search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவால் விரைவில் விடுதலையாகி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார்- பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
    X

    கெஜ்ரிவால் விரைவில் விடுதலையாகி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார்- பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

    • கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி.
    • கெஜ்ரிவால் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-

    நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல. ஒன்றுபடுவோம் அல்லது நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார்.

    டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.

    அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை. அவர் அமலாக்கத்துறை காவலில் இருக்கிறார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பார். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×