என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women police station"

    • அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார்.
    • போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார்.

    ஈரோடு:

    தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். செல்வம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோடு கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது மகளுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள் மற்றொரு நபரிடம் பழகி வந்துள்ளார். அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்துடன் கூறியுள்ளார்.

    இதற்கு செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் திடீரென மாயமாகிவிட்டார். இதனால் போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வம் வந்தார்.

    அப்போது திடீரென தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட் ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

    இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் செல்வத்திடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் அவரது பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.

    • காலியாகும் பழைய கட்டிடத்தை புதுப்பித்து உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்வு காண திருச்செந்தூர் போன்ற இடங்களில் உள்ள மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தற்பொழுது பழைய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகம் அருகில் இப்பொழுது புதிய தாலுகா அலுவலகம் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில் பழைய கட்டிடத்தில் வேளாண்மை துறை அலுவலகம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கு இப்பகுதி அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பழமையான தாலுகா அலுவலக கட்டிடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்திட புதுப்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி அரசியல் கட்சியினரும்,

    பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக ம.தி.மு.க. மற்றும் அரசியல் கட்சியினர் துரித நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் நகர ம.தி.மு.க. சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

    சாத்தான்குளம் தாலுகா பகுதியில் மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்வு காண தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் உள்ள மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்கள் உள்பட பொதுமக்கள் ஒரு நாள் முழுவதும் சிரமப்பட்டு வெளியூர் சென்று வரும் நிலைமை பரிதாபமாக உள்ளது.

    எனவே பல வருடங்களாக சாத்தான்குளம் தாலுகாவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் காலியாகும் பழைய கட்டிடத்தை புதுப்பித்து உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×