search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Safety"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
    • பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.

    பெங்களூரு:

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ஓலா, ஊபர், ரேபிடோ என்ற பெயரில் பைக் டாக்சிகள் கர்நாடகாவில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக குற்றம் சாட்டினர்.

    பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு போக்குவரத்து துறை கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்ட உத்தரவில் பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    கர்நாடக அரசின் இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், பெண்கள் வரவேற்றுள்ளனர்.

    • உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற் றினை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குடும்பத் திற்கு ஆதார மாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மகளிரின் நலனை கருத்களை பெருமைப்ப டுத்திடும் பொருட்டு, மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்ட மான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங் கும் உரி மைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தி ன் மூலம், தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்ற னர். விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில், 4,97,708 விண்ணப்பிங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தகுத தகுதி வாய்ந்த 3,25,514 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தில் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட மாக 3,25.514 மகளிர்களுக் கும், 2ம் கட்ட மாக 22,096 மகளிர் என மொத்தம் 3.47,610 மகளிர்களுக்கு. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வங் கிக்கணக்கில் செலுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தனது செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    • திருமங்கலத்தில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.
    • பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கண்மாயில் தீயணைப்பு, வருவாய் துறையினர் இணைந்து பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவமழை கால பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.

    திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து ராமன் தலைமையில் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர் களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்து காட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு முதலு தவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கியாஸ் அடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    • ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் சார்பில் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரன் தலைமை தாங்கி பேசினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் சார்பில் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரன் தலைமை தாங்கி பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மோனிகா வரவேற்றார்.

    செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்லக்கூடாது. 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை ஓட்டி சென்றால் அவர்களது பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும். குடிபோதையில் வாகனத்தை ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்லக்கூடாது. ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்லக்கூடாது போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.
    • மின்கம்பங்களுக்கும் இடையே தூரத்தை குறைப்பதற்காக 28 மின் கம்பங்கள் நடப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற் குட்பட்ட தலையணை மலையடிவாரத்தில் மின் விபத்துகளில் இருந்து வனவிலங்குகளை பாது காக்கும் பொருட்டு, வனத்துறையினரும், மின்வாரிய ஊழியர்களும் இணைந்து மின் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக தலையணை வனப்பகுதி மற்றும் மலையடிவாரத்தில் தாழ்வழுத்த மின்பாதையில் பூமிக்கும் மின்பாதைக்கும் இடையில் உள்ள உயரத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே உள்ள 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.

    இது போல 2 மின்கம்பங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை குறைப்பதற்கும் மொத்தம் 28 மின் கம்பங்கள் நடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது. 

    • அரசாங்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
    • பரந்து விரிந்த இடத்தை நன்றாக மேம்படுத்தி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் 32 குழந்தைகள் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதில் 3 அரசு இல்லங்களும், 15 அரசு மானியம் பெறும் குழந்தைகள் இல்லங்களும் மற்றும் 14 தனியார் குழந்தைகள் இல்லங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த இல்லங்களில் ஆண் குழந்தைகள் 721 மற்றும் பெண் குழந்தைகள் 1038 என மொத்தம் 1759 மாணவ, மாணவிகள் உள்ளனர்.

    அரசாங்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் இக்குழந்தைகள் இல்லங்கள் ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று மதியம் புதுடெல்லி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை உறுப்பினர் டாக்டர் ஆனந்த் , தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர்

    தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்தனர்.

    கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 5 சிறுவர்களிடம் கலந்துரையாடினர் . மேலும், பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.

    பின்னர் தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது :-

    ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதில் கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஆய்வு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் கோவை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்து விட்டோம்.

    இன்று தஞ்சாவூரில் ஆய்வு செய்தோம்.

    தஞ்சாவூரில் குழந்தைகள் மற்றும் கூர்நோக்கு இல்லத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்.

    பரந்து விரிந்த இடத்தை நன்றாக மேம்படுத்தி வருகிறார். அவருக்கு முதலில் எனது பாராட்டுக்கள்.

    நாங்கள் டெல்லியில் இருந்தவாறே மாசி என்ற செயலி மூலம் கூர்நோக்கு இல்லங்களில் மாணவர்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்கிறோம்.

    இந்த செயலில் அந்தந்த கூர்நோக்கு இல்ல நிர்வாகிகள் தினமும் நடக்கும் விவரங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

    தஞ்சாவூரில் விரைவில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற விசாரணை தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் , தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல், கூர்நோக்கு இல்ல பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் நன்னடத்தை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • டி.பி. சோலார் நிறுவன கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டு தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் டி.பி. சோலார் நிறுவன (தி டாடா பவர் நிறுவனம்) கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.

    இதில் டி.பி. சோலார் நிறுவன கட்டுமான பணியிடத்தின் 100 தொழிலாளர்கள், நெல்லை தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), டாடா புரொ ஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு நிபுணர் கலந்து கொண்டனர். இதில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலா ளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழி லாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவரின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இத்தகவலை நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சஜின் தெரிவித்தார்.

    • குழந்தைகளுக்கான தேவைகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.

    விருதுநகர்

    குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான குற்றங்களை தடுத்து குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவதற்கும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசால் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் மூலம் நாடு முழுவதும் 727 மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகள், குறைகளுக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஆணையத்தின் முதல் கட்ட அமர்வு விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் குழந்தைகள் உரிமை மீறல் பிரச்சினை மற்றும் குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த அமர்வில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, கல்வி, மருத்துவம், மன மற்றும் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள், குழந்தை தொழிலாளர், குழந்தைத்திருமணம் மற்றும் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தைகளின் இதர உரிமை மீறல் தொடர்பான பிரச்சி னைகள், குறைபாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்த மனுவினை பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி குழந்தைகள், குழந்தை கள் இல்லங்கள், விடுதிக ளில் தங்கியுள்ள குழந்தை கள், பெற்றோர், பாதுகாவ லர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெறும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.

    இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி தெரி வித்துள்ளார்.

    • தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
    • சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

    தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • பல்வேறு மாவட்ட ங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவல கம் பகுதியில் மட்டும் 2.8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் இடி மின்னலுடன் மழைபெய்த காரணத்தினால் மின்தடை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நெல்லிக்குப்பம் பகுதியில் மின்சார சப்ளை வழங்கினர். மேலும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நடவடி க்கையும் மேற்கொண்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்த ப்பட்டு வருகின்றது இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு:- கலெக்டர் அலுவலகம்- 28.0, எஸ்.ஆர்.சி குடிதாங்கி -20.0, கடலூர்- 16.4, வானமாதேவி-13.0, கீழ்செருவாய்-13.0, வடக்குத்து-8.0, லால்பேட்டை - 4.0, பண்ருட்டி - 2.0, மொத்த மழை - 104.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும்.
    • நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், சார்- ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி அமைத்திட வேண்டும்.வருவாய்த்துறையினர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் நியமித்து ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் , கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்பு துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும் நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும் உயிர்சேதம் கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், நீர்வளத்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 28-ந் தேதி கொடி ஏற்றத்திற்காக கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
    • மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

    கடலூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும். வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க பெருவிழா கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வருகை புரிந்து மாதாவை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயபக்தியுடன் பாதயாத்திரை சென்று வருவதும், பலர் அன்னை மரியாவின் புகைப்படங்கள் அடங்கிய சிறிய தேரை இழுத்து செல்வதையும் பலர் வாகனங்களில் செல்வதையும் காண முடிந்தது. மேலும் கடலூர் ஜி.ஆர்.கே. குழுமம் சார்பில் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர் துரைராஜ் அறிவுறுத்தலின் பேரில் பாதயாத்திரைக்கு செல்லக்கூடிய மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தற்போது நாளுக்கு நாள் பாதயாத்திரை செல்லக்கூடிய மக்கள் அதிகரித்து வருவதால் போலீசார் பாதுகாப்பாக செல்வதற்கு கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×