என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை
- குழந்தை இல்லாத கவலையில் தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி குண்டூர் திரு–வளர்ச்சிபட்டி கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 48), தொழிலாளி. இவருக் கும் திலகவதி (35) என்ப–வருக்கும் கடந்த 3 ஆண்டு–களுக்கு முன்பு திருமணம் நடந்தது.தாமதமாக திருமணம் செய்து கொண்ட அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக் கவில்லை. இதனால் பால–சுப்ரமணி மிகுந்த மனசுக்கு ஆளானார்.இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்து எடுத்துக் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே மனைவி அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து–வமனையில் சேர்த்தார். அங்கு சற்று நேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் பாலசுப்பிரமணி பரிதாப–மாக இறந்தார்.இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






