search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை
    X

    தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை

    • திருமங்கலத்தில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.
    • பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கண்மாயில் தீயணைப்பு, வருவாய் துறையினர் இணைந்து பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவமழை கால பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.

    திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து ராமன் தலைமையில் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர் களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்து காட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு முதலு தவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கியாஸ் அடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    Next Story
    ×