search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt order"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
    • பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.

    பெங்களூரு:

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ஓலா, ஊபர், ரேபிடோ என்ற பெயரில் பைக் டாக்சிகள் கர்நாடகாவில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக குற்றம் சாட்டினர்.

    பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு போக்குவரத்து துறை கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்ட உத்தரவில் பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    கர்நாடக அரசின் இந்த உத்தரவை ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், பெண்கள் வரவேற்றுள்ளனர்.

    • மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
    • 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.

    மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.

    இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

    • நெல்லை, மதுரை மாவட்டங்கள் உள்பட 6 துணை கலெக்டர்கள் இடமாற்றம்
    • சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி, சேலம் ஆவின் பொது மேலாளராக நியமனம்

    தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்:

    விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒருங்கிணைக்க மாவட்ட வருவாய் அதிகாரியாக திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை மெட்ரோ ரெயில் நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அதிகாரி சத்தியநாராயணன் சேலம் ஆவின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று 19 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

    மேலும், நெல்லை, மதுரை, சேலம், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6 துணை கலெக்டர்களை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. #PlasticBan #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பை, கப், பேப்பர், ஸ்டிரா, பிளாஸ்டிக் இலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



    இந்நிலையில், பிளாஸ்டிக் தடை ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் தடை விதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால் இக்கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PlasticBan #TN
    மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதையும் மீறி பள்ளிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். #chennairain
    சென்னை:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி இன்று உருவாகிறது. இது வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் நாளை அது புயலாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்திற்கு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. அன்று தமிழகத்தில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர், கடலூர், சேலம், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. நேற்று காலை பெய்ய தொடங்கிய மழை பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்தது. நேற்று இரவிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து கட்டியது.

    சிறிது நேரம் இடைவெளி விட்டு பலத்த மழை பெய்து வந்ததால் சாலையில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இன்று காலை கன மழை கொட்டியதால் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் 3 மாவட்ட கலெக்டர்கள் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தனர்.

    சென்னையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டார். இதே போல காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் அந்தந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

    இதையடுத்து தனியார் பள்ளிகள் எஸ்.எம்.எஸ். மூலம் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு இன்று விடுமுறை என தகவல் தெரிவித்தன.

    இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் இடைவிடாத மழையிலும் விடுமுறை அளிக்காமல் வகுப்புகள் நடத்துவதாக சென்னை மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பஸ், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு செல்வது பாதுகாப்பாக இருக்காது என கருதி இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    விடிய விடிய பெய்த மழையால் ஒரு சில பள்ளிகளில் மட்டுமின்றி சாலைகளிலும் மழை நீர் தேங்கி நிற்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அரசின் உத்தரவை மீறி பள்ளிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பில் குறைவு ஏற்பட்டு அசம்பாவிதம் உண்டானால் அதற்கு அந்த பள்ளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டதையடுத்து தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என்பதால் 3 நாட்கள் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுகின்றன.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், தாம்பரத்தில் கட்டுப்பாட்டு அறை செயல் பட்டு வருகிறது.

    மழை வெள்ளம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் கட்டுப்பாட்டு அறை 1077, 044-27237107, 27237207 தாம்பரம் கட்டுப்பாட்டு அறை 044-22410050.

    மேலும் வெள்ள பாதிப்புகளை புகைப்படத்துடன் 94450 51077, 94450 72077 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். #chennairain
    ×