என் மலர்
தெலுங்கானா
- கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார்.
- மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், ராமதுருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது30). இவரது சகோதரர் வெங்கடேஷ் ( 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நரேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத தவணையில் 2 லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டார். தொழில் சரியாக நடக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பங்கு சந்தையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தார். பங்கு சந்தையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மாதாந்திர தவணை கட்ட முடியாமல் தவித்து வந்தார். தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மாதத் தவணை செலுத்தி வந்தார்.
இதன் மூலம் நரேஷுக்கு ரூ.1.50 கோடி கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்குமாறு நரேஷுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
கடனை அடைக்க சகோதரரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சகோதரர் வெங்கடேஷ் பெயரில் தனித்தனியாக ரூ. 4.14 கோடிக்கு காப்பீடு செய்தார்.
ராகேஷ் என்பவர் நரேஷ் தனக்கு தரவேண்டிய ரூ. 7 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
ராகேஷை அணுகிய நரேஷ் தனது சகோதரரை கொலை செய்ய ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் மேலும் கூடுதலாக ரூ.13 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதேபோல் தன்னிடம் வேலை செய்யும் லாரி டிரைவர் பிரதீப்பை அணுகி அவருக்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்தனர்.
கடந்த 29-ந்தேதி லாரி டிரைவர் பிரதீப், நரேஷ்க்கு போன் செய்து லாரி புறநகரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நரேஷ் தனது சகோதரர் வெங்கடேஷை பைக்கில் லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் வெங்கடேஷை லாரி சக்கரத்திற்கு அடியில் படுக்க வைத்து லாரியை முன்னோக்கி இயக்கினர். லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வெங்கடேஷ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மறுநாள் காலை சகோதரர் லாரி மோதி இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் நேற்று நரேஷிடம் விபத்து எப்படி ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர்.
அப்போது நரேஷ் விபத்து குறித்து கூறிய விதம் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் நரேஷை பிடித்து விசாரணை செய்தபோது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், ராகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
- கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்.
இந்து தெய்வங்கள் குறித்து கேலியாக பேசியதாக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரேவந்த் ரெட்டி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? திருமணமாகாதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார் - அனுமன். இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். மது அருந்துபவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். கோழி பலிக்கு ஒன்று இருக்கிறது; பருப்பிற்கும் அரிசிக்கும் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கடவுள் இருக்கிறார்," எனக் கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அம்மாநில எதிர்க்கட்சியினரிடமிருந்து கண்டனங்களை பெற்றுவருகிறது. அவரின் இந்த பேச்சு இந்து நம்பிக்கைகளை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதுகுறித்து பாஜக தலைவர் பிரவீன் கூறுகையில், ரெட்டியின் கருத்துக்களால் மாநிலம் முழுவதும் உள்ள இந்துக்கள் வெட்கப்படுகிறார்கள். காங்கிரசுக்கும், ரேவந்த் ரெட்டிக்கும் வெட்கமில்லை. எல்லா கூட்டங்களிலும், முஸ்லிம்களால்தான் காங்கிரஸ் உருவானது என்று கூறுகிறார்கள். முதலமைச்சர் மன்னிப்பு கேட்டு தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.
பி.ஆர்.எஸ் தலைவர் ராகேஷ் ரெட்டி அனுகுலா, இந்து தெய்வங்களை கேலி செய்வது இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு ஃபேஷனாகிவிட்டது என்றார். மேலும், கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டி பேசுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்து கடவுள்கள் குறித்த தனது கருத்துடன் ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, பாஜகவைத் தாக்கி, "கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்" என கூறியிருந்தார். "கடவுள் கோயிலில் இருக்க வேண்டும். பக்தி இதயத்தில் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் உண்மையான இந்துக்கள். பாஜக தலைவர்கள் சாலைகளில் கடவுளின் புகைப்படத்தை வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள்," என பேசியிருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன.
- டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார் மெஸ்சி
- அரசு பள்ளி மாணவர்களுடன் மெஸ்சி கால்பந்து விளையாடவுள்ளார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், இந்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என தெரிவித்தார்..
இந்நிலையில் மெஸ்சி உடன் 'Friendly Match' விளையாடுவதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரவுநேரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
- மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருவதாக தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
- சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த போட்டியில் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய குஜராத் அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை விரட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் உர்வில் படேல் 37 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர் ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் 31 பந்தில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே 28 பந்தில் அவர் சதமடித்து அந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்து 2வது இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்தில் உர்வில் படேல் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள்.
- தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற திட்டம்.
