search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Police Station"

    • காதல் ஜோடி பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு, ஏப். 9-

    கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு ஸ்ரீ ராமபுரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தினேஷ்குமார் (23). பி.காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருப்பூர் மாவட்டம் கம்பால குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கோவர்ஷினி (20). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் தினேஷ்குமாரும், கோவர்ஷினியும் கோபி பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இரு விட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி இன்று காலை பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நேரடியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார், கோவர்ஷினி தஞ்சம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் சென்னி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 30).இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சங்கீதா (21). இவரும் அதே மில்லில் வேலை செய்து வந்தார்.

    இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்ததால் இருவருக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாக கூற ப்படுகிறது.

    இவர்கள் 2 பேரும் பழகி வந்தது. அவர்களின் வீட்டுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கலிங்கியம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களின் பெற்ேறாரை போலீஸ் நிலையத்துக்கு வர வழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து காதல் ஜோடியை அவர்க ளுடன் அனுப்பி வைத்தனர்.

    அதே போல் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் தீபிகா (21). பி.காம். பட்டதாரியான தீபிகாவின் தாய் உணவகம் நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.இவரது மகன் கதிரேசன் (27). சரக்கு ஆட்டோ டிரைவரான க திரேசன் அடிக்கடி தீபிகாவின் தாய் நடத்தி வந்த உணவகத்திற்கு சாப்பிட சென்று வருவார். அப்போது, கதிரேசனுக்கும் தீபிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களது காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது.

    அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ நிலைய போலீசார் இரு தரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் மணமகன் வீட்டிற்கு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற தொகுதி என்ற பெருமைக்குரிய கும்மிடிப்பூண்டியில் இன்ஸ்பெக்டர்-காவலர் மட்டுமே பணியாற்றும் மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி போலீஸ் குடியிருப்பில் உதவி ஆய்வாளருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில் இயங்கி வந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் தற்போது ரெட்டம்பேடு சாலையில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே கீழ்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 2559 சதுர அடி கொண்ட புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    இந்த புதிய கட்டிடத்திற்கான தொடக்க விழா கடந்த 20-ந்தேதி நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டியைச் சுற்றி உள்ள 61 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள், பேரூராட்சி என கும்மிடிப்பூண்டி தாலுக்காவிற்கான இந்த மகளிர் காவல் நிலையத்தில் இதுவரை போதிய பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

    இங்கு ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் காவலர் மட்டுமே பணியில் உள்ளனர். அந்த பெண் இன்ஸ்பெக்டர் கூட பெரும்பாலும் பல்வேறு அலுவல் பணிகாரணமாக வெளியிடங்களுக்கு சென்று விடுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.

    இதனால் ஒரு பெண் போலீசார் மட்டும் காவல் நிலையத்தில் எப்போதும் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த மகளிர் காவல் நிலையத்திற்கு என்று உரிய சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் காவலர்கள் என யாரையும் இதுவரை நியமனம் செய்யாததால் குடும்ப வழக்குகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    தினமும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது புகார்களுக்கு உரிய தீர்வு காண முடியாமல் மகளிர் காவல் நிலையம் வாசலில் தவித்து வருகின்றனர்.

    எனவே தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் மகளிர் காவல் நிலையம் போலீசார் இல்லாததால் வெறிச்சோடி உள்ளது.

    தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற தொகுதி என்ற பெருமைக்குரிய கும்மிடிப்பூண்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கென கட்டிடம் அமைந்துள்ளதால் அதனை முழுமையாக செயல்படுத்த உரிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் காவலர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ×