search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் பஸ்சில் விட்டு சென்ற சண்டை சேவல் ஏலம்
    X

    தெலுங்கானாவில் பஸ்சில் விட்டு சென்ற சண்டை சேவல் ஏலம்

    • பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.
    • சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


    தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் இருந்து வெமுலவாடா பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வந்தது.

    பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கியதும் டிரைவர் மற்றும் கண்டக்டர் உணவு சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அப்போது பஸ்சில் இருந்து சேவல் கூவும் சத்தம் கேட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்சில் ஏறி பார்த்தனர். பயணிகளின் சீட்டுக்கு அடியில் ஒரு பை இருந்தது. பையை திறந்து பார்த்தபோது அதில் சண்டை சேவல் இருந்தது. பயணிகள் அதனை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பஸ் மேலாளர் மல்லையாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சண்டை சேவலை கரீம் நகர் பணிமனைக்கு கொண்டு சென்றனர். இரும்பு கூண்டில் அடைத்து சேவலுக்கு உணவு வழங்கினார்.

    பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சண்டை சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.

    ஆனால் 3 நாட்களாக சேவலுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை.

    இதனால் சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் பந்தய சேவலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்டை சேவலை ஏலம் எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×