன் போர் தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறோம்.

    ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் வந்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில், உலக அமைதி, மனிதநேயத்திற்கான காந்தியின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஒத்துழைப்பு, அமைதி கொள்கைகளை உறுதியாக நிலைநாட்டியவர். பூமிக்கு மிகுந்த செல்வாக்கை சேர்த்த மகத்தான தத்துவ ஞானிகளில் ஒருவர் காந்தி. நவீன இந்தியாவின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவர் ஆவார் என்று எழுதி கையெழுத்திட்டார்.

    பின்னர் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் பேசிய பிரதமர் மோடி, 

    உங்களின் (புதின்) இந்திய வருகை மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது. தனிப்பட்ட முறையில் உங்களுடனான எனது உறவுகள் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள், ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். இந்தியா-ரஷியா உறவுகள் வளர்ந்து புதிய உயரங்களை தொட வேண்டும். உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை விரும்புகிறோம். நாங்கள் எப்போதும் அமைதியை ஆதரிக்கிறோம். இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. மாறாக இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. இது போருக்கான காலம் அல்ல. அனைவரும் அமைதி பாதையில் செல்ல வேண்டும். அமைதி பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயன் அடையும்.


    இந்தியாவில் அதிபர் புதின்

    அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். சில நாட்களாக நடந்து வரும் அமைதிக்கான முயற்சிகள் மூலம் உலகம் அமைதிக்கு திரும்பும் என்று நான் நம்புகிறேன். பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பேசிய புதின், "இந்தியா-ரஷியாவின் உறவு நம்பிக்கை மூலம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் போர் தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண நாங்கள் பணியாற்றி வருகிறோம். போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா அளிக்கும் பங்களிப்பை பாராட்டுகிறோம். நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    ரஷியாவும் இந்தியாவும் ராணுவத் துறையிலும், விண்வெளி மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற துறைகளிலும் ஒத்துழைப்புகளை கொண்டு உள்ளன. இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் முன்னேற திட்டமிட்டுள்ளோம்." எனக் கூறினார். 

    மாநாட்டில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இதில் இருநாடுகளின் உயர்மட்ட குழுவினரும் உடன் இருந்தனர். இரு தலைவர்களும் பல்வேறு துறைகள், வர்த்தக பற்றாக்குறை மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதனைத்தொடர்ந்து இன்று இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. பின்னர் இன்று இரவு 9 மணிக்கு புதின் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்படுகிறார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணைய் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    பின்னர் இதுதொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது முக்கியத்த வம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம்.
    • நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இருநாள் அரசுமுறை பயணமாக இந்த வாரம் (டிசம்பர் 4-5) இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

    புதினின் இந்தியப் பயணம் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான உறவு குறித்தும் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

    "ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உறவு என்பது வெறும் ராஜாங்கரீதியானது மட்டுமல்ல. இந்த இருதரப்பு உறவு, பரஸ்பர புரிதலின் ஆழமான வரலாற்று பின்னணியில் அமைந்தது. இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம். அதேநேரத்தில், இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய தொடர்புகளில் இந்தியாவின் நட்புரீதியான நிலைபாடுகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 

    இருநாடுகளும் அவரவர்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம், அவை பெரும்பாலான துறைகளில் உண்மையில் ஒத்துப்போகின்றன. பாதுகாப்புத் துறையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நினைவில் கொள்வோம். இது வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல. உயர் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் ஆகும். சந்தை மதிப்பில், இந்தியாவிற்கு எண்ணெய் சப்ளை செய்யும் முக்கிய விநியோகஸ்தராக ரஷ்யா இருக்கிறது.

    இந்த வர்த்தகம் இந்தியாவிற்கு பெரும் நன்மை பயக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இது இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. மூன்றாம் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் நமது வர்த்தக தொடர்புகளை கட்டமைக்கவேண்டும். நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம். புதினின் வருகையின்போது இதுகுறித்து ஆலோசிக்கப்படும். இந்தியாவில் இருந்து நிறைய பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகிறோம். அதற்கான ஒரு நிகழ்வாக இது அமையும்" என தெரிவித்தார்.  

    • அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது.
    • மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா?

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடி தான் எங்கள் டாடி என்று பேசியது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்த நிலையில் 'மோடி தான் எங்கள் டாடி' என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பேசியுள்ளார்.

    சிவகாசியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது. மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா? மத்திய அரசில் இருப்பது உங்க ஐயா இல்லை. எங்கள் ஐயா மோடி தான் இருக்கிறார். எங்கள் டாடி தான் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

    • LIC இன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதி முதலீடு.

    அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

    2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது" மற்றும் "மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.

    இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.

    நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?

    2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

    முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது.
    • அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம்.

    ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் இத்தயாரிப்பிற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.

