search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட ஆசை- திருப்பதியில் நடிகை ஜெயப்பிரதா பேட்டி
    X

    ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட ஆசை- திருப்பதியில் நடிகை ஜெயப்பிரதா பேட்டி

    • பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்.
    • பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது,

    திருப்பதி:

    பா.ஜ.க. முன்னாள் எம்.பி.நடிகை ஜெயப்பிரதா நேற்று திருப்பதி வந்தார். ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    ஆந்திர மாநில அரசியலில் ஈடுபடும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இருந்து தேர்தலில் நிற்க வேண்டும். இது குறித்து பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியி டுகிறது வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    எனவே ஜெயப்பிரதா இந்த தேர்தலில் ஆந்திராவில் நிறுத்தப்படுவது சாத்தியமில்லை. அடுத்த தேர்தலில் ஆந்திராவில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×