search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayaprada"

    • பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்.
    • பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது,

    திருப்பதி:

    பா.ஜ.க. முன்னாள் எம்.பி.நடிகை ஜெயப்பிரதா நேற்று திருப்பதி வந்தார். ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    ஆந்திர மாநில அரசியலில் ஈடுபடும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இருந்து தேர்தலில் நிற்க வேண்டும். இது குறித்து பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியி டுகிறது வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    எனவே ஜெயப்பிரதா இந்த தேர்தலில் ஆந்திராவில் நிறுத்தப்படுவது சாத்தியமில்லை. அடுத்த தேர்தலில் ஆந்திராவில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
    • ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும்.

    சென்னை:

    நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

    இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    கீழ் கோர்ட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெயபிரதா உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை செலுத்த முடியுமா? என்று ஜெயபிரதா தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    ஆனால், ரூ.20 லட்சம் செலுத்துவதாக ஜெயபிரதா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு இ.எஸ்ஐ. தரப்பு வக்கீல் டி.என்.சி.கவுசிக், எதிர்ப்பு தெரிவித்துவாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், "கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயபிரதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கீழ் கோர்ட்டு நிறுத்திவைக்கலாம். இல்லை யென்றால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    நடிகை ஜெயப்பிரதாவை ஆசம் கான் தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். 

    சமீபத்தில் இந்த தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதாவை கடுமையாக தாக்கி பேசினார். ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்திருந்தது தனக்கு தெரியும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
     
    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெண்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஆசம் கானின் கருத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘சகோதரர் முலாயம் சிங் அவர்களே!  நீங்கள்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவர். ராம்பூர் தொகுதியில் உங்கள் முன்னால் திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்ம பிதாமகர் போல் அமைதியாக இருக்கும் தவறை நீங்கள் செய்ய வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



    ஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.

    இந்நிலையில்,  ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு , ஜெயப்பிரதா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். #AazamKhan #Jayaprada
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில்,  தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும், ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகனும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து ஆசம் கான் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயப்பிரதா கூறியதாவது:

    இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி  கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆசம் கூறியது தவறு என எதிர்த்தும்,  என்னை ஆதரித்தும் பேசவில்லை.  நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதையும் சொல்ல இயலவில்லை. நான் ஆசமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?



    ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AazamKhan #Jayaprada
    ×