என் மலர்
நீங்கள் தேடியது "Fraud"
ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறர்கள். போலி ரசீது மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜி.எஸ்.டி. வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.
இந்த போலி நிறுவனங்கள் மூலம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ரூ.700 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டனர். பல்வேறு செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை நடத்தியது தெரியவந்தது.
இந்தூரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி வரி கமிஷன் மற்றும் மத்திய பிரதேச போலீசின் சைபர் பிரிவு ஆகியவற்றின் கூட்டு விசாரணையில் இந்த மிகப்பெரிய மோசடி அம்பலமானது. மோசடி தொடர்பாக 5 பேர் குஜராத் மாநிலம் சூரத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷித்கான் கூறும்போது, ‘மோசடியில் ஈடுபட்டவர்கள் வழக்கமான வங்கி சேவைகளை தவிர்ப்பதற்காக பல டிஜிட்டல் வாலட் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.
சோதனையின்போது சூரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த கட்டிடத்தில் போலி நிறுவனங்களின் செல்போன்களின் சிம் கார்டுகள், ஆவணங்கள் லெட்டர் பேடு, முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதான அனைவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்’ என்றார்.
- ஆன்லைன் மோசடியில் பெண் ரூ.9 லட்சத்தை இழந்தார்
- அதிர்ஷ்டம் அடித்ததாக நம்ப வைத்து
திருச்சி:
திருச்சி தென்னூர் ஓதமினார் மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் அகமது ஷெரீப். இவரது மகள் அனிஷா அமல். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் கோன் பனேகா குரோர்பதி நிறுவனத்திலிருந்து பேசுகிறோம்.
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ. 35 லட்சம் மற்றும் பி எம் டபிள்யூ கார் பரிசாக விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு ரூ. 9 லட்சத்து 39 ஆயிரத்து 500 பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அனுஷா அம்மாள் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு ரூ. 9 லட்சத்து 39,500 செலுத்தியுள்ளார்.
ஆனால் பல மாதங்கள் ஆன பின்னரும் பரிசுத்தொகை அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனுஷா அமல் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிந்துமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வாடிக்கையாளரிடம் 37 பவுன் நகை- ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
- வியாபாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் விருதுநகர் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கடந்த 2 வருடமாக சென்று வந்தார்.
இதில் கடை உரிமையா ளர் மண்டலே உத்தம் ஜோதி ராம், அவரது மனைவி அஸ்வினி, மாமனார் யஷ்வந்த் ஆகியோர் பழக்கமாகினர்.
இந்த நிலையில் முத்துக்குமார் தனக்கு சொந்த மான நகைகளை அடகு கடையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரிடம் நகைக்கடை உரிமையாளர் மண்டலே உத்தம் ஜோதிராம் நகைகளை என்னிடம் கொடுங்கள், வட்டி வேண்டாம் என்று கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து முத்துக்குமார் கடந்த 2021ம் ஆண்டு 37 பவுன் நகைகளை மண்டலே உத்தம் ஜோதிராமிடம் கொடுத்துள்ளார். மேலும் நகையை மீட்பதற்கு ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் நகை-பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுபற்றி முத்துக்குமார் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மண்டலே உத்தம் ஜோதி ராம், அஸ்வினி, யஷ்வந்த் ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் இதேபோல் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
- தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரும் அரசு வேலைக்காக தலா ரூ.3 லட்சம் வீதம் வரதராஜன் மூலம் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் தொட்டியம் வெங்காயபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 47). இவர் அரசு வேலைக்காக கடந்த பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சமயபுரத்தை அடுத்த கூத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ சண்முகவேல் (65) என்பவர் வரதராஜனிடம் சமயபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து இவர் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வரதராஜனும் அவரை முழுமையாக நம்பினார். பின்னர் ஆசிரியர் பணிக்காக 2017-ம் ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் பணத்தை ராஜ சண்முகவேரிடம் கொடுத்திருந்தார்.
