search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலன் ஏமாற்றியதால் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை  - போக்சோவில் வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    காதலன் ஏமாற்றியதால் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை - போக்சோவில் வாலிபர் கைது

    • 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சேலத்திற்கு கடத்தி சென்றுள்ளார்
    • விக்னேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதை அறிந்த அந்த சிறுமி மனமுடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவினாசி,ஆக.2-

    லால்குடியை சேர்ந்த செல்வநாயகம் மகன் விக்னேஷ்.(26) இவருக்கு திருமணமாகி வைஷ்ணவி (23) என்ற மனைவியும் மற்றும் 4 வயதில் ஆண்குழந்தையும் உள்ளது இவர் தனது குடும்பத்துடன் அவினாசியில் தங்கி அங்குள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவினாசி மங்கலம் ரோட்டில் வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சேலத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் தனது பெற்றோரை பார்க்க அவினாசி செல்லலாம் என்று அந்த சிறுமியை கூட்டி வந்து அவர்களது வீட்டின் அருகில் விட்டுவிட்டு எனது வீட்டிற்கு சென்று 2 நாட்களில் மீண்டும் உன்னை கூட்டிசெல்வதாக அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சென்றுவிட்டர்.

    இந்தநிலையில் விக்னேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதை அறிந்த அந்த சிறுமி மனமுடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×