search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏமாற்றம்"

    • சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
    • இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்பரித்து கொட்டி செல்லும். இதனால் கொடிவேரி தடுப்பு அணையில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக அருகே உள்ள பகுதிகளான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இதனால் இந்த தடுப்பணைக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயிலின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 1 மாதத்துக்கும் மேலாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 80 அடிக்கு மேல் நீர் இருந்தது. அது படிப்படிாக குறைந்து தற்போது 47 கன அடி மட்டுமே உள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணைக்கும் நீர் வரத்தும் குறைந்தது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் இல்லாமல் வரண்டு பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து தடுப்பணைக்கு சென்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாறைகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர். ஒரு சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது, சவால்கள் நிறைந்தது.
    • ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை.

    முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

    ஏமாற்றங்களும், பிரிவுகளும், இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்த தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.

    மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், சுற்றத்தை விட்டு விலகுவார்கள், நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள், வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

    இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு மேலோங்கி உள்ள பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பள்ளி குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள் இதோ....

    மனஅழுத்தம்:

    சில வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் எண்ணிக்கையை குறைக்கலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் நாம் வேலை என்றே ஓடி கொண்டிருக்கிறோம். நம்மை நாமே பார்த்துக்கொள்ள கூட நேரமிருப்பதில்லை.

    சிறிதும் ஓய்வின்றி வேலைகள் செய்வதால் கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. வயதிற்கு மீறிய சுமைகளை அவர்கள் மீது சுமத்தும் போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை. இதனை விரட்ட சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும்.

     தவிர்க்கும் முறை:

    * உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். தினமும் காலையில் மூச்சு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து உடலும் மனமும் லேசாகும்.

    * வீட்டிலேயே முடங்கி கிடப்பதை விட்டுவிட்டு சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனித்துக் கொண்டு நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் சற்று குறையும்.

    * ஓய்வாக இருக்கும் வேளைகளில் உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். இது மனதிற்கு ஆறுதல் அளிப்போதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    * மனஅழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது வயிறு குலுங்க சிரிப்பதால் அந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். எனவே வயிறு குலுங்க சிரித்து பழகுங்கள். மனஅழுத்தம் குறையும். உங்களை சிரிக்க வைப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களிடம் அதிகமாக பழகுங்கள்.

    * இனிப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு வருவதால் மனஉளைச்சலை தூண்டும் ஹார்மோன்கள் குறைக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் போன்ற இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும்.

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    சர்வதேச ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் , கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. அதேபோல் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் வந்த குழுவில் பலர் இடமாறி சென்றுவிட்டனர். பலமணிநேரம் கழித்து ஒருவரையொருவர் தேடிபிடித்து கண்டுபிடித்த நிலையில் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்யவில்லை என தெரியவந்தது. மீண்டும் வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி புண்ணிய தலமாக விளங்குவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பின்னர் தங்கள் யாத்திரையை தொடங்குவது வழக்கம். சுருளி மலைப்பகுதியில் ஐயப்பன்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சபரிமலையில் செய்யப்படும் கலசபூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம், மண்டலஅபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.


    இதனை அறிந்து சென்னையில் இருந்து சாமி தரிசனம் செய்யமுடியாமல் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சுருளியில் உள்ள ஐயப்பன்கோவிலில் நெய்தேங்காயை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷகேம் செய்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் சபரிமலைக்கு யாத்திரை வருகிறோம். ஆனால் இந்த ஆண்டுபோல எப்போதும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியதே கிடையாது. எங்களை போன்றே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்யமுடியவில்லை.

    இதனால் ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டள்ளது. போலீசாரின் கெடுபிடியால் 18-ம் படியை கூட தொட முடியவில்லை. ஆன்லைன் முன்பதிவு என்ற பெயரில் பக்தர்கள் தடுக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தது போலவே சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும். 2 நாள் தங்கிஇருந்துகூட ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் முடிவுசெய்வார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
    • வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

    ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.

    இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-

    வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.

    சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.

    • பெருஞ்சாணியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தம்
    • அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கின்றன. அணைகள் நிரம்பி வழிவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.

    அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணை யில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வரு கிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருவதால் கோதை யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கோதை யாற்றின் கரையோர பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டு உள்ளது. சிற்றாறு, பேச்சிப் பாறை அணைகளில் இருந்து மட்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவும் குறைக்கப் பட்டு உள்ளதால் கோதை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது.

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி சுற்று லா பயணிகள் ஏராளமா னோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற் றத்துடன் திரும்பி சென்ற னர். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.98 அடியாக இருந்தது. அணைக்கு 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உள்ளது. அணைக்கு 509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 15.78 அடியாக உள்ளது. அணைக்கு 244 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 234 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    • தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது.
    • சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது.

