search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth"

    • 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
    • இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

    • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
    • பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பாலாபபூர் பகுதியில் உள்ள ராயல் காலனியில் நேற்று [ஜூன் 13] இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சையத் சமீர் என்ற அந்த 28 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பாபேட் பகுதியைச் சேர்ந்த அலங்காரத் தொழிலாளர் சையத் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் அவரைகொலை வெறியுடன் துரத்தியுள்ளனர். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைந்த ராயல் காலனி பகுதியில் சையதை துரத்திப் பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களில் ஒருவன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சையதை குத்தினான். சையத் சரிந்து கீழே விழுந்த நிலையிலும் அவரை கண்மூடிதனமாக அவர்கள் உதைத்ததை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    சையத்தை அவர்கள் தாக்கியபோது அருகே பலர் நடந்து சென்று கொண்டிருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் மர்ம நபர்களை வீடியோ காட்சிகளின் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனர்.  

    • யுவராஜூக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது
    • இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

    கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    நேற்று முன் தினம் [ஜூன் 8] 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

     

    ஏற்கனவே இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனி நாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என்று கனடா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பைக்கில் சாகசம் செய்து வரும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது.
    • இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது சென்னையில் இயல்பாகிவிட்டது.

    ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

    பைக்கில் சாகசம் செய்து வரும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையும் தொடர்ந்து வருகிறது. போலீசார் பேச்சு கேட்காமல் உள்ளவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதைதொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தான் செய்த பைக் சாகசத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். போக்குவரத்தை விதிகளை மீறியும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் பைக் சாகசம் செய்துள்ளார்.

    ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
    • ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் 234 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். 2019ஆம் ஆண்டு 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற நரேந்திர மோடி, இப்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார்.

    தமிழ்நாட்டில் பாஜக வாங்கிய வாக்குகள் பாமகவிற்கு சொந்தமானது தான். இங்கு பாமகவிற்கு 7 முதல் 8 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது. பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு பாமக தான் காரணம்.

    நாம் தமிழர் கட்சிக்கு ஏமாந்த இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தான விஷயம். அவர் ஒரு பிரிவினைவாதி தான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது.

    • இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.

    சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

    போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.

    இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

     

    இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் உள்ள டால்பின் நீச்சல் குளம் ஒன்றில் நேற்று (மே 20) ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது இளைஞன் ஒருவன் சாகசம் செய்யும் நோக்கில் நீச்சல் குளத்துக்குள் குதித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகச் சாகசம் செய்யக் குதித்த இளைஞனின் முழங்கால் நீச்சல் குளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனின் முகத்தில் தாக்கவே மயக்கமடைந்த இளைஞன் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    சம்பவ நடந்த இடத்தில் அருகில் பலர் இருந்த போதும் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை. நீச்சல் குள லைப் கார்டும் ( உயிர்காப்பாளரும்) மிகவும் தாமதமாக அங்கு வந்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அவரின் அலட்சியத்தையும் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீச்சல் குளம் இயங்கி வந்ததே மற்றொரு உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

     

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நீச்சல் குளத்துக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி இதுபோன்ற பல நீச்சல் குளங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.  

    • கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் என்பவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்-ஐ ஒவ்வொன்றாக அவர் முடித்துள்ளார்.

    இதன் இறுதியில் அவர் வங்கி கணக்கில் இருந்து ₹2.50 லட்சம் வரை பணத்தை இழந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .

    இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

    • அஜித் நெகட்டிவ் வேடத்தில் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • இப்படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

    பிரபல நடிகர் அஜித்குமார் சில வருடங்களாக சினிமா படங்களில் நரைத்த முடி, தாடியுடன் 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் நடித்து வருகிறார் .

