search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prohibited"

    • பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
    • தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான தீர்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அரசாணை நிலை எண் 84-ன்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2018-ல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

    எனவே, அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டின் அறிவுரைகளை முறையாக செயல்படுத்தும் பொருட்டு, நீலகிரி மாவட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் கொண்டு வர வேண்டாம் எனவும், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி வரும்படி தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் எனவும், தடையையும் மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக மூடி முத்திரையிடப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் முழுவதுமாக பின்பற்றி நீலகிரி மாவட்டத்தினை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அருணா கூறியுள்ளார்.

    • மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு
    • கூட்டஅரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகை ஏந்தியபடி போராட்டம்

    கோவை,

    கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா நேற்று தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 47-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் பேசும்போது மாநகராட்சி அலுவலக பராமரிப்பு பணிக்கு ஆண்டுக்கு ரூ.48.80 லட்சம் நிதி ஒதுக்குவதாக தீர்மானம் நிறைவே ற்றப்பட்டு உள்ளது. இது அதிகம் எனவே இந்த தீர்மானத்தை நிறுத்து வைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசியதாவது:-

    கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்கினீர்களோ அதே தொகை தான் இப்போதும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

    ஆனால் அதி.மு.க. கவுன்சிலர் பிரகாகரன் மேயர் பதிலை ஏற்காமல் தொடர்ந்து விமர்சனம் செய்யும் நோக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.

    இதனையடுத்து மேயர் கல்பனா அவையை நடத்த விடாமல் இடையூறு செய்தாக கூறி அடுத்து நடைபெற உள்ள 3 மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன், கூட்ட அரங்கு முன்பு நின்று கோரிக்கை அடங்கிய பதாகையை ஏந்தி நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்து வரும் வீரர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

    காங்கயம்:

    முத்தூர் அருகே வள்ளியரச்சல் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    நாமக்கல்,ஏப்.23-

    பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சண்முகம் மற்றும் ஏட்டுகள் பிரவீன், சரவணன் ஆகி யோர் சின்னார்பாளையம் அருகே, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் போலீசார் வீட்டில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது சம்மந்தமாக, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விசாரணையில் வடமா நிலத்தை சேர்ந்த வாலி பர்கள் வெப்படை பகுதி யில், வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டு உரிமையாளர் முருகேஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமு தல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அதனை பதுக்கி வைத்த வட மாநில வாலி பர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பறிமுதல் செய்யப்படும் செல்போன்களை மீண்டும் ஒப்படைக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோவிலுக்குள் செல்ல கூடாது என பக்தர்களுக்கு அறிவுரை.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து வழிமுறைகளும், திருச்செந்தூர் கோயிலில் மூன்று நாட்களில் அமல்படுத்தப் படும் என கூறினார். 

    எடுத்தவுடன் பறிமுதல் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால், செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று பக்தர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும் என்றார். மேலும் பக்தர்களின் செல்போன்களை வைப்பதற்கு பலகைகள் மற்றும் செல்போன்கள் குறித்து அறிவதற்கான ஸ்கேனிங் மெஷின் போன்றவை ஆர்டர் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    அதேபோல் பக்தர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோயிலுக்குள் செல்ல கூடாது என்பது உள்பட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பக்தர்களிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
    • மக்கள் தங்கள் ஊர் வழியாக டிப்பர் லாரி செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    திருவக்கரை பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக சொல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகப் பகுதியான நெமிலியில் ஒரு பட்டதாரி வாலிபர் டிப்பர் லாரி மோதி பலியானதால் அப்பகுதி மக்கள் தங்கள் ஊர் வழியாக டிப்பர் லாரி செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதனால் திருமங்கலம் பாதை , கொடுக்கூர், எறையூர், பெரும்பாக்கம் வழியாக டிப்பர் லாரிகள் செல்லவில்லை.

    ஆனால் புதுவை பகுதியான சந்தை புதுக்குப்பம், சுத்துக்கேணி, காட்டேரிக் குப்பம் வழியாகவும், குமாரபாளையம் வழியாகவும் டிப்பர் லாரிகள் புதுவையை நோக்கி செல்லத் தொடங்கின.

    நேற்று சுத்துக் கேணி மயிலம் பாதையில் சாப்ட்வேர் என்ஜினீயர், அவருடன் வந்த உறவுக்கார பெண் ஆகியோர் டிப்பர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால்

    ஆவேசமடைந்த பொதுமக்களும் அவர்களது உறவினர்களும் லாரியை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து காட்டேரிக்குப்பம் வழியாகவும் டிப்பர் லாரிகள் செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காட்டேரிக்குப்பம் போலீசார் சந்தை புதுக்குப்பம், குமாரபாளையம் ஆகிய இரண்டு ஊர்களில் பேரிகேட் மூலமாக தடுப்பு அமைத்துள்ளனர்.

    இப்பகுதி வழியாக புதுவை எல்லைக்குள் டிப்பர் லாரிகள் செல்ல தடை விதித்துள்ளனர். காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருக்கனூர் கடைவீதி வழியாகவும் அதி வேகமாக டிப்பர் லாரிகள் செல்வதால் திருக்கனூர் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் டிப்பர் லாரிகளை கண்டு அச்சத்தில் உள்ளனர்.

    திருக்கனூர் கடைவீதி வழியாகவும் டிப்பர் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறது
    • நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோபி:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 102 அடியை தொட்டது. இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 6 ஆயிரத்து 772 கன கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடுவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

    இதையொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பார்த்து ரசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தடைசெய்யப்பட்ட சரவெடி பறிமுதல் செய்யப்பட்டன.
    • வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (வயது 62). இவர் தடைசெய்யப்பட்ட சரவெடிகளை 14 சாக்கு பைகள் மற்றும் 24 அட்டை பெட்டிகளில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    அதனை வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடியில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தார். #Tobacco
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுப்பையா தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 50). இவர் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய சந்திப்பு பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அந்த கடையில் சோதனை நடத்தினார். கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட 20 புகையிலை பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    இதே போன்று புதுக்கோட்டை அருகே உள்ள மங்கலகிரி விலக்கு பகுதியில் சுரேஷ்குமார்(35) என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜா கைது செய்தார். அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார்.
    ×