என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
- குடும்பதகராறில் விபரீதம்
- கட்டிட தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்
கரூர்:
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, சாந்தப்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரவிச்சந்திரன் (வயது 30). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் ரவிச்சந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது மது அருந்திவிட்டு வருவாராம். இதனால் கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த ரவிச்சந்திரன், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற ரவிச்சந்திரன் ஊர் கிணற்றில் குதித்துள்ளார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரவிச்சந்திரனை அரவக்குறிச்சி தீயணைப்புத்துறை வீரர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






