search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUSIDE"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி உறையூரில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி உறையூர் தெருவை சேர்ந்தவர் மணி ( வயது 56). டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பரிமளா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் திருச்சி வண்ணார்பேட்டையில் தங்கி பாலக்கரை தனியார் நிறுவனத்தில் சேலம் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் திடீரென மயங்கி விழுந்தார் .உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துறையூர் அருகே அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
    • தலை சுற்றல் நோய் காரணமாக பரிதாப முடிவு

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராசு (46). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி (36) என்கிற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரிக்கு தலை சுற்றல் நோய் இருந்ததாகவும், இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்ததா கவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று தலை சுற்றல் அதிகமாக இருந்ததால் விரக்தி அடைந்த புவனேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளார். இதனால் அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் புவனேஸ்வரியை மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக துரைராசு கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே தலை சுற்றல் நோய் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் குடும்ப தகராறு காரணமாக என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர், ஜமாலியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மகன் நிர்மல் குமார் (வயது 33). இவர் சென்னையில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் பத்மஸ்ரீ (செவிலியர்) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆகி சமீரா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளார்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மல் குமார் பெரம்பலூருக்கு வந்தார்.

    அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி பத்மஸ்ரீ கோவித்துக் கொண்டு வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் மது போதையில் தனது வீட்டில் இருக்கும் துண்டை எடுத்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    இதைக் கண்ட மனைவி சத்தம் போட மேல் வீட்டில் இருந்த நிர்மல் குமாரின் தாயார் சாந்தி என்பவர் கீழே வந்து பார்த்து கத்தியால் துண்டை அறுத்து மகனை கீழே இறக்கி உள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டிற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மல் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதைக்கு அடிமையாகி வெளிநாட்டில் வேலை இழந்து ஊர் திரும்பிய பெரம்பலூர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ேவப்பந்தட்டை தாலுக்கா வெண்பாவூர் பிரிவு சாலை பகுதியை சேர்ந்தவர் ராம ராஜ் (வயது 33).இவரது மனைவி மல் லிகா. இவர்களுக்கு ராகவன் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.இந்த நிைலயில் ராமராஜ் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, இறந்தவரின் உறவினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் கூறுகையில்,வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த ராமராஜ், அங்கு போதைக்கு அடிமை யான தோடு சரியாக வேலை க்கு செல்லாமல் இருந்து ள்ளார். இதனால் வேலை செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியு ள்ளது.இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெர ம்பலூர் திரும்பிய அவர், மன விரக்தியில் வீட்டிற்கு செல்ல தயக்க த்தில் தற்கொலை செய்து கொண் டிருக்கலாம் என தெரிய வருகிறது. தற்கொலைக் கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்ற னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உப்பிலியபுரம் அருகே கல்லூரி மாணவி திடீர் தற்கொலை செய்து கொண்டார்
    • உப்பிலியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    உப்பிலியபுரம்,

    உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பகுதியில் உள்ள கானப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், விவசாயி. இவரது மகள் ஜனனி (வயது 18). இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டிற்கு வந்த ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது தாத்தா மாலை வேளையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஜனனி தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் செபாஷ்டின் சந்தியாகு போலீசாருடன் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜனனி தற்கொலைக்கு காரணம் என்ன? கல்லூரியில் ஏதும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி வயலூர்ரோடு கோப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் நவீன்(வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெயிண்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவீன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடை பகுதியில் மயங்கி கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி ஜங்ஷனில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்
    • காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை

    திருச்சி,

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 39). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.இதனால் அவர் குடும்பத்துடன் திருச்சி கே.கே. நகர் ஓலையூர் ஆரண்யா நகர் அப்துல் கலாம் தெரு பகுதியில் வசித்து வந்தார்.நேற்று இரவு பணிக்கு வந்திருந்த அவருக்கு 1-வது பிளாட்பாரம் ஒதுக்கப்பட்டிருந்தது.அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மஞ்சுநாத் திடீரென 2-வது பிளாட்பார்முக்கு சென்றார்.அப்போது கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த ரெயில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது திடீரென்று மஞ்சுநாத் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.அடுத்த அடுத்த நொடி அவரது உடல் மீது ரயில் சக்கரம் ஏறி இறங்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரெயில் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் ஓட்டம் பிடித்தனர்.உடனே அங்கு பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்த சக ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மஞ்சுநாத் தற்கொலைக்கு காரணம் உடனடியாக தெரியவில்லை. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.தற்கொலை செய்த மஞ்சுநாத்துக்கு நாகலட்சுமி (39) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். தற்கொலை செய்த மஞ்சுநாத்துக்கு நேற்று இரவு 10 மணிக்கு டூட்டி நிறைவடைவதாக இருந்தது. இந்த நிலையில் இரவு 9.45 மணி அளவில் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.இந்த தற்கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் காதலன் ஏமாற்றியதால் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின

    பெரம்பலூர்,

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியா ளராகவும், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பா ளராகவும் பணிபுரிந்து வந் தார்.

    பள்ளியில் நடந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரை மதியத்திற்கு பிறகு காண வில்லை.

    இந்த நிலையில் பள்ளியில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், விடு தியை சுத்தம் செய்வதற் காக கதவை திறந்து பார்த்தபோது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.இது குறித்து தகவல் அறி ந்த பெரம்பலூர் போலீ சார் அங்கு சென்று சுபா ஆடல ரசியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்ப ற்றினர்.

    அதில், என் சாவுக்கு யாரும் காரணமில்லை. தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல் நிலை சரியில்லாத காரணத்தி னாலும், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்று சுபா ஆடலரசி கைப்பட எழுதி, தேதியிட்டு கையொப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் ஆடலரசி தற்கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆடலரசி விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார்.  

    இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற போது தனது காதலன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தார். காதலன் தன்னை ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலாயுதம்பாளையம் அருகே அதிகளவு பிரஷர் மாத்திரை சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்
    • தாய் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அருகே அய்யம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). கூலித் தொழி லாளி. இவரது மனைவி அமலா (48).

    ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் கடந்த 11-ந்தேதி உடல்நிலை சரியாமல் இறந்தார். தாய் இறந்த துக்கத்தில் இருந்து மீளாத ராஜேந்திரன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து ள்ளார். இது குறித்து மனைவி கேட்ட போது அதிகளவு பிரஷர் மாத்திரை களை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, ராஜேந்தி ரனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இருப்பினும் சிகிச்சை பலனின்றிஅவர் உயிர் இழந்தார். இதுகுறித்து அமலா கொடுத்த புகாரின் பேரில், வேலாயுத ம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சி பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • தற்கொலை காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் கமலகண்ணு (வயது 58), விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு கீர்த்திவாசன், பத்மவாசன்ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பாப்பாத்தி பெரம்பலூர் கோர்ட்டில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்திவாசன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்திவாசன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். பத்மவாசன் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். கமலகண்ணு நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த நிலையில் கமலகண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கமலகண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலகண்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print