search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phone use"

    • ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத இடமே இருக்காது. பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் சில நன்மையான விளைவுகள் இருப்பினும், பல்வேறு தீய விளைவுகளும் நிறைந்துள்ளது. இதனைப் பலரும் அறிந்தும் ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மக்கள் ஸ்மார்ட்போன் திரையை மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம். ஆய்வு ஒன்றில் வெளியான அறிக்கையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    சிந்திக்கும் திறன் பாதிப்பு

    ஒருவர் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இது அவர்களின் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால், மனச்சோர்வு ஏற்படுவதுடன், சிந்திக்கும் திறன் பாதிப்படையலாம். நீண்ட நேரம் மொபைல் பயன்பாட்டில் இருப்பது அவர்களுக்கு மொபைல் மீதான நாட்டத்தையே அதிகரிக்கிறது. இது மற்ற முக்கியமான விஷயங்களில் செலுத்தப்படும் ஈடுபாட்டைக் குறைக்கிறது.

    உணர்ச்சி ரீதியான நிலையற்றத் தன்மை

    ஸ்மார்ட்போன் பயன்பாடு உணர்ச்சி ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக சமூக ஊடகங்களின் தாக்கம் அவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு உணர்ச்சி ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

    மனச்சோர்வு

    சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பது பயனற்ற தன்மையை அதிகரிக்கலாம். இது இறுதியில் மன அழுத்தத்தைத் தருவதாக அமைகிறது. சமூக ஊடங்களை நீண்ட நேரம் உற்று நோக்குவது மனச் சோர்வை அதிகரிப்பதுடன் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

    குறைவான செயல்திறன்

    நீண்ட நேரமாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களின் செயல்திறனைக் குறைக்கிறது. இது மோசமான செயல்திறனை ஏற்படுத்துகிறது. இதனால் வேலையில் ஈடுபாடு குறைவதுடன், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய செயல்கள் செய்ய முடியாமல் போகலாம். இந்த தாமதமான செயல்பாட்டு மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநலத்தைப் பாதிக்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

    உறவில் சிக்கல்கள்

    தொலைபேசி அடிமையாகி விடுவது குடும்பம் அல்லது பார்ட்னர்களுடனான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மற்றவர்கள் முன்னிலையில் தொலைபேசியைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அவர்களைப் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கலாம். இது உறவுகளுக்குள் பிரச்சனை மற்றும் மோதலை ஏற்படுத்தலாம். அதே சமயம், துணையுடன் நேரடியாக உரையாடுவதைக் காட்டிலும், செல்போன் மூலமாக தொடர்பு கொள்வது உறவின் நெருக்கத்தைக் குறைக்கிறது.

    • அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
    • மின்காந்த கதிர்வீச்சுகள் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம். ஷாப்பிங் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்துமே உட்கார்ந்த இடத்திலிருந்து செல்போன் வைத்து முடித்து விடுகிறோம். ஒரு பக்கம் இதனால் நாம் சோம்பேறியாக மாறினாலும் இன்னொரு பக்கம் நமக்கே தெரியாமல் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஏன்...? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன...? என்பதை பற்றி பார்க்கலாம்.

     செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்த செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

    நாம் குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களை வைத்து சோறு ஊட்டும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டும் இல்லாமல் செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற உதாக்கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

    அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிக அளவு கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது.

    குழந்தைகள் மீது இந்த புற ஊதாக்கதிர்கள் தாக்கும் போது அவர்கள் கண்கள் பாதிப்படையக் கூடும். மேலும் இது தூக்கமின்மை, மூளை செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் நடத்தையை கூட சில நேரங்களில் பாதிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது தெரியாமல் பெற்றோர்கள் பலரும் குழந்தைகள் அழுகையை நிறுத்த பயன்படுத்தும் ஆயுதமாகவே செல்போன் மாறிவிட்டது.

    அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம், மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல் ஏற்படலாம் மற்றும் உடல் செயல்பாடு குறைவதால் உடல் பருமன் மற்றும் மோசமான எலும்பு ஆரோக்கியம் ஏற்படும்.

    செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.

    அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

    • பறிமுதல் செய்யப்படும் செல்போன்களை மீண்டும் ஒப்படைக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோவிலுக்குள் செல்ல கூடாது என பக்தர்களுக்கு அறிவுரை.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து வழிமுறைகளும், திருச்செந்தூர் கோயிலில் மூன்று நாட்களில் அமல்படுத்தப் படும் என கூறினார். 

    எடுத்தவுடன் பறிமுதல் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால், செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று பக்தர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும் என்றார். மேலும் பக்தர்களின் செல்போன்களை வைப்பதற்கு பலகைகள் மற்றும் செல்போன்கள் குறித்து அறிவதற்கான ஸ்கேனிங் மெஷின் போன்றவை ஆர்டர் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    அதேபோல் பக்தர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோயிலுக்குள் செல்ல கூடாது என்பது உள்பட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பக்தர்களிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×