    தக்கலை, நவ.24-

    தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. கன மழையின் காரணமாக உதயகிரி கோட்டை பகுதி யில் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது. மேலும் மான்கள் நின்று கொண்டிருக்கும் பகுதி யிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு நின்ற மான்கள் கடும் அவதிக்கு ஆளானது. சிறுவர் பூங்காவிலும் தண்ணீர் புகுந்து சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையில் அந்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. மான்களில் நின்று கொண்டிருக்கும் பகுதியில் இருந்து தண்ணீர் மட்டும் சிறிது வடிந்துள்ளது. ஆனால் அந்த பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சிறுவர் பூங்கா மற்றும் செல்பி பாயிண்ட் பகுதியில் தண்ணீர் வடியாத நிலை யிலேயே இருந்து வருகிறது. இன்று காலையில் உதயகிரி கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    ஆனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். உதயகிரி கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே உடனடியாக உதயகிரி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மாற்ற நடவ டிக்கை எடுப்பதுடன் நிரந்தரமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண் ணம் வடிகால்களை அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சேலத்திற்கு கடத்தி சென்றுள்ளார்
    • விக்னேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதை அறிந்த அந்த சிறுமி மனமுடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவினாசி,ஆக.2-

    லால்குடியை சேர்ந்த செல்வநாயகம் மகன் விக்னேஷ்.(26) இவருக்கு திருமணமாகி வைஷ்ணவி (23) என்ற மனைவியும் மற்றும் 4 வயதில் ஆண்குழந்தையும் உள்ளது இவர் தனது குடும்பத்துடன் அவினாசியில் தங்கி அங்குள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவினாசி மங்கலம் ரோட்டில் வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சேலத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் தனது பெற்றோரை பார்க்க அவினாசி செல்லலாம் என்று அந்த சிறுமியை கூட்டி வந்து அவர்களது வீட்டின் அருகில் விட்டுவிட்டு எனது வீட்டிற்கு சென்று 2 நாட்களில் மீண்டும் உன்னை கூட்டிசெல்வதாக அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சென்றுவிட்டர்.

    இந்தநிலையில் விக்னேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதை அறிந்த அந்த சிறுமி மனமுடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெற்று வருகிறது.
    • கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடை ந்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கோவை-சேலம் பயணிகள் ரெயில் (எண்.06802) மற்றும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (எண்.06803) சேவை இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    10-வது முறையாக ப யணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    • இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது.
    • பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷ வழிபாட்டுக்காக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளிலேயே காட்டு தீ பரவியதால் அதன் பின்னர் மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறையில் திரண்டனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்தில் காத்திருந்தனர்.

    இந்நிலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 5 மற்றும் 6 பீட் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டு தீ பரவியது. தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிந்து வந்த தீ இன்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் பாதுகாப்பு காரணமாக பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக 4 நாட்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்றும் பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றுடன் அனுமதி முடிவடைந்ததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனால் தணிப்பாறை அடிவார பகுதியிலேயே முடி காணிக்கை எடுத்தல் பொங்கல் வைத்தல் தேங்காய் பாலம் உடைத்தல் உள்ளிட்ட தங்களது நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தி விட்டு ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

    • விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
    • 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.

    ஆத்தூர்:

    கடந்த பொங்கல் பண்டிகையை யொட்டி, ஜனவரி மாதம் 11-ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

    இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட ஆத்தூரில் உள்ள கேசவன், என்.எஸ், பத்மாலயா, பிரியாலயா, விஸ்வநாத் ஆகிய 5 திரை யரங்கு உரிமையாளர்க ளிடம் விளக்கம் கேட்டப் பட்டது. ஆனால் திரைய ரங்கு உரிமை யாளர்கள் முறையாக பதில் அளிக்காததால், இந்த 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில் இன்று வழக்கம்போல் 5 திரையரங்குகளிலும் காலை காட்சிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுத்து திரை யரங்கில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தாசில்தார் தலைமைலான அதிகாரிகள், உடனடியாக படத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டு, திரையரங்கில் இருந்த ரசிகர்களை வெளி யேற்றினர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே சென்றனர்.

    • தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
    • தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த காவரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசா யிகள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் எம்.அர்ச்சுனன் கூறியதாவது:-

    காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு 14.2.21-ல் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் விராலிமலை அருகில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    காவிரி ஆற்றின் கரூர் மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை, தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் முதல் நிலையாகவும், தெற்கு வெள்ளாறில் இருந்து வைகை ஆறு வரை 108 கிலோமீட்டர் 2-ம் நிலை யாகவும், வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி புதுப்பட்டி குண்டாறு வரை 34 கிலோமீட்டர் 3-ம் நிலையாகவும் என மொத்தம் 260 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த கால்வாய் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்திற்கு 2021-22 அ.தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டது.

    2022-23-ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மாயனூர் ஜீரோ பாய்ண்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை 4 பேக்கேஜ்கள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நடப்பு 2023-24 பொது பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.

    நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த 7 மாவட்ட விவசாயிகளுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பட்ஜெட் விவாதத்தின் போது காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதல்நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துபாயில் வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ. 30 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (62). இவரது மருமகன் மணிவண்ணன். இவர் ஓசூரில் ஓட்டல் ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இந்த நிலையில் சுப்புராஜூக்கு மதுரை அழகப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி (60), கங்காதேவி (56), ஸ்ரீராம் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வெளிநாடுகளில் நண்பர்கள் உள்ளதாகவும், மருமகனுக்கு துபாய் ஓட்டலில் வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசைவார்த்தை கூறி நம்பவைத்துள்ளனர்.

    அதன்பின்னர் வேலை வாங்கித் தருவதற்கு ரூ.30 லட்சம் தேவைப்படும் என்றும், உடனடியாக வேலை வாங்கிவிடலாம் என்றும் கூறியுள்ளனர். சுப்புராஜூம் அவர்களிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. இது குறித்து விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் சுப்புராஜ் வழக்கு தொடர்ந்தார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஐகோர்ட்டு உத்தரவுப் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்புடைய 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ×