search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana student"

    தெலுங்கானாவில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை போலீசார் கைது செய்தனர். #Love ##RavaliRao
    நகரி:

    தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரவளி. இவர் வரங்கலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இதே கல்லூரியில் சங்கம் கிராமத்தை சேர்ந்த சாயி அன்வேஷ் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இவர் மாணவி ரவளியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்தார். அதை அவர் ஏற்கவில்லை. ஆனால் சாயி அன்வேஷ் காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு ரவளி மறுத்து விட்டார்.

    இன்று காலை ரவளி கல்லூரி நுழைவாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாயி அன்வேஷ் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ரவளி மீது திடீரென்று ஊற்றினார்.

    இதை பார்த்து சக மாணவர்கள் சாயி அன்வேஷ் ஆசிட் வீசுவதாக நினைத்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். அப்போது சிகரெட் லைட்டரை ரவளி மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்.

    இதில் ரவளி உடலில் தீப்பிடித்து எரிந்தது. அலறி துடித்த அவரை மாணவர்கள் தீயை அணைத்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தப்பி ஓடிய சாயி அன்வேஷை சில மாணவர்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.



    தீயில் கருகிய மாணவி ரவளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #Love ##RavaliRao
    அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவரின் குடும்பத்தாருக்கு அனைத்து உதவிகளையும் செய்துக் கொடுப்போம் என சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் கனாஸ் சிட்டியில் உள்ள மிசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சரத் கொப்பு (25) அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமையில் ஹோட்டலில் நடந்த கொள்ளை சம்பவத்தில்  அடையாளம் தெரியாத நபரால் சரத் கொப்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

    துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க வலை வீசிவரும் அந்நாட்டு காவல்துறை, குற்றவாளியை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி, அம்மாநில அரசின் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை மந்திரி கே.டி. ராமா ராவ் மற்றும்  ஆகியோர் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.



    இதையடுத்து, இந்திய மாணவர் சரத் கொப்புவின் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்தார்.  

    இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தார் அமெரிக்கா செல்ல விரும்பினால் அதற்கான விசா ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், மேலும், மாணவரின் உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். #KansasShootting #SharathKoppula #SushmaSwaraj
    ×