search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாராஹி"

    • சினிமா பாணியில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசார வாகனங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.
    • ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரம் செல்கிறார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் காரசாரமாக நடந்து வருகிறது. நூதன முறைகளில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சினிமா பாணியில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசார வாகனங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

    ஒய்.எஸ் .ஆர். காங்கிரஸ் தலைவர் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் பஸ் யாத்திரை பிரசாரம் செல்கிறார்.

    இவருடைய பிரசாரத்திற்காக பிரத்யேகமாக பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் ஏ.சி. வசதியுடன் உள்ள இந்த பஸ்சில் படுக்கையறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


    பஸ்சின் வெளிப்புறம் முழுவதும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சின்னங்கள் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதே போல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஏற்கனவே ராணுவ வாகனம் போல வாராஹி என்ற வாகனத்தை தயார் செய்து வைத்துள்ளார். அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த வாராஹி வாகனத்தில் சென்று பவன் கல்யாண் பிரசாரம் செய்கிறார். அவர் பித்தாபுரம் பாராளுமன்ற தொகுதியில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரசாரத்திற்கு பிரத்யேகமாக வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா சினிமாவைப் போல தேர்தல் களமும் பிரத்யேக வாகனங்களால் களைகட்டி உள்ளது.

    • இவள் மிகவும் கோபக்காரி. நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
    • நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.

    நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.

    தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள்.

    முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள்.

    இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.

    இவள் மிகவும் கோபக்காரி.

    நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

    ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

    இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது.

    அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

    அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

    • மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
    • சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    நவராத்திரி எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.

    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.

    கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.

    சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    மூல மந்திரம்: ஓம் – ஸ்ரீம் – நரஸிம்யை – நம

    காயத்ரி: ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

    எட்டாம் நாள் நைவேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

    • ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.
    • தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.

    நவராத்திரி ஆறாம் நாள் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும்.

    இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர்.

    இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.

    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.

    ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.

    விருத்திராசுரனை அழித்தவள்.

    தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.

    பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

    ஆறாம் நாள் நைவேத்தியம்:- வெண்பொங்கல்.

    • சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
    • இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஐந்தாம் நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.

    சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.

    தீயவற்றை சம்ஹரிப்பவள்.

    இவளின் வாகனம் கருடன்.

    மலர் வகைகளில் மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம் மலர்களையும்,

    இலைகளில் திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்

    இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஐந்தாம் நாள் நைவேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

    • பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
    • தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நவராத்திரி நான்காம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும்.

    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.

    விஷ்ணு பத்தினியாவாள்.

    பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.

    தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நான்காம் நாள் நைவேத்தியம்:- கற்கண்டு சாதம்.

    • இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
    • சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    நவராத்திரி மூன்றாம் நாள் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.

    வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.

    சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.

    பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.

    இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.

    இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

    மூன்றாம் நாள் நைவேத்தியம் :- தயிர்சாதம்.

    • தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
    • சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.

    மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.

    தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.

    ஓங்கார சொரூபமானவள்.

    சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    வீரத்தை தருபவள்.

    இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.

    • திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
    • கடின உழைப்பாளிகள் உழைப்பின் பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    நவராத்திரி முதலாம் நாள் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.

    அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.

    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.

    அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.

    சர்வ மங்களம் தருபவள்.

    தர்மத்தின் திருவுருவம்.

    கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    முதல் நாள் நைவேத்தியம்:- புளியோதரை.

    • வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
    • பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்தல் வேண்டும்.

    வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.

    விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும்

    பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று

    காலை ஒன்பது மணிக்கு முன் பாறணை செய்தல் வேண்டும்.

    இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

    விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவு பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து

    நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்த,

    குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.

    தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.

    இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.

    நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள்

    சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள்

    என்று காரணாகமம் கூறுவதாக சொல்லப்படுகின்றது.

    • இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.
    • அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.

    நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.

    இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

    இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.

    புதன் கல்வி ,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

    அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும்

    புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.

    புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.

    (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு) கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.

    அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை

    கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    • அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
    • ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

    இந்தப் பெயர்களை சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,

    அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

    ×