search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sushma"

    இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய மந்திரி சுஷ்மா தெரிவித்தார். #SriLankaAttacks #IndiansKilled #SriLankablasts
    புதுடெல்லி:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.



    இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இத்தகவலை இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்திருப்பதாக சுஷ்மா டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இலங்கையில் உள்ள இந்தியர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான +94777903082, +94112422788, +94112422789 என்ற ஹெல்ப்லைன் எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #SriLankaAttacks #IndiansKilled #SriLankablasts
    இலங்கையில் இன்றுநிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலி 215 ஆக உயர்ந்துள்ள நிலையில் 3 இந்தியர்கள் உள்பட 35 பேர் வெளிநாட்டினரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. #3Indianskilled #35foreignerskilled #215killed #SriLankablasts #Colomboblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை இன்றிரவு 8 மணி நிலவரப்படி 215 ஆக உயர்ந்துள்ளது.

    இவற்றில் சில சம்பவங்கள் தற்கொலப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

    அங்குள்ள இந்தியர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான +94777903082, +94112422788, +94112422789 என்ற உதவி மையங்களின் கைபேசி எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    இலங்கைக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் செய்யவும், தேவைப்பட்டால் இந்தியாவில் இருந்து மருத்துவர் குழுவை அனுப்பி வைக்கவும் இந்தியா தயாராக உள்ளதாகவும் சுஷ்மா உறுதியளித்துள்ளார். #3Indianskilled #35foreignerskilled #215killed #SriLankablasts #Colomboblasts
    நடிகை ஜெயப்பிரதாவை ஆசம் கான் தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். 

    சமீபத்தில் இந்த தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதாவை கடுமையாக தாக்கி பேசினார். ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்திருந்தது தனக்கு தெரியும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
     
    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெண்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஆசம் கானின் கருத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘சகோதரர் முலாயம் சிங் அவர்களே!  நீங்கள்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவர். ராம்பூர் தொகுதியில் உங்கள் முன்னால் திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்ம பிதாமகர் போல் அமைதியாக இருக்கும் தவறை நீங்கள் செய்ய வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்காக மட்டும் தெலுங்கானா என்ற தனிமாநிலம் உருவாக்கப்படவில்லை என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Telanganacreated #KCRfamily #Sushma
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா  4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக நேற்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.



    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    முன்னதாக, ஐதராபாத்  விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மா, (காபந்து) முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்காக மட்டும்  தெலுங்கானா என்ற தனிமாநிலம் உருவாக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    ஆந்திராவில் இருந்து பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக பா.ஜ.க. சார்பில் எங்கள் முழு ஆதரவையும் நாங்கள் தெரிவித்திருந்தோம். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக 2 ஆயிரம் இளைஞர்கள் தியாகம் செய்தனர். ஆனால், 400 பேரை மட்டுமே இந்த மாநில அரசு தியாகிகளாக அங்கீகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். #Telanganacreated #KCRfamily #Sushma
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீருக்கு துயரமான செய்தியாக உள்ளது என முன்னாள் முதல் மந்திரிமெகபூபா தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi #MehboobaMufti
    ஸ்ரீநகர்:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளன. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.



    இதற்கிடையே, அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்தது. இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீருக்கு துயரமான செய்தியாக உள்ளது என முன்னாள் முதல் மந்திரி மெகபூபா தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi #MehboobaMufti
    அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது. #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளன. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார்.
     
    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். மேலும், பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு அஞ்சல் தலைகளும் வெளியிட்டுள்ளது.

    இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை பெற அந்நாட்டு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் இன்று ஆலோசனை நடத்தினார். #IndiaSwitzerlanddiscuss
    புதுடெல்லி: 

    சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் ரகசியமாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை அளிக்க புதிய நெறிமுறைகளை ஏற்படுத்த அந்நாட்டு பாராளுமன்றக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளியுறவுத்துறை மந்திரி இக்னாஸியோ கேஸிஸ், டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி இதுதொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் பதுக்கியுள்ள நபர்களின் வங்கி கணக்கு எண், அவரது பெயர், முகவரி, பிறந்த தேதி, வரி அடையாள எண் (டின்) முதலீடு செய்துள்ள பணத்தின் மூலம் கிடைத்த வட்டி மற்றும் ஈவுத்தொகை, காப்பீடு திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், சொத்துகளை விற்றுபெற்ற மூலதனங்கள் போன்ற விபரங்கள் பரிமாறப்பட வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiaSwitzerlanddiscuss #sharinginformation #informationonblackmoney
    அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் குடும்பத்தாருக்கு அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுப்போம் என சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் கனாஸ் சிட்டியில் உள்ள மிசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சரத் கொப்பு (25) அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமையில் ஹோட்டலில் நடந்த கொள்ளை சம்பவத்தில்  அடையாளம் தெரியாத நபரால் சரத் கொப்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

    துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க வலை வீசிவரும் அந்நாட்டு காவல்துறை, குற்றவாளியை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி, அம்மாநில அரசின் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை மந்திரி கே.டி. ராமா ராவ் மற்றும்  ஆகியோர் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.



    இதையடுத்து, இந்திய மாணவர் சரத் கொப்புவின் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்தார்.  

    இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தார் அமெரிக்கா செல்ல விரும்பினால் அதற்கான விசா ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், மேலும், மாணவரின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj
    பா.ஜ.க. தலைமயிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் கடந்த 4 வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்கள் காப்பாற்றப்பட்டதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Indiansrescued #MEASushma
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை ஆற்றிய சாதனை பட்டியல் புத்தகத்தை புதுடெல்லியில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் உள்ள பல நாடுகளுக்கு நமது நாட்டின் தலைவர்கள் சென்றதே இல்லை என்பதை அறிந்து நான் வியப்படைந்தேன். எங்கள் ஆட்சி அமைந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் தீர்மானித்தோம்.

    அதன்படி, இதுவரை 186 நாடுகளுடன் மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆட்சியில் 
    வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம். வெளிநாடுகளில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட பலரை பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார். கடல்கடந்து சென்ற இந்தியர்கள் இன்று வெளிநாடுகளில் அமைதியாக வாழ்கிறார்கள்.

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Indiansrescued #MEASushma
    ×