    2015- ம் ஆண்டு அஜித் 'என்னை அறிந்தால்: படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு மட்டும் டை அடித்து இளமையான தோற்றத்தில் நடித்து இருந்தார். அதன் பின் அவர் எந்த படத்திலும் இளமை தோற்றத்தில் நடிக்கவில்லை. மேலும் மகிழ்திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்திலும் இதே போன்று தான் நடித்து வருகிறார்.




    இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகிற மே 10 -ந் தேதி தொடங்க இருக்கிறது.

    இப்படத்தில் மற்ற நடிகர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இதில் படமாக உள்ளன. அதன் பின் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.மேலும் இந்த படத்தில் தலை முடிக்கு 'டை' அடித்து அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார்

    மேலும் இப்படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் தோன்ற உள்ளார். அவரை இளமையாக காட்ட நவீன தொழில்நுட்பம் பயன் படுத்துகிறது.



    மேலும் அஜித் நெகட்டிவ் வேடத்தில் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இப்படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால் இப்படத்தை மிக சிறப்பாக இயக்கவும் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதுவரை நான் மனசாட்சிபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன்.
    • இது ஜனநாயக நாடு. 16 லட்சம் பேரின் வீட்டிற்கும் தனித்தனியாக எம்பி சென்று பார்க்க முடியாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமத்தில் காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்தார்.

    அப்போது அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த அவர் தானும் பேட் பிடித்தார்.

    இன்னொரு முறை வரும்போது உங்களுக்கு நான் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

    இதனை கேட்ட இளைஞர் ஒருவர், 'இதன் பிறகு எப்ப நீங்க வரபோறீங்க?', என்று நக்கலாக கேட்க, சீரியஸ் ஆன கார்த்திக் சிதம்பரம் அந்த இளைஞரை அழைத்து, 'இது ஒரு தவறான புரிதல். நினைத்தால் கூட 16 லட்சம் பேரை பார்க்க முடியாது. ஒரு வார்டு கவுன்சிலர் கூட 1500 பேரை திரும்ப திரும்ப பார்க்க முடியாது. 16 லட்சம் பேரை நிகழ்ச்சி இருந்தால் தான் பார்க்க முடியும். எம்பி வந்து பார்ப்பது இல்லை என்பது ஒரு தவறான புரிதல். எம்பி வந்து பார்க்க முடியாது. இதற்கு முன்னாள் ஒரு எம்பி இருந்தாரே அவரின் பேர் தெரியுமா? என்னை எதற்கு தேர்தெடுக்கிறீர்கள். பார்லிமெண்டில் பேசுவதற்குதான். நான் பார்லி மெண்டில் பேசாமல் இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம். மக்கள் குறைகளை நான் பலமுறை பார்லிமெண்டில் பேசியிருக்கிறேன். ஆனால் அதை யாரும் பார்க்கமாட்டீர்கள். இதுவரை நான் மனசாட்சிபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன்.

    இது ஜனநாயக நாடு. 16 லட்சம் பேரின் வீட்டிற்கும் தனித்தனியாக எம்பி சென்று பார்க்க முடியாது. ஒரு கிரிக்கெட் மேட்ச் வையுங்கள். என்னை அழையுங்கள். நான் வந்து அந்த விழாவில் கலந்து கொள்கி றேன். எனவே தவறான புரிதல் வேண்டாம்' என்று அவர் இளைஞர்களுக்கு எடுத்து கூறினார்.

    • முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.
    • இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லாதவர்களுக்கு இரட்டை அடி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக்கூட வரிசையில் நிற்கின்றனர்.

    முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.

    ஆட்சேர்ப்பு முடிந்தாலும் கூட கேள்விதாள் கசிந்து விடுகிறது. தேர்வுகள் நடந்தாலும் கூட அதன் முடிவு தெரியாது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முடிவு வந்தாலும் பணியில் சேர்வதுதை உறுதி செய்வதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.

    ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறை வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறார். இவையனைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கும் போது, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது, இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது.இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லா தவர்களுக்கு இரட்டை அடி.

    காங்கிரசின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

    ×