search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா தயாரிப்பாளர்"

    • கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் சினிமா பட தயாரிப்பாளர்.
    • கிருஷ்ணகிரிக்கு கிருஷ்ணபிரகாஷ் வந்த தகவல் அறிந்து 3 பேரும், தங்களுடைய நண்பர் அருண் என்பவரை அழைத்து வந்து, அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் பண விவகாரத்தில், தங்கும் விடுதியில் இருந்து சினிமா பட தயாரிப்பாளரை ஆம்னி வேனில் கடத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தது.

    கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் (வயது 36). சினிமா பட தயாரிப்பாளர். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் குறும்படங்கள் எடுத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு சினிமா படம் எடுப்பது தொடர்பாக வந்த அவர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார்.

    அப்போது 4 பேர் அங்கு ஆம்னி வேனில் வந்தனர். அவர்கள் கிருஷ்ண பிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், அவர்கள் தாங்கள் வந்த ஆம்னி வேனில் அவரை கடத்தி சென்றனர். இதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டவுன் போலீசார் கடத்தப்பட்ட கிருஷ்ண பிரகாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வடக்கு பேட்டை அத்தாணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கடத்தப்பட்ட கிருஷ்ண பிரகாஷ் இருந்தது தெரிய வந்தது.

    அவரை மீட்ட போலீசார் அவரை கடத்தியதாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த தயா என்கிற கரிகாலன் (43), சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (23), அருண் (21), ஆம்னி வேன் டிரைவர் சிவசக்தி (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    பின்னர் நடந்த சம்பவம் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலைய எல்லை என்பதால் கிருஷ்ணகிரி போலீசாரிடம் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மேலும் மீட்கப்பட்ட சினிமா பட தயாரிப்பாளர் கிருஷ்ண பிரகாசிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் கிருஷ்ண பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு சினிமா படப்பிடிப்புக்காக இடம் தேர்வு செய்வதற்காக வந்தார்.

    அந்த நேரம் அவருக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த தயா என்கிற கரிகாலன், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன், கொத்தமங்கலத்தை சேர்ந்த சிவசக்தி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் 3 பேரும் கிருஷ்ண பிரகாசிடம், தாங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்கள். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பணமும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு ஆண்டாகியும் அவர்களை கிருஷ்ணபிரகாஷ் படத்தில் நடிக்க வைக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தான் கிருஷ்ணகிரிக்கு கிருஷ்ணபிரகாஷ் வந்த தகவல் அறிந்து 3 பேரும், தங்களுடைய நண்பர் அருண் என்பவரை அழைத்து வந்து, அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    கைதானவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால் கடத்தியதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 37). சினிமா தயாரிப்பாளர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் திரைப்படம் எடுக்கப்போவதாகவும், அதில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான இளம்பெண்கள் தேவை என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். மேலும் கதாநாயகி நேர்முக தேர்வு பொள்ளாச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் நடப்பதாக கூறப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்த சென்னையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமா தயாரிப்பாளர் கூறிய முகவரிக்கு நேர்முக தேர்வில் கலத்து கொள்வதற்காக சென்றார். அப்போது அங்கு வைத்து பார்த்திபன் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். சிறிது நேரத்தில் மாணவி மயங்கினார். அப்போது தயாரிப்பாளர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர் தனது செல்போனில் மாணவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார்.

    மயக்கத்தில் இருந்து எழுந்த மாணவி தான் கற்பை பறிகொடுத்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தயாரிப்பாளர் பார்த்திபனிடம் கேட்டபோது, அவர் கதாநாயகியா நடிக்க வைப்பதாகவும், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். இதனை உண்மைஎன நம்பிய மாணவி அவருடன் தொடர்ந்து பழகி வந்தார்.

    இவ்வாறாக ஆசை வார்த்தை கூறி தயாரிப்பாளர் பார்த்திபன் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து அவர் பார்த்திபனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர் குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது எனவே கருவை கலைத்து விடு என கூறி உள்ளார். அதன் பின்னர் மாணவி கருக்கலைப்பு செய்தார். ஆனால் தயாரிப்பாளர் பார்த்திபன் கூறியபடி மாணவியை திருமணம் செய்யவும் இல்லை. அவரை கதாநாயகியாக நடிக்க வைக்கவும் இல்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த சினிமா தயாரிப்பாளர் பார்த்திபனை கைது செய்தனர். இதனையடுத்து அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் கோவை வேடப்பட்டியை சேர்ந்த 32 வயது இளம்பெண் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் பார்த்திபன் மீது ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பார்த்திபன் சரவணம்பட்டி பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். அங்கு பெண்களை வைத்து தவறான செயலில் ஈடுபட்டார். இது குறித்து நான் கேட்டபோது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து நான் பீளமேடு போலீசில் புகார் செய்தேன்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அடுத்த நாள் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட எனது கணவர், எனக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.

    இந்தநிலையில் எனது சகோதரரை தொடர்பு கொண்ட பார்த்திபன், தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட உனது சகோதரியின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

    தற்போது எனக்கும், பார்த்திபனுக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் தற்போது நடந்து வருகிறது. எனவே எனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் பார்த்திபன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்பட 4 பேர் மீதும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×