search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Progress"

    • திட உணவை சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
    • உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்கு கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    முக்கியமாக, மருத்துவமனை பணிநேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவ மனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்து பழக்கிவிடுவது நல்லது.

     கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    'குழந்தையை பெற்றெடுக்க சக்தி வேண்டும் அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ' என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பி இருக்காது பிரசவத்துக்கும் தடை ஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

    • உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற் றினை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குடும்பத் திற்கு ஆதார மாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மகளிரின் நலனை கருத்களை பெருமைப்ப டுத்திடும் பொருட்டு, மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்ட மான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங் கும் உரி மைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தி ன் மூலம், தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்ற னர். விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில், 4,97,708 விண்ணப்பிங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தகுத தகுதி வாய்ந்த 3,25,514 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தில் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட மாக 3,25.514 மகளிர்களுக் கும், 2ம் கட்ட மாக 22,096 மகளிர் என மொத்தம் 3.47,610 மகளிர்களுக்கு. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வங் கிக்கணக்கில் செலுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தனது செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    • ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகளிர் சுய உதவி குழு வங்கி கடன் இணைப்பு மற்றும் பொருளாதார உதவித் தொகை, ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இ- சேவை மையம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி உட்கட்டமைப்பு. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம். சிறப்பு திட்ட செயலாக்கம் சார்பில் நான் முதல்வன் திட்டம், மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திட்டம் பணிகள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த திட்டங்களில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர்கள் டாக்டர் அஞ்சுகம்பூபதி, தமிழழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
    • வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை புறும்போக்கு, பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரது தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பலவேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திட்ட பணிகள் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
    • பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து துறைப் பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடா் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான விஜயகுமாா் கலந்து கொண்டு பேசியதாவது:-

    விளிம்பு நிலை மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகக் மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மின்சார சுடுகாடு பயன்பாடு குறித்து செயல் திட்டம் தயாா் செய்து, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பி வைக்க பேரூராட்சி உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 485 பணிகளும் அக்டோபா் மாத இறுதிக்குள் நிா்வாக அனுமதி வழங்கப்படும்.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாநகராட்சியில் 20 பணிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 5 பணிகளும், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒரு பணியும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 2 பணிகளும், பேரூராட்சிகளில் 17 பணிகளும் நவம்பா் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.

    நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் தொடா்புடைய அலுவலா்கள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையா்கள் சரவணகுமாா், செந்தில்முருகன் (கும்பகோணம்), கோட்டாட்சியா்கள் பிரபாகா் (பட்டுக்கோட்டை), லதா (கும்பகோணம்), ரஞ்சித் (தஞ்சாவூா்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்‌.

    ×