    மின்னணு சிப் தயாரிப்பில் இந்தியாவை உலகின் ஒரு முக்கியமான மையமாக உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற "செமிகான்இந்தியா 2025" மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் பேசிய மோடி, "உலகம் இந்தியாவை நம்புகிறது, உலகம் இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்கத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்று நான் இங்கே இருக்கிறேன். அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது, ஆனால் 'சிப்'கள் டிஜிட்டல் வைரங்கள். நமது கடந்த நூற்றாண்டு எண்ணெயால் வடிவமைக்கப்பட்டது... ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது. இந்த சிப்உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்தார்.

    • நவம்பர் மாதத்தில் டெல்லியில் குவாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
    • குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரவிருந்தார்

    குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியா வர இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனையால் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவரும் நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையீ இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிற்கு டிரம்ப் 50% வரிவிதித்தார்.

    இந்நிலையில், ஷாங்காய் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி.
    • மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு மோசடி செய்தது

    காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு டெல்லியில் இன்று நடை பெற்றது.

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தை மீண்டும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக ராகுல்காந்தி பேசியதாவது:-

    தேர்தல் முறையை பற்றி நான் சமீப காலமாகப் பேசி வருகிறேன். 2014 முதலே ஏதோ தவறு இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்து வந்தது.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் மராட்டியத்தில் ஏதோ நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். 4 மாதங்களுக்குப் பிறகு நடை பெற்ற சட்டசபை தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை, அழிக்கப்பட்டோம். அங்கு 3 வலிமையான கட்சிகள் திடீரென்று காணாமல் போய் விட்டன.

    மராட்டிய தேர்தல் தோல்விக்கு பிறகு தேர்தல் முறைகேடு குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கி னோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் இடையே ஒரு கோடி புதிய வாக்காளர்கள் தோன்றினார்கள். அந்த வாக்குகளில் பெரும் பகுதி பா.ஜ.க.வுக்கு சென்றது.

    தற்போது எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன், எங்களிடம் ஆதாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது சமரசம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். சில நாட்களில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மோசடி செய்து வெற்றி பெற்ற தற்கான ஆதாரத்தை வெளியிடுவோம். 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள்.

    உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. நாட்டில் தேர்தல் ஆணையம் என்ற நிறுவனம் இல்லை. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் மோடி. 15 இடங்கள் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.

    15 தொகுதி மோசடியால் பிரதமராகி விட்டார். 15 முதல் 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்ததாக கருதுகிறேன்.

    நான் ஒரு ராஜாவாக இருக்க விரும்பவில்லை. நான் ஒரு ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் இந்த ராகுல்காந்தி.

    மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான் போராடிக் கொண்டிருந்தபோது அருண் ஜெட்லியிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. போராடினால் என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. யாருடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை என பதிலளித்தேன்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    இந்த மாநாட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்த் சிங் சுக்லா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

    • இன்றுவரை தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை அல்லது சுட்டுக் கொல்லப்படவில்லை.
    • உளவுத்துறை தோல்வியடைந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் அறிக்கையை வெளியிட்டார்.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மேல் சபையில் எதிர்கட்சி தலை வரும், காங்கிரஸ் தலைவரு மான மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விதி 267-ன் கீழ் நான் நோட்டீஸ் அளித்துள்ளேன். இன்றுவரை தீவிரவாதிகள் பிடிக்கப்படவில்லை அல்லது சுட்டுக் கொல்லப்படவில்லை. அனைத்து தரப்பினரும் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர்.

    என்ன நடந்தது என்பதை அரசு எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உளவுத்துறை தோல்வியடைந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் அறிக்கையை வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தலையீட்டால் மட் டுமே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறை கூறியுள்ளார். அவர் மீண்டும் மீண்டும் கூறுவது நாட்டுக்கு அவமானகரமானது.

    இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே பேசினார்.

    இதற்கு பதில் அளித்து பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா கூறும் போது, 'இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது.எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடிப் போக மாட்டோம்' என்றார்.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மறுக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மேல் சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    12 மணிக்கு பிறகு அவை கூடியதும் இதே பிரச்சி னையை எதிர்க்கட்சிகள் கிளப்பினார்கள்.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்ககோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக மாணவி புகார் தெரிவித்திருந்தார்.
    • இந்த புகார் குறித்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.

    அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். மருத்துவமனையில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

    இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

    இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை. தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. மாறாக அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார். அவளை பாதுகாக்க வேண்டியவர்களே அவளை சுக்குநூறாக உடைத்தார்கள்

    இது தற்கொலை அல்ல. இது அமைப்பின் திட்டமிட்ட படுகொலை. மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள். நாட்டிற்கு உங்கள் மௌனம் தேவையில்லை. பதில்தான் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை" என்று தெரிவித்துள்ளார். 

    ×