என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்டை சேவல்"

    • சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
    • சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.

    சென்னிமலை:

    சேவல் சண்டை விளையாட்டு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடக, அந்திரா, தெலுக்கான, மஹாராட்ரா, உள்ளிட்ட மாநிலங்களில் கிராம புறங்களில் பண்டிகை காலங்களில் சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறி விட்ட நிலையில் அரசு அதற்கு தடை விதித்துள்ளது.

    ஆனால், மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது. அதுவும், தமிழ்நாட்டு சேவலுக்கு மற்ற மாநிலங்களில் அதிக மவுசும், விற்பனை வாய்ப்பு, நல்ல விலையும் கிராக்கியும் உள்ளதால் தற்போது இந்த சண்டை கோழி வளர்ப்பு தொழில் சூடு பிடித்துள்ளது. சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 50க்கும் மேற்பட்ட சண்டை சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளது. அதிக படியான வாலிபர்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

    சண்டை சேவல் குஞ்சு தேர்வில் இருந்து தொடங்கி அதை வளர்பதற்கு பெரும் முக்கியதுவம் கொடுத்து சண்டைகோழி வளர்ப்பில் வாலிபர்கள் ஆர்வமுடன் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில், காகம், வல்லூறு, ஆந்தை, கீரி, மயில், செங்கருப்பு, கோழிக்கறிப்பு, ஜல்லிக்கருப்பு என பல்வேறு ரகங்கள் உள்ளது. கேராள மாநில மக்கள் அழகுக்காக வீடுகளில் சேவல் வளர்க்க வாங்குகின்றனர் அதில், கிளி மூக்கு, கட்ட மூக்கு, விசிறி வால், மீட்டர் வால் என்ற ரகங்கள் அங்கு விற்பனை ஆகிறது அதுவும் ஒரு சேவல் ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை விலை போகிறது.

    அதே போல் சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, கத்தி கால் சண்டை என ஒவ்வொறு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன.


    சண்டை சேவல் வளர்ப்பு சாவல் மிகுந்த வேலை தான் என்கிறார் சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவில் சண்டை சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சீனிவாசன், (46), இது குறித்து அவர் கூறும் போது:

    பொதுவாகவே, சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சி யோடு, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி என சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது.

    சண்டை கோழிவளர்ப்பில் உணவு முக்கியம் வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, அத்தி பழம் போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்குத் நன்கு தயாராகிய சேவல்களைப் சண்டை ஒத்திகை பார்த்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஒரு கோழி குறைந்தது ரூ.5 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை சண்டை திறனை பொறுத்து விலை போகிறது. மேலும், சண்டை கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.1,200 வரை விலை போகிறது. சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.

    தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டுக்கு தடைவிதித்த போது தமிழகத்தில் வாலிபர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி போன்று சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்கிற கோரிக்கை வாலிபர்கள் மத்தியில் வலுவாகி கொண்டே வருகிறது. சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.

    'சேவல் சண்டையை போட்டியாகப் பார்க்காமல், இதை ஒரு பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்க வேண்டும். இந்த வீர விளையாட்டு ராஜாக்கள் காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது''எப்படி ஜல்லிகட்டு விளையாட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதோ அதே போல் சேவல் சண்டை அழியாமல் தடுக்க போராட்டம் நடத்தி அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை மீட்டெடுக்க வேண்டும்' என்கிறார்.

    • திருமண மாப்பிள்ளையான சிவா சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
    • பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக திருமண பரிசாக வழங்கினோம்.

    திருச்சுழி:

    திருமணம் என்றாலே மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள், திருமணத்திற்கு வருபவர்கள் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். உறவினர்களை பொறுத்தவரை கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை மணமக்களுக்கு சீர் வரிசைகளாக வழங்குவார்கள்.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையிலும், திருமண மாப்பிள்ளைக்கு பிடித்ததுமான சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக அவரது நண்பர்கள் வழங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் சிவா. இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.

    தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமு டனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.திருமண மாப்பிள்ளையான சிவாவும் சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

    இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்தததால், சண்டை கிடாய்கள், சண்டை சேவல், நாட்டு இன நாய் உள்ளிட்டவைகளை அவரது நண்பர்கள் பரிசு பொருட்களாக வழங்கினர். அவர்கள் 2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அவர்கள் பரிசாக வழங்கிய சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் மணமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறும் போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக அவர் விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.

    • பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.
    • சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


    தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் இருந்து வெமுலவாடா பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வந்தது.

    பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கியதும் டிரைவர் மற்றும் கண்டக்டர் உணவு சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அப்போது பஸ்சில் இருந்து சேவல் கூவும் சத்தம் கேட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்சில் ஏறி பார்த்தனர். பயணிகளின் சீட்டுக்கு அடியில் ஒரு பை இருந்தது. பையை திறந்து பார்த்தபோது அதில் சண்டை சேவல் இருந்தது. பயணிகள் அதனை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பஸ் மேலாளர் மல்லையாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சண்டை சேவலை கரீம் நகர் பணிமனைக்கு கொண்டு சென்றனர். இரும்பு கூண்டில் அடைத்து சேவலுக்கு உணவு வழங்கினார்.

    பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சண்டை சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.

    ஆனால் 3 நாட்களாக சேவலுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை.

    இதனால் சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் பந்தய சேவலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்டை சேவலை ஏலம் எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×