என் மலர்
தெலுங்கானா
- பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார்.
- மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.
தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார் .
இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்திரய்யா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (ஜனவரி 11) காலமானார். அவரது இறுதி விருப்பப்படியே, தான் பார்த்து பார்த்துச் செதுக்கிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக தனக்குத் தானே கல்லறை கட்டியது குறித்து இந்திரய்யா ஊடகங்களிடம் பேசியவை அவர் இறந்த பின், மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
அதில் அவர், எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன்." என்று பேசியிருந்தார்.
மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
- இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீநிகில், ரோகித் மற்றும் மாணவி நட்சத்திரா. இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை மோகிலாவிலிருந்து ஐதராபாத்திற்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
மிர்ஜ குடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீ நிகில், ரோகித் ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
நட்சத்திரா படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நட்சத்திராவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்ததாக கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு.
- தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்த அவரை தூக்கிலிட வேண்டும் என ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார்.
ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அநீதி இழைத்ததாக பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேக ராவ் மற்றும் அவரது மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அநீதி இழைத்த இருவரையும் தூக்கில் போட தகுதியானவர்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும் என பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராம ராவ் கூறுகையில் "உண்மையில் யாரை தூக்கிலிட வேண்டும். ராகுல் காந்தி வாரங்கலுக்கு வந்தார். அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ரைத்து பாண்டு (Rythu Bandhu) கீழ் கேசிஆர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் 15 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். அவர்கள் கொடுத்தார்களா?. அவர்கள் இரண்டு பயிர்களுக்கு கொடுக்கவில்லை. தற்போது அவர்கள் 15 ஆயிரத்திற்குப் பதிலாக 12 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
அனைத்துப் பயிர்களுக்கும் ரூ.500 போனஸ் வழங்குவது, குத்தகை விவசாயிகளுக்கு ரைத்து பாண்டு திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட மற்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறதா?.
அப்படியானால், யாரைத் தூக்கிலிட வேண்டும்? ரேவந்த் ரெட்டியை அல்ல. அவரை நம் மீது திணித்த ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும். வாரங்கலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ராகுல் காந்தி 70 லட்சம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். அவரை ஒரு திறந்தவெளி சந்தையில் தூக்கிலிட வேண்டும்.
இவ்வாறு ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
- கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
- தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான கவிதா அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கேசிஆரின் மகனான கே.டி. ராமராவ் கட்சியில் அதிக அதிகாரத்துடன் வலம் வந்ததும், மகள் கவிதா ஓரங்கட்டப்பட்டதும் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தது.
கவிதா, அண்ணன் ராமராவை மறைமுகமாக பலமுறை விமர்சித்து வந்தார். தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.
கவிதாவின் நடவடிக்கைகளுக்காக கேசிஆர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தார். அதற்கு அடுத்தநாளே கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்தார்.
இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை கவிதா அறிவித்துள்ளார்.
நேற்று தெலுங்கானா சட்ட மேலவையில் கவிதா பேசும்போது, "சுயமரியாதைக்காகவே எனது தந்தையின் கட்சியை விட்டு வெளியேறினேன்" என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.
தனது பங்களிப்புகள் இருந்தபோதிலும், கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் தனது முடிவுக்கு காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் சொத்து தகராறு காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தெலுங்கானா பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து உழைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ''நாங்கள் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும்.
எங்களின் கட்சி என்றும் தெலுங்கானா மக்களின் கட்சி என்றும் நாங்கள் நினைத்த பிஆர்எஸ், பல விஷயங்களில் எங்களை கைவிட்டுவிட்டது. எங்கள் லட்சியங்களை அது நிறைவேற்றவில்லை. புதிய கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்'' என தெரிவித்தார்.
தெலுங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் கவிதா, அந்த அமைப்பையே அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார். தெலுங்கானாவில் தற்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் அங்கு 3 ஆண்டுகள் கழித்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
- பத்து வருடங்களாக பிஆர்எஸ் எதுவுமே செய்யவில்லை
- ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை
தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி,
"தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசிய பாஜக தலைமை,
"காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றிவிட்டது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து ஜனநாயக வரம்புகளையும் மீறி, சபையிலேயே மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இது ஒரு தற்செயலான தவறு அல்ல. இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடு.
இதுதான் இந்திய தேசிய காங்கிரஸின் உண்மையான முகம். அங்கு கண்ணியம், ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அறவே இடம் என்பது இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை." எனக் குறிப்பிட்டுள்ளது.
பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
- புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.
- முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA)வை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும், தெலுங்கானா மாநில சட்டமன்றம் MGNREGA சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதற்குப் பதிலாக வந்த VB GRAM G ராம்ஜி சட்டத்தை ரத்து செய்யவும் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் அசல் நோக்கத்தை பலவீனப்படுத்தியதாகவும் சட்டமன்றத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்வில் பேசுகையில், "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.
இதன்மூலம் பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.
முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.
பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒருங்கிணைந்த ஆந்திராவில் அநீதிக்கு ஆளாக்கப்பட்டதால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
- கிருஷ்ணா, கோதாவரி நீர் பயன்படுத்துதலில் பி.ஆர்.எஸ். ஆட்சியில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் ஒன்றாக இருந்தபோதிலும் விட, கே. சந்திரசேகர ராவ் ஆட்சிச் காலத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்காக பி.ஆர்.எஸ். ஆட்சியில் நீர்ப்பாசன துறை அமைச்சர்களாக இருந்த சந்திரசேக ராவ் மற்றும் அவருடைய மருமகன் டி. ஹரிஷ் ராவ் ஆகியோர் தூக்கில் போட தகுதியானவர்கள் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆற்று நீர் பிரச்சினை தொடர்பாக, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். உட்டம் குமார் ரெட்டி உருவாக்கப்பட்ட திட்டம் குறித்து விளக்கினார். அப்போது ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் அநீதிக்கு ஆளாக்கப்பட்டதால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. கிருஷ்ணா, கோதாவரி ஆற்று நீர் பயன்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்குதல் ஆகியவற்றில் பி.ஆர்.எஸ். ஆட்சியில் மாநிலத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நம்மைச் சுரண்டும் வெளியாட்களை நாம் விரட்டியடிப்போம், நம்மைச் சுரண்டும் நம் சொந்தப் பகுதி மக்களை உயிருடன் புதைப்போம் என்ற தெலுங்கானா கவிஞர் கலோஜி நாராயணா ராவின் கருத்து சுட்டிக் காட்டுகிறேன்.
பி.ஆர்.எஸ். ஆட்சிக் காலத்தில் தெலுங்கானா மாநில பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் என். கிரண் குமார் ரெட்டியின் நிலையை இருவரும் எதிரொலித்ததால், தெலுங்கானா மாநிலத்திற்கு மிகப்பெரிய தீமை.
கவிஞர் என்ன சொன்னரோ, அது இந்த இருவருக்கும் பொருந்தும். ஆற்று நீர் விவகாரங்களில் நடந்த அநீதிக்காக அவர்களைத் தூக்கிலிட்டாலும் அது தவறில்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதற்கு பிஆர்எஸ் கட்சி சந்திரசேகராவ் மற்றும் அவரது மருமகன் டி. ஹரிஷ் ராவ் மரணத்தை விரும்புவதாக ரேவந்த் ரெட்டி மீது குற்றம்சாட்டியுள்ளது.
- பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
- தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து இந்திரய்யா கூறுகையில், தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
- சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என ரேவந்த் ரெட்டி சபதம்.
- கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சபதம் எடுங்கள் எடுங்கள் என கே.டி. ராம ராவ் பதில் கொடுத்துள்ளார்.
தெலுங்கானா முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டி, தான் அரசியலில் இருக்கும் வரை கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் செய்தார்.
இதற்கு சந்திரசேகர ராவ் மகன் கே.டி. ராம ராவ் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-
நீங்கள் (ரேவந்த் ரெட்டி) கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் எடுத்தீர்கள். உங்களுக்கு அதிகமான திறமை இருந்தால், ஏழை பெண்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஒரு டோலா தங்க திட்டம் அமல்படுத்தப்படும் என சபதம் எடுங்கள். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அவதூறாக பேசுவது முதல்வருக்கு பொருத்தமற்றது.
இவ்வாறு கே.டி. ராம ராவ் தெரிவித்தார்.
2023 சட்டசபை தேர்தலின்போது, ஏழை பெண்களுக்கு ஒரு டோலா தங்கம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
தற்போதை காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தோலை உரித்துவிடுவதாக சந்திரசேகர ராவ் மிட்டும் வகையில் பேசியிருந்தார். அதற்கு ரேவந்த் ரெட்டி கடுமையாக வகையில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் கே.டி. ராம ராவ் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
- 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவருடைய கோடங்கல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
2029 தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.
உங்கள் அரசியல் என்னவென்று நான் பார்க்கிறேன். நான் அரசியலில் இருக்கும் வரை, விஷம் போன்ற கே.சி.ஆர். குடும்பத்தை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டேன். இது எனது சபதம். கோடங்கல் மண்ணின் மைந்தனாக இந்த மண்ணில் இருந்து இந்த சபதத்தை நான் ஏற்கிறேன்.
நான் அரசியலில் இருக்கும் வரை, கே.சி.ஆருக்கு அதிகாரம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ், காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அது பயனற்ற ஆட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.
- நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- அண்மையில் நடிகை நிதி அகர்வாலுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவின்போது நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை சமந்தா கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து வேகமாக தனது காருக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவும் சிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ராஜாசாப் படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து கவலைகள் எழுப்புவதாக இணையத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி.
- கமல்ஹாசன், மம்முட்டி, விஜயகாந்துடன் ஜோடியாக நடித்துள்ளார்.
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி. (52). இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்பட பலருடன் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனுடனும் நடித்துள்ளார்.
தமிழிலும் தங்கமான தங்கச்சி, ஆனஸ்ட்ராஜ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் காஜா மொய்தீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1992-ல் வெளியான முதல் சீதனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் ராமசந்திர ராவ் முன்னிலையில் நடிகை ஆம்னி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன் பிரபல மேக் அப் ஆர்டிஸ்ட் சோபா லதாவும் பா.ஜ.க.வில் இணைந்தார்.






