என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தெலுங்கானா
- சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.
- பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.
திருப்பதி:
மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கா் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் முடிந்து விட்டது.
தெலுங்கானா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 3.26 கோடியாகும். 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா்.
ஆளும் பி.ஆா்.எஸ்., முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பி.ஆா்.எஸ். தலைவரும் முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அவரது தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் களமறங்கியுள்ளது.
பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 8 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியை தனது கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு அளித்துள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறாா். அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஐதராபாத்தில் 9 தொகுதிகளில் களத்தில் இருக்கிறது.
மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலுங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இந்த 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இந்த தோ்தல்கள் கருதப்படுகிறது. தெலுங்கானாவில் வெற்றி யாருக்கு? என்ற பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் முதல்முறையாக இந்த தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாதம் 9-ந் தேதி அமலுக்கு வந்தன. அப்போது முதல் நேற்று வரை, ரூ.737 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், மதுபானங்கள், தங்கம், இலவசப் பொருள்கள் உள்ளிட்டவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் போலீசார் மற்றும் 70 கம்பெனி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இறுதி நாளான இன்று தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
- நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.
ஐதராபாத்:
5 மாநில தேர்தலில் கடைசி கட்டமாக தெலுங்கானாவில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக உழைத்து வருகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
பிரசாரத்தின் இறுதி நாளான இன்று கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர்.
கரீம் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆளும் சந்திரசேகர் ராவ் அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார்.
ஐதராபாத் அருகே நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓயந்தது.
நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.
- தெலுங்கானாவில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அவர்கள் ஒரே அணி...இங்கே பி.ஆர்.எஸ், பா.ஜ.க, ஏ.ஐ.எம்.ஐ.எம். ஒரு அணியாகச் செயல்படுகிறார்கள். முதல் மந்திரி கே.சி.ஆர். மீது எந்த வழக்கும் இல்லை. ஊழல் மிகுந்த அரசை நடத்துகிறார்.
பிரதமர் மோடிக்கு உதவுவதால் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி மீதும் எந்த வழக்கும் இல்லை. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையும் அவர்களுக்குப் பின்னால் இல்லை என தெரிவித்தார்.
- ராகுல் காந்தி துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் உரையாடி ஓட்டு வேட்டை.
- பா.ஜனதா தலைவர்கள், சந்திரசேகர ராவ் கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்.
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில தேர்தல் முடிவடைந்ததால் உள்ளூர் தலைவர்கள், தேசிய தலைவர்கள் தெலுங்கானா பக்கம் திரும்பினர்.
கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை தெலுங்கானாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பல்வேறு இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மாநில தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கடைசி நாளான இன்றும் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, இன்றைய பிரசாரத்தின்போது கேசிஆர் மக்களை சந்திக்காமல் பண்ணை வீட்டில் வசிக்கிறார் என விமர்சித்தார்.

நேற்று பா.ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு வேட்டை நடத்தினர். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ் கட்சிக்கு சென்றடையும். இதனால் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். இன்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் சந்திரசேகர ராவ் கட்சியின் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் தலைவர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
நாளை வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, வாக்கு இயந்திரங்கள் வாக்குமையத்திற்கு கொண்டு செல்லப்படும். நாளைமறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.
- தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
- பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.

தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு விளம்பரங்கள் வெளியீடு.
- பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு செய்த சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை வெளியிட்டது.
கர்நாடக அரசு விளம்பரங்கள் தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானா மாநில நாளேடுகளில் விளம்பரங்களாக வெளியிடுவது குறித்து பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கும் தேர்தல் ஆணையம், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் விளம்பரங்கள் தெலுங்கானா நாளேடுகளில் வெளியிட தடை விதித்து இருக்கிறது.

தேர்தலில் பலத்தை நிரூபிக்க காங்கிரஸ் கட்சி பொது மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டி இருந்தது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கட்சி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யானின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதே நாளில் தெலுங்கானா மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் என மொத்தம் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
- தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
- நாளை வரை 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநித்தில் தேர்தலின்போது வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு, இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில், வாக்களிப்பை அதிகரிக்கவும், பொது மக்களின் சிரமங்களை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள மையங்களுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தகவல் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி நேற்று தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
- வருகிற 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தீவிர பிரசாரம்.
ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு, பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தெலுங்கானாவில் தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்காணக்கான மக்கள் கூடியிருந்தனர். பிரதமர் மோடியை பார்ப்பதற்காக பல இளைஞர்கள் டவர் போன்ற கட்டமைப்புகள் மீது ஏறி பிரதமர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பிரதமர் மோடி இதை கவனித்துக் கொண்டார். இளைஞர்கள் திடீரென கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்னவாகும்? என கவலையை அடைந்தார். இதனால் அவர்கள் கீழே இறங்கும் வகையில் தனது பேச்சை நிறுத்தினார்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பிரதமர் மோடி "கோபுரத்தில் ஏறியவர்களை சுட்டிக்காட்டி, அவர்களை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டார். நீங்கள் என்னை பார்க்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளையில் நீங்கள் கீழே விழுந்தால் அது என்னை மிகவும் அப்செட் செய்துவிடும். தயது செய்து கீழே இறங்கவும்" எனத் தெரிவித்தார்.
ஒரு சிறுமி தேசியக்கொடியுடன் வந்திருந்தார். அவரை பார்த்து, "ஒரு சிறுமி பாரத மாதவாக வந்திக்கிறார். வீரம்" என்றார்.
#WATCH | Secunderabad, Telangana: During PM Modi's speech at public rally, a woman climbs a light tower to speak to him, and he requests her to come down. pic.twitter.com/IlsTOBvSqA
— ANI (@ANI) November 11, 2023
இதேபோல் கடந்த 11-ந்தேதி இளம் பெண், மின்னொளிக்காக கட்டப்பட்டிருந்த டவரில் ஏறினார். அவர் பின்னர் கீழே இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறுகிறது.
- நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதற்கான இறுதிகட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து இருந்தது.
அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இன்று நிதி உதவி வரவு வைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்து இருந்தார். நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.