search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரிப்பாளர்"

    • பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டெஹ்ரான்:

    ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ் திரையுலகின் இளம் நடிகை பட வாய்ப்பு தேடி அலைந்தாராம். அப்போது தயாரிப்பாளர் ஒருவரை அணுகிய நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தயாரிப்பாளர் ஒரு நாள் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டீசன் போட்டாராம். இதை கேட்ட நடிகை எதுனாலும் என் மேனேஜரிடம் கூறுங்கள் என்று தவிர்த்துவிட்டாராம். ஆனால், அந்த தயாரிப்பாளர் தொடர்ந்து நடிகையை தொல்லை செய்யவே நடிகை அந்த படத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

    தன் முதல் படத்திலேயே பிரபலமான நடிகை அதே நடிகருடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வந்தாராம். திடீரென நடிகருக்கு திருமணம் நடக்கவே நடிகையோ சில காலமாக சினிமா பக்கமே வராமல் இருந்தாராம். அதன்பின் நடிக்க தொடங்கிய நடிகையின் படங்கள் சரியாக ஓடவில்லையாம்.

    அதனால் காதல் கதையை விட்டு திரில்லரில் கவனம் செலுத்திய நடிகைக்கு படங்கள் வரவேற்பை பெற தொடங்கியதாம். இதனால் தயாரிப்பாளர்கள் பலர் இதுமாதிரியான கதையில் நடிக்க நடிகையை அணுகினார்களாம். ஆனால் நடிகை மறுத்ததால் கடுப்பான தயாரிப்பாளர் இனி நடிகையை எந்த படத்திலும் நடிக்க வைக்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

    ஊருக்கு அறிவுரை சொல்லும் பிரபல நடிகருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இவர் அறிவுரை மட்டுமல்லாமல் பலபேருக்கு உதவி செய்தும் வருகிறாராம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொது கருத்துகளை கூறி வரும் நடிகர் பல படங்களிலும் நடித்து வருகிறாராம்.

    நல்லவர் என பெயர் எடுத்த நடிகர், நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் பிளேபாய் ஆகிவிட்டாராம். இவர் கமிட்டான படங்களிலுள்ள நடிகைகளுடன் ஊர் சுற்றி வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருகிறார்களாம்.

    முக்கிய இயக்குனர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபலமானாராம். தொடர்ந்து படங்களில் நடித்தவருக்கு சில நாட்களில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். இதனால் நடிகை கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம். கவர்ச்சியில் மட்டும் இறங்கினால் போதாது அதற்கான வேலைகளிலும் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்த நடிகை தன் புகைப்படங்களை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்டு வந்தாராம்.

    தயாரிப்பாளர்களும் நடிகையின் தொல்லை தாங்காமல் அவரை பல மணிநேரம் காக்க வைத்துவிட்டு அனுப்பிவிடுவார்களாம். ஆனால், முயற்சியை கைவிடாத நடிகை விடாது கருப்பு போன்று தயாரிப்பாளர்களை பின் தொடர ஆரம்பித்தாராம். இதனால் பயந்து போன தயாரிப்பாளர்கள் நடிகையை கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.

    • கமல் கிஷோர் மிஸ்ரா ‘தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
    • போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    மும்பை:

    மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந்தேதி இந்தி சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்றார். தனது கணவர் வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். மேலும் கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் திடீரென அவர் தவறி விழுந்தார். எனினும் தயாரிப்பாளர் ஈவு இரக்கமின்றி அவா் மீது காரை ஏற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

    கார் ஏறியதில் யாஸ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வாகன நிறுத்த காவலர்கள் தயாரிப்பாளர் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே யாஸ்மின் மீது காரை ஏற்றி செல்லும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர். கமல் கிஷோர் மிஸ்ரா இந்தியில் வெளியான 'தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.

    ×