என் மலர்
நீங்கள் தேடியது "சண்டைக்கோழி"
- சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
- சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.
சென்னிமலை:
சேவல் சண்டை விளையாட்டு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடக, அந்திரா, தெலுக்கான, மஹாராட்ரா, உள்ளிட்ட மாநிலங்களில் கிராம புறங்களில் பண்டிகை காலங்களில் சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறி விட்ட நிலையில் அரசு அதற்கு தடை விதித்துள்ளது.
ஆனால், மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது. அதுவும், தமிழ்நாட்டு சேவலுக்கு மற்ற மாநிலங்களில் அதிக மவுசும், விற்பனை வாய்ப்பு, நல்ல விலையும் கிராக்கியும் உள்ளதால் தற்போது இந்த சண்டை கோழி வளர்ப்பு தொழில் சூடு பிடித்துள்ளது. சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 50க்கும் மேற்பட்ட சண்டை சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளது. அதிக படியான வாலிபர்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.
சண்டை சேவல் குஞ்சு தேர்வில் இருந்து தொடங்கி அதை வளர்பதற்கு பெரும் முக்கியதுவம் கொடுத்து சண்டைகோழி வளர்ப்பில் வாலிபர்கள் ஆர்வமுடன் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில், காகம், வல்லூறு, ஆந்தை, கீரி, மயில், செங்கருப்பு, கோழிக்கறிப்பு, ஜல்லிக்கருப்பு என பல்வேறு ரகங்கள் உள்ளது. கேராள மாநில மக்கள் அழகுக்காக வீடுகளில் சேவல் வளர்க்க வாங்குகின்றனர் அதில், கிளி மூக்கு, கட்ட மூக்கு, விசிறி வால், மீட்டர் வால் என்ற ரகங்கள் அங்கு விற்பனை ஆகிறது அதுவும் ஒரு சேவல் ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை விலை போகிறது.
அதே போல் சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, கத்தி கால் சண்டை என ஒவ்வொறு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன.

சண்டை சேவல் வளர்ப்பு சாவல் மிகுந்த வேலை தான் என்கிறார் சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவில் சண்டை சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சீனிவாசன், (46), இது குறித்து அவர் கூறும் போது:
பொதுவாகவே, சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சி யோடு, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி என சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது.
சண்டை கோழிவளர்ப்பில் உணவு முக்கியம் வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, அத்தி பழம் போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்குத் நன்கு தயாராகிய சேவல்களைப் சண்டை ஒத்திகை பார்த்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஒரு கோழி குறைந்தது ரூ.5 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை சண்டை திறனை பொறுத்து விலை போகிறது. மேலும், சண்டை கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.1,200 வரை விலை போகிறது. சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டுக்கு தடைவிதித்த போது தமிழகத்தில் வாலிபர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி போன்று சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்கிற கோரிக்கை வாலிபர்கள் மத்தியில் வலுவாகி கொண்டே வருகிறது. சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.
'சேவல் சண்டையை போட்டியாகப் பார்க்காமல், இதை ஒரு பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்க வேண்டும். இந்த வீர விளையாட்டு ராஜாக்கள் காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது''எப்படி ஜல்லிகட்டு விளையாட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதோ அதே போல் சேவல் சண்டை அழியாமல் தடுக்க போராட்டம் நடத்தி அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை மீட்டெடுக்க வேண்டும்' என்கிறார்.
- சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
- வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு எருது விடும் விழா பிரபலம் என்றால் ஆந்திராவில் சேவல் சண்டை பிரபலமாகும். ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையின்போது கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
ஆந்திராவில் சண்டை சேவல்களுக்கு வைரஸ் மற்றும் சுவாச பிரச்சனை நோய் தாக்கப்பட்டு ஏராளமான சேவல்கள் இறந்தன.
இதனால் சேவல் வளர்ப்பவர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வருவதால் தரமான சண்டை சேவல்களின் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது சண்டை சேவல்கள் ரூ 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களை வாங்கி வந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி மோசடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சேவல் வளர்ப்பவர் ஒருவர் கூறுகையில்:-
வெளிநாடுகளில் இருந்து சேவல்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் சிலர் உண்மையை மறைத்து சேவல்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சேவல்கள் விற்பனை செய்தால் நம்முடைய கால சூழ்நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து போகும் என கூறினார்.
சேவல்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய எடை வேகம் சண்டையிடும் திறன் மட்டுமே வெற்றியை நிச்சயிக்கும் என்பதால் தரமான சண்டை சேவல்களை தேடி அலைந்து வருகின்றனர்.






