search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couples sheltered at"

    • காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் சென்னி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 30).இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சங்கீதா (21). இவரும் அதே மில்லில் வேலை செய்து வந்தார்.

    இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்ததால் இருவருக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாக கூற ப்படுகிறது.

    இவர்கள் 2 பேரும் பழகி வந்தது. அவர்களின் வீட்டுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கலிங்கியம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களின் பெற்ேறாரை போலீஸ் நிலையத்துக்கு வர வழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து காதல் ஜோடியை அவர்க ளுடன் அனுப்பி வைத்தனர்.

    அதே போல் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் தீபிகா (21). பி.காம். பட்டதாரியான தீபிகாவின் தாய் உணவகம் நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.இவரது மகன் கதிரேசன் (27). சரக்கு ஆட்டோ டிரைவரான க திரேசன் அடிக்கடி தீபிகாவின் தாய் நடத்தி வந்த உணவகத்திற்கு சாப்பிட சென்று வருவார். அப்போது, கதிரேசனுக்கும் தீபிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களது காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது.

    அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ நிலைய போலீசார் இரு தரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் மணமகன் வீட்டிற்கு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ×