search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mood swings"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது, சவால்கள் நிறைந்தது.
    • ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை.

    முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

    ஏமாற்றங்களும், பிரிவுகளும், இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்த தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.

    மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், சுற்றத்தை விட்டு விலகுவார்கள், நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள், வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

    இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு மேலோங்கி உள்ள பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பள்ளி குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள் இதோ....

    மனஅழுத்தம்:

    சில வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் எண்ணிக்கையை குறைக்கலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் நாம் வேலை என்றே ஓடி கொண்டிருக்கிறோம். நம்மை நாமே பார்த்துக்கொள்ள கூட நேரமிருப்பதில்லை.

    சிறிதும் ஓய்வின்றி வேலைகள் செய்வதால் கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. வயதிற்கு மீறிய சுமைகளை அவர்கள் மீது சுமத்தும் போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை. இதனை விரட்ட சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும்.

     தவிர்க்கும் முறை:

    * உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். தினமும் காலையில் மூச்சு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து உடலும் மனமும் லேசாகும்.

    * வீட்டிலேயே முடங்கி கிடப்பதை விட்டுவிட்டு சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனித்துக் கொண்டு நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் சற்று குறையும்.

    * ஓய்வாக இருக்கும் வேளைகளில் உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். இது மனதிற்கு ஆறுதல் அளிப்போதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    * மனஅழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது வயிறு குலுங்க சிரிப்பதால் அந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். எனவே வயிறு குலுங்க சிரித்து பழகுங்கள். மனஅழுத்தம் குறையும். உங்களை சிரிக்க வைப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களிடம் அதிகமாக பழகுங்கள்.

    * இனிப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு வருவதால் மனஉளைச்சலை தூண்டும் ஹார்மோன்கள் குறைக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் போன்ற இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும்.

    • உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியை செய்கின்றன.
    • அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது.

    வீட்டின் அறைகளை அழகுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாக உள் அலங்காரச் செடிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவை அழகியல் நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டாலும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சில உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றன. அந்த வகையில் மன நிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை சில உள் அலங்காரச் செடிகளுக்கு இருக்கிறது. அமைதிக்கும், மகிழ்ச்சியான மன நிலைக்கும் வித்திடும் அம்சங்களை கொண்ட உள் அலங்காரச் செடிகள் உங்கள் பார்வைக்கு...

    பீஸ் லில்லி

    இதன் பெயருக்கேற்பவே அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. இதில் மலரும் வெள்ளை நிற பூக்கள் மனதை வசீகரிக்கும். உணர்வுகளை சாந்தப்படுத்தும். காற்றின் தரத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

    மணி பிளாண்ட்

    `டெவில்ஸ் ஐவி' என்று அழைக்கப்படும் இதுஅதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இதனை எளிதாக பராமரிக்கலாம். குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரக்கூடியது.

     ஸ்பைடர் பிளாண்ட்

    காற்று மூலம் வீட்டுக்குள் சூழ்ந்திருக்கும் மாசுக்களை நீக்கும் தன்மை இந்தச் செடிக்கு உண்டு. இதனை சிறந்த காற்று சுத்திகரிப்பானாக கருதுகிறார்கள். இது வீட்டிற்கு அழகும் சேர்ப்பதோடு சுற்றுச்சூழலிலும், மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

    கோல்டன் பொத்தோஸ்

    காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களில் சிறந்ததாக கருதப்படும் இது, காற்றில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை உறிஞ்சி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. எத்தகைய கால நிலையிலும் செழித்து வளரும் திறனுடையது. இதனை வளர்த்தால் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஸ்நேக் பிளாண்ட்

    இந்த செடி காற்று சுத்திகரிப்பு பண்புகளை கொண்டது. குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும் திறன் கொண்டது. அதனால் இது சிறந்த உள் அலங்கார தாவரமாக அறியப்படுகிறது. இதனை வீட்டில் வளர்ப்பது அமைதி மற்றும் நேர்மறை உணர்வை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

     கற்றாழை

    பெரும்பாலான வீடுகளில் வீட்டின் வெளிப்பகுதியில் இவை வளர்க்கப்படுகிறது. இதுவும் உள் அலங்காரச் செடிகளுடன் இணைந்துவிட்டது. காற்றை சுத்தப்படுத்துவதோடு பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியது. மேலும் கற்றாழையை வீட்டிற்குள் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.

    லாவெண்டர்

    இது பாரம்பரிய வீட்டு தாவரமாக இல்லாவிட்டாலும் அலங்காரச் செடிகள் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. மற்ற உள் அலங்காரச் செடிகளை போலவே வீட்டிற்குள் செழித்து வளரும். அதன் பூக்கள் வெளியிடும் அமைதியான வாசனை மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதை தளர்வடையச் செய்து இதமான உணர்வை ஏற்படுத்தும்.

    ×