என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலத்தை விற்பதாக ரூ.9.90 லட்சம் வாங்கி மோசடி
Byமாலை மலர்3 Jun 2022 9:46 AM GMT (Updated: 3 Jun 2022 9:46 AM GMT)
நிலத்தை விற்பதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை அலங்காநல்லூர், சேட்டு கடையைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 31). வாடிப்பட்டி தாமோதரன் மனைவி பவித்ரா என்பவருக்கு சொந்தமாக தாத்தாம்பட்டியில் 1.8 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை வாங்குவதற்காக மீனாட்சிசுந்தரம், பவித்ரா உள்பட சிலருடன் ஒப்பந்தம் செய்து இருந்தார்.
இதற்காக அவர் முன்பணமாக ரூ.9.90 லட்சம் கொடுத்து உள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் நிலத்தை பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மீனாட்சிசுந்தரம், மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மீனாட்சி சுந்தரத்திடம் ரூ.9.90 லட்சம் வாங்கிக் கொண்டு நிலத்தை பதிவு செய்து கொடுக்காத விவரம் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கொழிஞ்சிப்பட்டி பிரபு (25) என்பவரை கைது போலீசார் செய்தனர். மேலும் அவரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர குமாரம் பாஸ்கர், அவரது மகன் செந்தில், தெத்தூர் தினேஷ்பாபு, பவித்ரா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X