தெலுங்கானாவில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் சர்வதேச சந்தைகளை எட்டும் வகையில் அமேசான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அக்சய பாத்திர பவுண்டேசன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேவந்த் ரெட்டி "தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற மாநில அரச திட்டமிட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய அமேசானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
குழந்தைகளின் கல்வி பெற்றோரின் வாழ்க்கையை மாற்றுவதால், கோடங்கல் தொகுதியில் உள்ள 312 அரசுப் பள்ளிகளில் 28,000 மாணவர்களுக்கு அக்ஷய பாத்திர அறக்கட்டளை மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது" என்றார்.
- பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் கருகி உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை சவுதியில் நடத்த ஏற்பாடு.
சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வது 5 கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமியர்களின் கடைசி மாதமான துல்-ஹஜ் மாதத்தில் இந்த புனித பயணம் மேற்கொள்வார்கள். மற்ற காலக்கட்டத்தில் சவுதி அரேபியா சென்று உம்ரா பயணம் செய்வார்கள்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த 9-ந்தேதி சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மெக்காவில் தங்கள் உம்ரா பணிகளை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.
மதீனா அருகே உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் டேங்கர் லாரி மோதியது. அதில் இருந்த யாத்ரிகர்கள் அனைவரும் தூங்கி கொண்டு இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டு பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 45 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகி இறந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த கோர விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு குழு உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்தது. மீட்பு குழு சம்பவ இடத்தை அடைவதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானதாகவும், உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் சவுதி மீட்பு படையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது. விபத்து குறித்த தகவல் அறிவதற்கு, 8002440003 (கட்டணமில்லா தொலைபேசி எண்), 0096 6122614093, 00966126614276 00966556122301 (வாட்ஸ் அப்) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விபத்து தொடர்பான விவரங்களை கேட்டு அறிந்துள்ளனர்.

இந்த நிலையில் நிவாரண பணிக்காக தெலுங்கானா அரசு சவுதி அரேபியாவுக்கு குழு ஒன்றை அனுப்பி வைக்க இருக்கிறது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையில் இந்த குழு செல்கிறது. சவுதி அரேபியாவில் உயிரிழந்தவர்கள் மதத்தின்படி இறுதிச் சடங்கை நடத்தவும் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து தலா இரண்டு பேரை அழைத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளது. அசாருதீன் உடன் ஒவைசி கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மற்றும் மைனாரிட்டி நலத்துறை அதிகாரிகளும் செல்ல இருக்கிறார்கள்.
- படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
- இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
ஐதராபாத்:
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது
ஏற்கனவே மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேசுகையில் தனது மறைந்த தந்தை நடிகர் கிருஷ்ணாவை நினைவு கூர்ந்தார்.
புராணப் படங்களில் நடிக்க வேண்டும் என எனது தந்தை விரும்பியிருந்தார்.
இந்தப் படத்தைப் பார்த்து தனது தந்தை பெருமைப்படுவார் என நம்புகிறேன்.
இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி.
இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு.
இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன்.
வாரணாசி படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும் என தெரிவித்தார்.
- அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார்.
- லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
தெவங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம். போண்டலபள்ளியை சேர்ந்த ஒருவர், ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார்.
இதற்காக நேற்று தளம் அமைக்கும் பணி நடந்தது.தொழிலாளர்கள் சிமெண்டு கலவை கொண்டு தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தளம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு தொழிலாளர்களுக்கு ஆட்டு கறி குழம்பு பரிமாறப்பட்டது.அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமணய்யா (வயது 65) என்பவரை சாப்பிட அழைத்தனர்.
அப்போது லட்சுமணய்யா மது போதையில் இருந்தார். அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார். அது அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமணய்யா மூச்சுக் குழாயில் ஆட்டுக்கறி துண்டு சிக்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ், பாரத ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் உடல்நல குறைவு காரணமாக இறந்தார். ஜூப்ளி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி,பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் கே.டி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின் போது வரம்புகளை மீறி ஒவ்வொருவரும் விமர்சனம் செய்து பேசி வருவதால் ஜூப்லி ஹில்ஸ் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
- வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார்.
- வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார்.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.
மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்பை கண்டு பயப்படும் மிர்மிகோ போபியா என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி உள்ளவர்கள் எறும்புகளை கண்டால் பயந்து அலறி நடுங்குவார்கள். மனிஷா இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை ஸ்ரீகாந்த் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார். எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்தார். அதில் ஐ எம் சாரி ஸ்ரீ. என்னை மன்னித்துவிடு. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன். மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே என எழுதினார்.
பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
- தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.
நல்ல சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் என்று தெலுங்கானா பாஜக எம்பி விஸ்வேஷ்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைக்கும். நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்ததற்கு நல்ல சாலை கட்டமைப்பும் ஒரு காரணம்.
மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதால் விபத்துகள் குறைகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






