search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "country"

    • கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி.
    • கெஜ்ரிவால் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-

    நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல. ஒன்றுபடுவோம் அல்லது நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார்.

    டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.

    அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை. அவர் அமலாக்கத்துறை காவலில் இருக்கிறார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பார். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கருப்பு-சிவப்பு இருந்தால்தான் நாடு சுபிட்சமாக இருக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • நாம் சுயமரியாதையோடு இருக்கிறோம் என்றால் அதற்கு திராவிடம்தான் காரணம் என்றார்.

    அருப்புக்கோட்டை

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசும்போது, சாதிப்பாகுபாடு இல்லாமல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என அனைவரையும் சமமாக வாழ வழிகாட்டியவர் தான் தந்தை பெரியார். கருப்பு, சிவப்பு இருந்தால்தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும். நாம் சுயமரியாதையோடு இருக்கிறோம் என்றால் அதற்கு திராவிடம்தான் காரணம் என்றார்.

    கூட்டத்தில் பொரு ளாதார நிபுணரும், மாநில திட்டக்குழு துணைத்தலைவருமான ஜெயரஞ்சன், திராவிட இயக்க செயற்பாட்டாளரும், திரைப்பட எழுத்தாளருமான டான் அசோக் , திராவிட இயக்க வரலாற்றையும் அரசின் சாதனைகளையும் எடுத்துக்கூறி சிறப்புரை யாற்றினர்.

    மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு வரவேற்று பேசினார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தாயகம் கவி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணை அமைப்பாளர் பாலச்சந்தர், சூரியநாராயணன், ரவி கண்ணன், ஆனந்த், நகர இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமானுஜம், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கமணி ஆகியோர் நன்றி கூறினர். கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைனில் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. #Diesel #indianoilcompany
    சென்னை:

    பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளையடுத்து ஆன்லைனில் டீசல் விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த வகையில் நாட்டிலேயே முதன் முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில் இன்று மாலை ஆன்லைனில் டீசல் விற்பனை தொடங்கியது. 

    முதல்கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதற்கு எந்தவித கூடுதல் கட்டணம், வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. REPOSE APP என்ற செயலி மூலம் டீசலை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Diesel #indianoilcompany
    இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. #Israel #NationState
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. இந்த நாட்டின் முழுமையான தலைநகராக ஜெருசலேம் விளங்கும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.



    இந்த மசோதா நிறைவேறி இருப்பதற்கு இஸ்ரேலிய அரபு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ புகழ்ந்து உள்ளார். இது சிறப்புவாய்ந்த தருணம் என அவர் கூறி உள்ளார்.

    8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. 62 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 55 பேர் எதிராக ஓட்டு போட்டனர்.

    இஸ்ரேல் மக்கள் தொகையில் (90 லட்சம்) 20 சதவீதத்தினர் இஸ்ரேலிய அரபு மக்கள் ஆவர். இப்போது இஸ்ரேல், யூத நாடு ஆகி விட்டதால் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.

    சட்டப்படி அவர்கள் சம உரிமை பெற்றிருந்தாலும்கூட இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக குறை கூறுகின்றனர்.

    அகமது டிபி என்ற அரபு எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “இந்த மசோதா நிறைவேறி இருப்பது, ஜனநாயகம் செத்து விட்டதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.  #Israel #NationState #Tamilnews 
    நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோருடன் டெல்லியில் கலந்துரையாடல் நடத்தினார். டேராடூன், கவுகாத்தி மற்றும் ராய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளம் தொழில் அதிபர்கள் இதில் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இன்றைய பெரும் நிறுவனங்கள் அனைத்தும் சிறிய புள்ளியில் தொடங்கியவை தான். எனவே இந்தியர்கள் புதுமையை நோக்கி நடைபோடுவதை தொடர வேண்டும். இல்லாவிட்டால் நாம் தேங்கி விடுவோம்.

    ஒரு காலத்தில் ‘ஸ்டார்ட் அப்’ என்றால் அது டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிற துறைகளிலும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை நாம் பார்க்க முடிகிறது.

    இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய நகரங்களுடன் நின்று விடுவது இல்லை. மாறாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் கூட துடிப்பான ஸ்டார்ட் அப் மையங்களாக உருவாகி வருகின்றன. அந்தவகையில் உலகளாவிய ஸ்டார்ட் அப் சூழியலை பெற்று இந்தியா புகழ்பெற்று விளங்குகிறது.

    தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக இளையோர் சந்திக்கும் நிதி பற்றாக்குறை பிரச்சினையை அரசும் புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் அதிகமான இளைஞர்கள் இந்த துறையில் சாதிப்பதற்காக ரூ.10 ஆயிரம் கோடிக்கான நிதியை அரசு உருவாக்கி உள்ளது.

    இந்திய இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பை உருவாக்குகின்றனர். அதன் பலனை அவர்கள் பெறுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அரசிடம் விற்க முடியும். அத்துடன் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகளையும் அரசு எளிமையாக்கி உள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்த 2,500 புதுப்பித்தல் ஆய்வகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகங்கள் இருப்பது போல, இந்த புதுப்பிக்கும் ஆய்வகங்களும் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

    நாங்கள் ஒரு மிகப்பெரிய விவசாய சவாலை உருவாக்கி உள்ளோம். இதில் பங்கேற்று நமது வேளாண் துறையை எப்படி மாற்றுவது? என்று சிந்திக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

    ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கு அத்தியாவசியமான சட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் குழு ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இப்படி நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
    சீனாவில் 1994-ம் ஆண்டு தவறவிட்ட தன் மகனை நாடு முழுவதும் தேடி அலைந்த தந்தை, 24 வருடங்களுக்கு பிறகு டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவைச் சேர்ந்த லி சன்ஜி என்பவர் 1994-ம் ஆண்டு தனது 3 வயது மகனை தவறவிட்டார். இதனையடுத்து தனது தொழிலை கைவிட்டுவிட்டு, நாடு முழுவதும் பயணித்த லி சன்ஜி, சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் காணவில்லை போஸ்டர்களை உபயோகித்தபடி, தன் மகனை தேடி அலைந்துள்ளார்.

    24 வருடங்களாக தனது முயற்சியில் தளராத அந்த தந்தை, தற்போது தனது 27 வயதான மகன் லி லேவை கண்டறிந்துள்ளார். இறுதியில் டி.என்.ஏ பரிசோதனை மூலம் லி சன்ஜியின் மகன் என உறுதியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பான விசாரணையில், 3 வயதில் லி லே தனியாக இருந்தபோது அவனை கண்ட தம்பதியினர் அவனது பெற்றோரை தேடி அலைந்ததாகவும், பெற்றோர் கிடைக்காததால், லி லேவை அவர்களுடன் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 வயதில் தவறவிட்ட தனது மகனை, தொழில் உட்பட அனைத்தையும் இழந்துவிட்டு, தேடி அலைந்து 24 வருடங்களுக்கு பிறகு கண்டறிந்த தந்தையின் பாசம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
    இந்தியாவில் சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் மின்சாரமே பார்க்காத 4 கோடி வீடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார வசதி அளிக்கப்படும் என ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #modispeech #modivisitJ&K #electricityforall
    ஸ்ரீநகர்:

    ஜோசிலா சுரங்கப்பாதையின் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி, ‘இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 70 ஆண்டுகளில் மின்வசதியே பெறாத கிராமங்கள் இன்றும் உள்ளன. 2014-ம் ஆண்டு நாங்கள் அரசு அமைக்கும்போது அனைவருக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தோம். அதன்படி மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு மின்வசதி அமைத்துக் கொடுத்துள்ளோம்.

    இருப்பினும் இன்னமும் சுமார் 4 கோடி இல்லங்களில் மின்சார வசதி இல்லை. அடுத்த ஒரு வருடத்துக்குள் அந்த 4 கோடி வீடுகளுக்கும் மின்வசதி அமைத்துக் கொடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரிலும் 70 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாத 19 கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்.

    சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு லடாக் பகுதி மிகச்சிறந்த இடம் ஆகும். இந்த இடத்தில் அதிகபட்சமான சூரிய மின்சக்தியை நம்மால் தயாரிக்க முடியும், அதற்கான உழைப்பை துவங்குவோம்’

    இவ்வாறு அவர் பேசினார். #modispeech #modivisitJ&K #electricityforall
    ×