மேலும் தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோரும் அரசு வேலைக்காக தலா ரூ.3 லட்சம் வீதம் வரதராஜன் மூலம் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வெகு காலம் ஆகியும் மேற்கண்ட 3 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பின்னர் ஒவ்வொரு முறையும் பணத்தை திருப்பி கேட்கும் போது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து தப்பித்து வந்தார். இதனால் நம்பிக்கை இழந்த வரதராஜன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ராஜ சண்முகவேல் பணம் தர மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வரதராஜன் தொட்டியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி முன்னாள் கோவில் அறங்காவலர் ராஜ சண்முகவேல் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தனியார் பாலிடெக்னிக்கில் ரூ.41 ½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரி நிர்வாக குழு தலைவர் சுதர்சன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் எங்களது கல்லூரியில் 2017-18, 2019-20 ஆகிய ஆண்டின் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை ஆய்வு செய்த போது கல்லூரியில் கணக்காளராக பணிபுரிந்த சிவகாசி செங்கமலநாச்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜோசப் லயோலா (47) மற்றும் சிவகாசி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த செல்வசுதா (35) ஆகியோர் ரூ.48 லட்சத்து 5 ஆயிரத்து 863 மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக 2 பேரிடமும் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜோசப் லயோலா ரூ.6 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள 41 லட்சத்து 51 ஆயிரத்து 863 ரூபாயை 2 பேரும் மோசடி செய்து விட்டனர் என கூறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பணம் மோசடி செய்த ஜோசப் லயோலா, செல்வசுதா ஆகிய 2 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
- வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பகுதியில் ரகுமான் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரகுமானிடம் வெளிநாடு வேலை செல்வதற்கு பணம் கொடுத்து இதுவரை விசா வராமல் ஏமாற்றம் அடைந்ததாக 40-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுக்க சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர்.
இதில் குத்தாலம் பகுதியை சேர்ந்த ராஜதுரை, கும்பகோணம் பகுதி யாசர், திருப்பத்தூர் பகுதி மணிமொழி, மற்றும் தைக்கால், கூத்தியம்–பேட்டை, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்ததற்கான புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர்.
இது குறித்த பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ரகுமான் ஒவ்வொருவரிடமும் 1 லட்சம், 90 ஆயிரம், 1 லட்சத்து 20 ஆயிரம் என வெளிநாடு வேலைக்கு தகுந்தாற்போல் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
மேலும் வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டு தர வேண்டும் என்றனர்.
- ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார்.
- ஆத்திரம் அடைந்த நவராஜன், பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
களக்காடு:
வள்ளியூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் தேவதாசன் மகன் நவராஜன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு களக்காடு அருகே மேலக்காடுவெட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
அப்போது, இவரும், இவரது மனைவி எல்சிராணியும், மேலக்காடு வெட்டியை சேர்ந்த தொழிலாளி ஜான் கருப்பசாமியிடம் (வயது46) சொந்த வீடு கட்டுமான பணி நடைபெறுவதாகவும், அதற்காக கடன் வாங்கியுள்ளதாகவும், கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறி, அதற்காக ரூ.80 ஆயிரம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார். இதுபோல அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி பொன்னுத்தாயிடம் 6 பவுன் தங்க நகைகளை நவராஜனும், அவரது மனைவி எல்சிராணியும் கடனாக பெற்றுள்ளனர்.
பின்னர் பணத்தையும், தங்க நகைகளையும், திரும்ப கொடுக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று ஜான் கருப்பசாமி களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவராஜனிடம், ஜான் கருப்பசாமி பணத்தை திரும்ப கேட்டார்.
அதற்கு ஆத்திரம் அடைந்த நவராஜன், பணத்தை தர முடியாது, இனிமேல் பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக சபை ஊழியர் நவராஜன், அவரது மனைவி எல்சிராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- பெண்ணிடம் பண மோசடி செய்ததாக மாரிமுத்துவை கே.புதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விக்ரமங்கலத்தை சேர்ந்தவர் தெய்வம். இவரது மனைவி சுதா (வயது 41). இவர் கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
எனது மகன் ஞான பிரகாசம் என்ஜினீயரிங் படித்து உள்ளார். அவருக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையில் சுற்றுலா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா, மாரிமுத்து மற்றும் செந்தில்பாண்டி ஆகிய 3 பேரும் எங்களை தொடர்பு கொண்டனர்.
