search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவன் கல்யான்"

    • சினிமா பாணியில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசார வாகனங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.
    • ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரம் செல்கிறார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் காரசாரமாக நடந்து வருகிறது. நூதன முறைகளில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சினிமா பாணியில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசார வாகனங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

    ஒய்.எஸ் .ஆர். காங்கிரஸ் தலைவர் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் பஸ் யாத்திரை பிரசாரம் செல்கிறார்.

    இவருடைய பிரசாரத்திற்காக பிரத்யேகமாக பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் ஏ.சி. வசதியுடன் உள்ள இந்த பஸ்சில் படுக்கையறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


    பஸ்சின் வெளிப்புறம் முழுவதும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சின்னங்கள் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதே போல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஏற்கனவே ராணுவ வாகனம் போல வாராஹி என்ற வாகனத்தை தயார் செய்து வைத்துள்ளார். அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த வாராஹி வாகனத்தில் சென்று பவன் கல்யாண் பிரசாரம் செய்கிறார். அவர் பித்தாபுரம் பாராளுமன்ற தொகுதியில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரசாரத்திற்கு பிரத்யேகமாக வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா சினிமாவைப் போல தேர்தல் களமும் பிரத்யேக வாகனங்களால் களைகட்டி உள்ளது.

    • 175 சட்டமன்ற தொகுதிகளில் ஜனசேனா 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து உள்ளது.

    ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் ஜனசேனா 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.


    இந்த நிலையில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

    நடிகர் பவன் கல்யாணை எதிர்த்து பித்தாபுரம் தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் போட்டியிட உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×