என் மலர்

    தெலுங்கானா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.
    • மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    ஐதராபாத்:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை இன்று சந்தித்தனர். அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரசேகர் கூறியதாவது:

    இந்த அவசரச் சட்டத்தை நீங்களே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் கெஜ்ரிவாலை ஆதரிப்போம் என பிரதமரிடம் கோருகிறோம். அவருக்கு துணை நிற்போம்.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி அவசரச் சட்டத்தை முறியடிப்போம். தேவையின்றி பிரச்சனை செய்யாதீர்கள் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு நீதி வழங்க, கேசிஆர் கட்சி மற்றும் அவரது அரசு எங்களுடன் உள்ளது. இது டெல்லி மட்டுமல்ல, தேசத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது. கே.சி.ஆர் ஆதரவு எங்களுக்கு பலத்தை அளித்துள்ளது என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது
    • தெலுங்கானா மாநிலத்தின் 10-ம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது. அடுத்த மாதம் 1-ந் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

    ஜூன் 2-ந் தேதி 10-ம் ஆண்டு பிறக்கிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட தெலுங்கானா அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் 10-ம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தின் அடிப்படையில் விழா கொண்டாடப்படும். ஜூன் 2-ந் தேதி ஐதராபாத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து, தெலுங்கானா மாநிலம் உருவாக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு முதல்-அமைச்சர் சந்திரசேகரராவ் அஞ்சலி செலுத்தி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    21 நாள் கொண்டாட்டத்துக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி.
    • சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.

    ஐதராபாத்:

    டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சாரதா என்ற பெண்ணின் கொலை, நாட்டையே உலுக்கியது.

    அவருடன் சேர்ந்து வாழ்ந்த சமையற்கலை நிபுணர் அப்தாப் பூனவல்லா என்பவர், சாரதாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் ஆங்காங்கே வீசினார்.

    இந்த கொலையை நினைவுபடுத்தும்வகையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. அங்குள்ள முசி ஆற்றங்கரையில் நடைபாதையில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெண்ணின் தலை கைப்பற்றப்பட்டது.

    அவர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தும், காணாமல் போனவர்கள் பட்டியலை ஒப்பிட்டும் கொலையாளியை நெருங்கினர்.

    அவர் பெயர் சந்திரமோகன் (வயது 48). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார். ஐதராபாத்தில் சைதன்யபுரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி (55). வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் பணியாற்றி வந்தார். சைதன்யபுரியில், சந்திரமோகனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது திடுக்கிட்டனர். அனுராதா ரெட்டியின் தலையற்ற உடல், பாலிதீன் கவரில் சுற்றப்பட்டு, ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. அப்புறப்படுத்த தயார்நிலையில் இருப்பது தெரிய வந்தது.

    அனுராதா ரெட்டியின் துண்டிக்கப்பட்ட 2 கால்கள், 2 கைகள் ஆகியவை பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தன. வாசனை திரவிய பாட்டில்கள், பினாயில், டெட்டால், கல் உடைக்கும் கருவி ஆகியவையும் பிரிட்ஜில் இருந்தன.

    கைதான சந்திரமோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை நடந்தது எப்படி என்பது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ருபேஷ் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து அனுராதா ரெட்டியிடம் சிறிது சிறிதாக ரூ.7 லட்சம்வரை சந்திரமோகன் கடன் வாங்கி இருந்தார். அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    அந்த பணத்தை திருப்பித்தருமாறு அனுராதா ரெட்டி வற்புறுத்தி வந்தார். சந்திரமோகனால் கொடுக்க முடியவில்லை. எனவே, அனுராதா ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    உடலை அப்புறப்படுத்துவது எப்படி என்று 'கூகுள்' பார்த்து தெரிந்து கொண்டார். உடலை துண்டு போட என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்றும் ஆய்வு செய்தார்.

    கடந்த 15-ந் தேதி அனுராதா ரெட்டி வீட்டுக்கு சென்ற சந்திரமோகன், அவரது நெஞ்சிலும், வயிற்றிலும் குத்தி கொலை செய்தார். பின்னர், அனுராதாவின் தலையை துண்டித்தார். உடலை 6 துண்டுகளாக வெட்டினார்.

    டெல்லி சாரதா கொலையில், உடல் பாகங்கள் இரவு நேரங்களில் நகரம் முழுவதும் வீசப்பட்டதுபோல், நாள்தோறும் ஒரு பாகத்தை வீசி எறிய சந்திரமோகன் திட்டமிட்டார்.

    முதலில், கடந்த 17-ந்தேதி, தலையை மட்டும் முசி ஆற்றங்கரையில் வீசிவிட்டு, ஒன்றுமே நடக்காததுபோல் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    மற்ற உடல் பாகங்களை பிரிட்ஜ்க்குள் வைத்திருந்தார். அதிலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக, தினந்தோறும் வாசனை திரவியங்களை அடித்து வந்தார்.

    இன்னும் ஒருபடி மேலே சென்று, அனுராதா ரெட்டியின் செல்போனை எடுத்து, அப்பெண்ணே அவருடைய நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதுபோல், நாள்தோறும் செய்தி அனுப்பி வந்தார். இதன்மூலம், அனுராதா உயிருடன் இருப்பதுபோல் நம்ப வைத்தார்.

    சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம், ஐதரபாத்தில் உள்ள முசி ஆறு அருகே கடந்த 17ம் தேதி அன்று பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த உள்ளூர் குடிமைப் பணியாளர்கள் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியையும், உடல் பாகங்களையும் கண்டுபிடிக்க 8 போலீஸ் குழுக்களை அமைத்தனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில், ஐதரபாத்தை சேர்ந்த 48 வயது நபர் 55 வயதான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததும், ரூ.7 லட்சம் கடனை கேட்டதற்காக பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (தென் கிழக்கு மண்டலம்) சி.எச்.ரூபேஷ் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட நபர், உள்ளூர் நிதி முகவராக இருந்த 55 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் செலுத்த வேண்டிய ரூ.7 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு அந்த பெண் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணை கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றுள்ளார்.

    பின்னர், அந்த நபர் பெண்ணின் தலையை துண்டித்து, உடற்பகுதியில் இருந்து கால்கள் மற்றும் கைகள் மற்றும் உறுப்புகளை வெட்டி, தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்துள்ளார்.

    பின்னர், மே 15ம் தேதி பெண்ணின் தலையை கருப்பு கவரில் வைத்து முசி ஆறு கரை அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.

    மேலும், அந்த நபர் தான் தங்கியிருந்த பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானாவில் வங்கிக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டினார்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி.மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து அங்குள்ளவர்களை மிரட்டினார். அவர், தனக்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். தவறினால் வெடிகுண்டை வெடிக்க செய்துவிடுவேன் என்றார்.

    இதையடுத்து, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

    விசாரணையில், ஜி.டி.மெட்லா பகுதியைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் சிவாஜி என தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
    • சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு தேவன ஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.

    அவரது நிலையை அறிந்த பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சில பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விமாநிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பதும், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது பர்சில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த 26 கிரடிட் கார்டுகள் இருந்தன.

    சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணியிடம் வேலைக்கான இண்டர்வியூ செல்ல வேண்டும், எனது உடைமைகளை இழந்து விட்டேன் என கூறி ரூ.8 ஆயிரம் மோசடி செய்து உள்ளார். இதுபற்றி அந்த பயணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் ஒருவர் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து கொண்டு பயணம் செய்கிறார். அப்போது அவர் லேப் டாப்பில் வேலை செய்து கொண்டே பயணம் செய்வது போன்று காட்சி உள்ளது.
    • சில நேரங்களில் இருக்கும் எனவும், மற்றொரு நபர் இதை கொச்சைப்படுத்தக் கூடாது என்பது போன்ற கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

    பெங்களூருவில் பைக் சவாரியின் போதும் ஒரு பெண் லேப் டாப்பில் வேலை செய்த படி பயணம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டரில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து கொண்டு பயணம் செய்கிறார். அப்போது அவர் லேப் டாப்பில் வேலை செய்து கொண்டே பயணம் செய்வது போன்று காட்சி உள்ளது.

    பகிரப்பட்டதில் இருந்து 44 ஆயிரம் பார்வைகளையும், நூற்றுக்கணக்கான விருப்பங்களையும் பெற்றுள்ள புகைப்படத்தை பார்த்த வலைதள வாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் எப்போதும் வேலை அழுத்தம் இல்லை. சில நேரங்களில் இருக்கும் எனவும், மற்றொரு நபர் இதை கொச்சைப்படுத்தக் கூடாது என்பது போன்ற கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.
    • பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. 

    இதில், அதிகபட்சமாக விராட் கோலி 63 பந்துகளில் சதம் அடித்து ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, பிளெஸ்ஸி 71 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 5 ரன்களும், பிரேஸ்வெல் 4 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழக்காமல் விளையாடினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஐதரபாத்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்
    • அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 186 ரன்களை குவித்துள்ளது.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.
    • தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஆர்பி நகர் காலனி சேர்ந்தவர் கிஷ்டவ்வா (வயது 70). இவருக்கு சுடோ, ஏலா என 2 மகள்கள் உள்ளனர்.

    கிஷ்டவ்வாவுக்கு கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களது மகள்கள் தாயாரை சிகிச்சைக்காக காமரெட்டி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கிஷ்டவ்வாவுக்கு ஆர்.பி. நகரில் சொந்த வீடும், அங்குள்ள வங்கியில் ரூ. 1.70 லட்சம் பணம், நகைகள் உள்ளன. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.

    இதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷ்டவ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகள்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு மகள்கள் மற்றும் உறவினர்கள் வந்தனர். மகள்கள் இருவரும் தாயின் வீடு மற்றும் நகை, பணத்தை சரிபாதியாக பிரித்துக் கொடுத்தால் தான் பிணத்தை வாங்கி செல்வோம் என உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து மகள்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் அவர்கள் வீடு, நகை, பணத்தில் மட்டும் குறியாக இருந்தனர். தொடர்ந்து தாயின் உடலை வாங்க மறுத்தனர். வேறு வழியின்றி அவரது தாயாரின் பிணத்தை பிணவறையில் வைத்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print