அவர்கள், தாய்லாந்தில் வேலை வாய்ப்பு உள்ளது. நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் மகனை அங்கு அனுப்பி வைத்து நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பி நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் எனது மகனை தாய்லாந்துக்கு அனுப்பாமல் மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சரிவர வேலை தரப்படவில்லை. இதனால் அவர் அங்கு கொத்தடிமையாக வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷ னர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் இது தொடர்பாக சுதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுற்றுலா நிறுவனத்திடம் ரூ.2 லட்சம் வழங்கியதற்கான ஆதாரங்களை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து ேமாசடியில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் மதுரை மாட்டுத்தாவணியில் சுற்றுலா ஏஜென்ட் நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா மற்றும் மதிச்சியம் ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 39) ஆகிய 2 பேரும், ஏஜென்ட் செந்தமிழ் பாண்டி என்பவர் உதவியுடன் சுதாவிடம் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது.
இதனை தொடர்ந்து தாய்லாந்து அனுப்புவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி செய்ததாக மாரிமுத்துவை கே.புதூர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமர் திட்டத்தில் வீடுகட்ட காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பிரதம மந்திரி அவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதாக கூறி புரோக்கர்கள் மூலம் காண்ட்ராக்டர்களை வரவழைத்து, ரூ.50 லட்சம் முன்பணம் கட்டுபவர்களுக்கு 1000 வீடுகள் கட்டி தருவதற்கான காண்டிராக்ட் பெற்று தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பி மதுரை சம்பகுளத்தைச் சேர்ந்த சிவரத்தினம் (வயது 65) என்பவர் 50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி உள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி காண்டிராக்ட் பெற்று தரவில்லை.
எனவே சிவரத்தினம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது ராஜசேகர் காசோலைகளை கொடுத்து உள்ளார். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. சிவரத்தினம் இது தொடர்பாக மதுரை மாநகர குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இவருக்கு சொந்தமான ஹோட்டல் ஏற்காட்டில் உள்ளது. அந்த ஓட்டலை விற்பதாக கடந்த மாதம் விளம்பரம் கொடுத்துள்ளார்.
- ரூ.20 ஆயிரத்தை மீட்டு வங்கிக்கணக்கில் சேர்த்த னர். ரூ.53 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 53). இவருக்கு சொந்தமான ஹோட்டல் ஏற்காட்டில் உள்ளது. அந்த ஓட்டலை விற்பதாக கடந்த மாதம் விளம்பரம் கொடுத்துள்ளார்.அதைத் தொடர்ந்து ஒரு நபர் ஜெகதீஷ் இடம் போனில் தொடர்பு கொண்டு அந்த ஓட்டலை வாங்கிக் கொள்வதாக கூறி விலையை பேசி அதில் பாதி தொகையை அட்வான்ஸ் தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அட்வான்ஸ் தொகையை தருவதற்கு ஜெகதீஷ் இடம் அந்த மர்ம நபர் பதிவு தொகையாக ரூ.73 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் படி கேட்டுள்ளார்.இதை உண்மை என்று நம்பிய ஜெகதீஸ் அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.73 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.உதவி கமிஷனர் செல்லப்பாண்டியன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து ஜெகதீஷ் அனுப்பிய ரூ.20 ஆயிரத்தை மீட்டு வங்கிக்கணக்கில் சேர்த்த னர். ரூ.53 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏமாற்றுப் பேர்வழிகள் தற்போது நூதனமாக பல்வேறு முறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும்,பணத்தை இரட்டிப்பு செய்வதா கவும்,விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்புவதாகவும்,கூறி பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். செல் போனுக்கு வரும் எஸ்எம்எஸ்களை ஆராய்ந்த பிறகு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றனர்.






