என் மலர்
நீங்கள் தேடியது "Draupadi"
- மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை
- மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற மங்காத்தா திரைப்படம் நேற்று ரீரிலீஸானது.
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரீ ரிலீசில் கில்லி படம் படைத்த சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை படைத்தது வருகிறது.
மங்காத்தா படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் நேற்று வெளியான திரௌபதி 2 படத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்ட்டது.
இந்நிலையில், மங்காத்தா அலையில் திரௌபதி 2 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G" என்று தெரிவித்துள்ளார்.
- ஜனவரி 23 ஆம் தேதி மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
- தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். தற்போது தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதனையடுத்து, தெறி படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கவேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "கலைப்புலி எஸ். தாணு சார், எங்களைப் போன்ற வளர்ந்து வரும் குழுவினர்களுக்கு ஆதரவளித்து, வரும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ளீர்கள். எனவே, எங்கள் திரௌபதி 2 திரைப்படம் முக்கிய திரையரங்குகளில் வெளியாக ஆதரவளித்து, ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டார்.
இந்த பதிவை பகிர்ந்த கலைப்புலி எஸ். தாணு, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தெறி படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தாணு ஒத்தி வைத்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "எங்களின் வேண்டுகோளை ஏற்று தளபதி விஜய் சார் அவர்களின் #தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரெளபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
திரௌபதி 2 வெளியாகும் அதே நாளில் மங்காத்தா, தெறி ஆகிய 2 படங்கள் ரீ- ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மட்டும் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஜன நாயகன் ரிலீசாகாத விரக்தியால் இருக்கும் விஜய் ரசிகர்கள் தெறி படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு என்ற தகவலை கேட்டு கடுப்பாகியுள்ளனர்.
- திரௌபதி 2 வெளியாகும் அதே நாளில் மங்காத்தா, தெறி ஆகிய 2 படங்கள் ரீ- ரிலீஸ் ஆகவுள்ளது
- தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மட்டும் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்த நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்தார்.
இந்நிலையில், தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். தற்போது தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தெறி படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கவேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "கலைப்புலி எஸ். தாணு சார், எங்களைப் போன்ற வளர்ந்து வரும் குழுவினர்களுக்கு ஆதரவளித்து, வரும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ளீர்கள். எனவே, எங்கள் திரௌபதி 2 திரைப்படம் முக்கிய திரையரங்குகளில் வெளியாக ஆதரவளித்து, ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பகிர்ந்த கலைப்புலி எஸ். தாணு, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
திரௌபதி 2 வெளியாகும் அதே நாளில் மங்காத்தா, தெறி ஆகிய 2 படங்கள் ரீ- ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மட்டும் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஜன நாயகன் ரிலீசாகாத விரக்தியால் இருக்கும் விஜய் ரசிகர்கள் தெறி படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவலை கேட்டு கடுப்பாகியுள்ளனர்.
- திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
- வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
ஜன நாயகன் படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகதாததால் திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரௌபதி 2 திரைப்படம் சுபாஷ் சந்திர போஸின் பிறந்ததினமான ஜனவரி 23 அன்று வெளியாகிறது. பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட எங்களின் முதல் படைப்பு திரௌபதி 2 திரைப்படம், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
எங்களின் இந்த முடிவை பெரியமனதுடன் ஏற்று எப்போதும் போல உங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு ரசிக பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
திரெளபதி 2 மிகப் பெரிய உழைப்பு. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23 ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை பகிர்ந்த மோகன் ஜி, "திரெளபதி2 மிகப் பெரிய உழைப்பு.. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.. பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
மோகன் ஜி அடுத்து இயக்கும் படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் "எம்கோனே" பாடல் அண்மையில் வெளியானது. இதனை சின்மயி பாடி இருந்தார். இதற்கிடையில், பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும்.
அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை" என்று தெரிவித்தார்.
சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ``என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை.
என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'திரௌபதி 2' படத்தில் சின்மயி பாடிய பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
- திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
- சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் கொண்டாடக்கூடாது
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.
அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.
மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.
அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10 மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு.
- பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான்.
பாரதப் போர் நிறைவு பெற்றது. திரவுபதி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனக்கு மிகவும் வயதானதைப் போல உணர்ந்தாள். அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி கைம்பெண்கள் அதிகமாக இருந்தனர். ஒரு சில ஆண்கள் மட்டுமே தெருக்களில் தென்பட்டனர்.
ஆதரவற்ற நிலையில் இருந்த பிள்ளைகள் பலரும், வீதிகளில் சுற்றித் திரிவதைக் கண்டு திரவுபதி மனம் வருந்தினாள். ஒரு போர்க்களம் மக்கள் வாழ்வை புரட்டிப் போட்டுவிட்டதை அவள் உணர்ந்தாள். அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் நின்று ஓரிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் நின்ற அறைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர். அவரைக் கண்ட தும் ஒடோடி வந்து அவர் பாதம் பணிந்து வணங்கினாள். கிருஷ்ணர், அவளின் தலையை தொட்டு ஆசீர்வதித்தார். திரவுபதியோ அழத் தொடங்கினாள்.

