என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் காவல் நிலையம்"
- சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
- மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.
இந்தநிலையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், "முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் அந்த பெண் கூறி இருந்தார்.
அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார்.
- போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார்.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். செல்வம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோடு கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மகளுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் மற்றொரு நபரிடம் பழகி வந்துள்ளார். அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்துடன் கூறியுள்ளார்.
இதற்கு செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார். இதனால் போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வம் வந்தார்.
அப்போது திடீரென தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட் ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் செல்வத்திடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் அவரது பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.
- காணொளி மூலம் புதிய மகளிர் காவல் நிலையம் திட்டக்குடியில் திறந்து ைவக்கப்பட்டது.
- டி.ஐ.ஜி. மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட புதிய மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். புதியதாக திறக்கப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
புதிய மகளிர் காவல் நிலையம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன முன்னிலையில் திறக்கப்பட்டது.
முதல் நாளில் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண்ணியிடம் ரூ.1லட்சம் ஒருவர் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், இது சம்பந்தமாக கடந்த 6 மாத காலமாக பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மீது பெண்ணாடம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அமைச்சரிடம் அழுதபடியே புகார் மனுவை அளித்தார்.
இதுகுறித்து டி.ஐ.ஜி. மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மங்களூர் யூனியன் தலைவர் சுகுணாசங்கர், நகராட்சி சேர்மன் வெண்ணிலாகோதண்டம், நகராட்சி துணை தலைவர் பரமகுரு ,ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேதுராமன் மற்றும் தி.மு.க.
கட்சி நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.