திரவுபதி ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்த கிருஷ்ணர். அங்கிருந்து விலகி ஓரிடத்தில் அமர்ந்தார். பின்னர் அவளிடம் கேட்டார் "திரவுபதி என்ன நடந்து விட்டது?"
"ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா!" என்று விரக்தியாக பதிலளித்தாள், திரவுபதி.
கிருஷ்ணரோ, "விதி கொடூரமானது பாஞ்சாலி, நாம் நினைப்பது போல் வேலை செய்யாது! அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.
முடிவுகளையும் மாற்றுகிறது. நீ பழிவாங்க நினைத்தாய்... அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். உன் பழிவாங்கல் முடிந்தது. துரியோதனனும், துச்சாதனனும் மட்டுமல்ல, கவுரவர்கள் அனைவரும் மடித்துவிட்டனர். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! என்றார்.
"சகோதரா.. என் காயங்களை ஆற்ற வந்தீர்களா? அல்லது அதை இன்னும் கிளறி புண்படுத்த வந்தீர்களா?" என்று கோபமாக கேட்டாள் திரவுபதி.

கிருஷ்ணரிடம் என்றும் மாறாத புன்னகை உதித்தது. "திரவுபதி, உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்தேன். எல்லாம் நமது தொலைநோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்' என்றார். "இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் கிருஷ்ணா.. அனைத்துக்கும் நான்தான் பொறுப்பா?" என்றாள், திரவுபதி.
"இல்லை திரவுபதி. நீ மட்டுமே காரணம் இல்லை.
ஆனால், உன்செயல்களில் நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தால், இவ்வளவு துன்பங்கள் நேர்ந்திருக்காது''
"நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?"
நீ நிறைய செய்திருக்க முடியும் பாஞ்சாலி, உனது சுயம்வரம் நடந்தபோது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து இருந்தால், ஒருவேளை முடிவு வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும்.
குந்தி உன்னை ஐந்து பேருக்கு மனைவியாகும்படி கட்டளையிட்டதை, ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
உன் அரண்மனையில் துரியோதனனை பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள்' என்று அவமதித்தாய், அவ்வாறு நீ சொல்லாமல் இருந்திருந்தால். துரியோதன சபையில் உனக்கு நேர்ந்த அவமானத்தை தவிர்த்திருக்கலாம்.
நம் வார்த்தைகள் கூட, பின்னால் நடக்கும் சில விளைவுகளுக்கு பொறுப்பு தான் திரவுபதி. பேசுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுவது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல, உனது சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்.

பற்களில் விஷம் இல்லாமலேயே, பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம் தான். இப்போது உனக்கு புரிகிறதா திரவுபதி?" என்று தன்னுடைய விளக்கத்தை அளித்தார். கிருஷ்ணர்.
நாம் எப்போதும் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் நம் வார்த்தைகள் புண்படுத்திவிடக்கூடாது என்று திரவுபதி உணர்ந்துகொண்டாள்.







